You will make it....

You will make it....

Saturday, March 21, 2009

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 8

சென்ற பதிவில் Bonus Share மற்றும் அது எவ்வாறு EPS-ஐ பாதிக்கிறது என்பது பற்றி பார்த்தோம். இனி Share Split என்றால் என்ன, EPS-ல் அதனுடைய தாக்கம் என்ன என்பதை இந்த பதிவில் பார்போம்.

Bonus Share என்பது ஏற்கனவே நிறுவனம் சம்பாதித்து வைத்திருக்கும் லாபத்தை பங்குகளாக முதலீட்டளர்களுக்கு தருவது, இதற்கு பணம் எதுவும் வாங்குவது இல்லை என்பதால் Bonus Share என்கிறோம். ஆனால் Bonus Share என்பது நடைமுறையை வைத்து பார்த்தல் அது இலவசமல்ல என்பதையும், குறுகிய கால முதலீட்டளர்களுக்கு லாபமில்லை என்பதையும் பார்த்தோம். Share Split என்பதும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான், ஆனால் ஒரு சில வித்தியாசங்கள் இருக்கிறது.

ஒரு நிறுவனத்தின் பங்குகளை குறைந்த முகமதிப்பிற்கு பிரிப்பதைத்தான் Share Split என்கிறோம். உதாரணமாக ஒரு நிறுவன பங்கின் முகமதிப்பு Rs.10/- ஆக இருக்கிறது என்றால், அந்த முகமதிப்பை Re.1/- ஆக குறைத்து ஏற்கனவே ஒரு பங்கு வைத்திருக்கும் பங்குதாரருக்கு இன்னும் 9 பங்குகளை நிறுவனம் கொடுக்கும் இதைத்தான் Share Split என்கிறோம். ஆக முன்பு பத்து ரூபாய் முகமதிப்பில் ஒரு பங்கு வைத்திருந்த ஒரு பங்குதாரர் இப்போது ஒரு ரூபாய் முகமதிப்பில் 10 பங்குகளை வைத்திருப்பார். பங்குதாரரை பொறுத்த வரை, முன்பு ஒரு பங்கு வைத்திருந்தவர் இப்போது பத்து பங்கு வைத்திருப்பார். ஆக, நமக்கு இது லாபம் தானே என்று எண்ணத்தோன்றும் - பணமே கொடுக்காமல் 9 பங்குகள் இலவசமாக கிடைத்தல் அது லாபம் என்று தான் எண்ணத்தோன்றும். ஆனால் இது லாபமுமில்லை, நஷ்டமுமில்லை. ஏனென்றால் ஏற்கனவே இருப்பதை பிரித்திருக்கிறார்கள் அவ்வளவுதான். சரி நிறுவனம் பிரித்திருக்கிறது, சந்தையில் பங்கின் விலையில் ஏதாவது மாற்றம் வருமா?

சந்தையிலும் பங்கின் விலை Split விகிதத்தின் படி குறைந்து விடும். உதாரணமாக சந்தையில் Rs.150/- விலையில் இருக்கும் ஒரு பங்கு, ஒன்றுக்கு பத்து என்ற விகிதத்தில் Split ஆகிறது என்றால், ஒரு பங்கு பத்தாக பிரிகிறதல்லவா? அதைப்போல் ஒரு பங்கின் விலையும் Rs.15/- ஆகிவிடும்.

Texmaco Ltd. என்னும் நிறுவனத்தின் பங்குகள் பத்து ருபாய் முகமதிப்பில் இருந்து ஒரு ரூபாய் முகமதிப்புக்கு குறைக்கப்பட்டது. 31-12-2008 அன்று Rs.737.10 ஆக இருந்த பங்கு, அடுத்தநாள் அதாவது Split ஆனதும் காலை சந்தையில் Rs.75/- என்ற விலையில் வர்த்தகம் ஆக ஆரம்பித்தது. அதாவது Rs.737.10 என்ற விலையில் விற்ற பங்கு, பத்தாக பிரிக்கப்படும் போது, அதன் விலையை பத்தால் வகுத்ததால் Rs.73.71 ஆகிறது. அடுத்த நாள் காலை கொஞ்சம் விலை கூடி Rs.75/- என்ற விலையில் வர்த்தகம் நடந்தது.

சரி இப்படி எந்த லாபமும் இல்லை என்றால் ஏன் Share Split செய்யப்படுகிறது? ஒரு பங்கின் விலை அதிகமாக இருந்தால் சிறு முதலீட்டாளர்கள் அந்த பங்கை வர்த்தகம் செய்வது எளிதல்ல என்பதால், Share Split செய்யப்படுகிறது. Bonus Share தருவதற்கும் இது ஒரு காரணம்.

சில நிறுவனங்கள் ஒரே நேரத்தில் Bonus Share மற்றும் Share Split இரண்டையும் கொடுக்கும். உதாரணமாக 2007 October இல் Jai Corporation Ltd. என்னும் நிறுவனம் ஒரு பங்கை பத்து ருபாய் முகமதிப்பில் இருந்து ஒரு ரூபாய் முகமதிப்பிற்கு குறைத்தது. மேலும் 1:1 என்ற விகிதத்தில் Bonus Share கொடுத்தது. ஆக இந்த நிறுவனத்தில் ஒருவர் வாங்கியிருந்த ஒரு பங்கு 20 பங்குகளாக ஆகி இருக்கும் (1 பங்கு Split மூலமாக 10 ஆகும், அப்படி ஆன 10 பங்குக்கும் மேலும் 10 பங்குகள் Bonus ஆக கிடைக்கும்). Bonus மற்றும் Split ஆவதற்கு முந்தைய நாள் Jai Corporation Ltd.-இன் ஒரு பங்கின் விலை Rs.15,310/- ஆக இருந்தது. ஒரு பங்கு 20 பங்கு ஆகிறது என்பதால் விலையும் அதே அளவு குறையும் என்று பார்த்தோம். அதன்படி ஒரு பங்கின் விலை Rs.765.50 ஆக குறைந்திருக்கும். அடுத்த நாள் பங்கின் விலை கொஞ்சம் கூடி Rs.803.70/- ஆக இருந்தது. யோசித்து பாருங்கள், ஒரு சிறு முதலீட்டாளர் Rs.15,310/- கொடுத்து ஒரு பங்கு வாங்க முடியுமா? அப்படி அவரிடம் இருக்கும் பணத்தை எல்லாம் ஒரே பங்கில் போட்டு ஒரு வேளை அந்த பங்கின் விலை குறைந்தால் அவருடைய முதலீடு எல்லாம் அடிபட்டுப்போகும் ஒரு பெரிய risk இருகிறதே.. (Don't put all your eggs in single basket என்ற பழமொழியை நினைவு படுத்திக்கொள்ளுங்கள் - முதலீட்டின் அடிப்படி இது. குறிப்பாக பங்கு முதலீட்டுக்கு இதை கண்டிப்பாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்) அதனால் Bonus மற்றும் Split ஆவதால் சிறு முதலீட்டாளர்கள் இப்படி பட்ட நிறுவன பங்குகளை வர்த்தகம் செய்ய முடியும். அப்படி நிறைய பேர் முதலீடு செய்வதால் பங்கின் விலை கூடும் வாய்ப்பு உண்டு. வாய்ப்பு உண்டு என்றுதான் சொல்கிறேனே தவிர, கண்டிப்பாக கூடும் உடனே அப்படி பங்குகளை வாங்குங்கள் என்று சொல்லவில்லை. ஒரு பங்கை வாங்கவேண்டும் என்று முடிவு செய்யும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

Share Split ஒரு பங்கின் EPS-ஐ எவ்வாறு பாதிக்கறது என்று பார்போம். ஒரு நிறுவனம் 1,000 பங்குகள் வெளியிட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதனுடைய நிகர லாபம் Rs.20,000/- என்றால் ஒரு பங்கு சம்பாதித்த பணம் அதாவது EPS Rs.20/-. இதே நிறுவனம் பங்கின் முகமதிப்பை பத்து ரூபாயில் இருந்து ஒரு ரூபாயாக குறைத்தால் நிறுவனத்தின் மொத்த பங்குகள் 10,000 ஆகும் (1000 x 10). இப்போது நிகர லாபம் Rs.20,000/- என்பது 10,000 பங்குகளுக்கும் பிரித்து கொடுக்கப்பட வேண்டும் - EPS Rs.2/- ஆகும். இருபது ரூபாயாக இருந்த EPS, Share Split-க்கு அப்புறம் இரண்டு ரூபாயாக குறைகிறது. ஆக லாப நஷ்ட கணக்கை பார்க்கும் போது, சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு EPS குறைந்திருக்கிறது என்றதும், இந்த ஆண்டு நிறுவனத்தின் செயல்பாடு சரி இல்லை என்று முடிவு செய்து விடக்கூடாது. Bonus Share கொடுக்கப்பட்டிருக்கிறதா, Share Split ஆகி இருக்கிறதா என்பதை எல்லாம் கவனித்து முடிவு செய்ய வேண்டும்.

இந்த பதிவில் சில நிறுவனங்களை குறிபிட்டிருக்கிறேன். இவை எல்லாம் உதாரணத்திற்காக மட்டுமே சொல்லப்பட்டது. மற்றபடி இந்த பங்குகளை வாங்கவோ விற்கவோ பரிந்துரை செய்யவில்லை.

அடுத்து வரும் பதிவுகளில், ஒரு பங்கை வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கும் முன் EPS-ஐ எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்போம். அதற்கு முன் உங்களுடைய பின்னூட்டத்தை எழுதுங்கள்.

Tuesday, March 17, 2009

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 7

இதுவரை லாப நஷ்ட கணக்கில் கவனிக்க வேண்டிய விஷயங்களை பார்த்தோம். குறிப்பாக, Other Income (இதர வருமானம்), Extra ordinary Income, Operating profit, Interest (வட்டி), Net profit (நிகர லாபம்) மற்றும் EPS என்று சொல்லப்படும் ஒரு பங்கு குறிப்பிட்ட காலத்தில் எத்தனை ரூபாய் சம்பாதித்திருக்கிறது போன்றவற்றை கவனிக்க வேண்டும் என்று பார்த்தோம். இதில் EPS பற்றி இன்னும் விரிவாக பார்க்க வேண்டும்.

EPS பற்றி விரிவாக பார்க்கும் முன், நிதிநிலை அறிக்கை (Balance Sheet) பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஒரு நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை என்பது குறிப்பிட்ட நாளில் அந்த நிறுவனத்திற்கு இருக்கும் சொத்துக்கள், கடன் மற்றும் மூலதனம் பற்றிய விபரங்களை காட்டும். அதனால் தான் ஒவ்வொரு வருடமும் அந்த நிறுவனத்தின் நிதியாண்டின் கடைசி நாள் தேதியிட்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும். வருடத்திற்கு ஒருமுறை வெளியிடுவது போல், 3 மாதத்திற்கு ஒருமுறையும் வெளியிடப்படும் (Quarterly Result). ஒரு நிதிநிலை அறிக்கை என்பது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மாதிரி அமைப்பில் இருக்கும்.

A. Sources Of Funds
A 1. Equity Share Capital
A 2. Reserves & Surplus
A 3. Networth
A 4. Secured Loans
A 5. Unsecured Loans
A 6. Total Debt
A 7. Total Liabilities


B. Application Of Funds
B 1. Gross Block
B 2. Less: Accum. Depreciation
B 3. Net Block
B 4. Capital Work in Progress
B 5. Investments
B 6. Inventories
B 7. Sundry Debtors
B 8. Cash and Bank Balance
B 9. Total Current Assets
B 10. Loans and Advances
B 11. Fixed Deposits
B 12. Total CA, Loans & Advances
B 13. Current Liabilities
B 14. Provisions
B 15. Total CL & Provisions
B 16. Net Current Assets
B 17. Miscellaneous Expenses
B 18. Total Assets

C. Book Value (Rs)

இதில் நாம் முதலில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான, முதலீட்டாளர் அத்தியாவசியமாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்றால் அது A3-இல் இருக்கும் Networth என்பது. பங்கு மூலதனம் (Share Capital) மற்றும் Reserves & Surplus இரண்டையும் கூட்டினால் வருவதுதான் Networth. Share Capital என்பது பங்குகளை வெளியிட்டு அதன் மூலம் இந்த நிறுவனம் பெற்றிருக்கும் முதலீடு என்பது நம் அனைவருக்கும் தெரியும். Reserves & Surplus என்றால் என்ன? நிறுவனங்கள் ஈட்டிய லாபம் அனைத்தையுமே பங்குதாரர்களுக்கு பிரித்து கொடுதுவிடுவதில்லை. லாபத்தில் ஒரு பகுதியை சட்டபூர்வமான ஒதுக்கீடு (Statutory Reserve) என்று ஒதுக்கி வைக்கும். மேலும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன் படுத்த பொது ஒதுக்கீடு (General Reserve) என்று ஒரு தொகையை ஒதுக்கி வைக்கும். இந்த ஒதுக்கீடுகள் எல்லாம் போக மீதமுள்ள பணத்தில் ஒரு பகுதியை பங்குதாரர்களுக்கு Dividend என்று வழங்கும். Dividend கொடுத்து போக மீதி இருக்கம் லாபத்தை லாப நஷ்ட கணக்கு (Accumulated Income) என்ற பெயரில் வைத்திருக்கும். இப்படி செய்யப்பட ஒதுக்கீடுகள் (Reserves) மற்றும் மீதமுள்ள லாபம் (Accumulated Income) அனைத்துமே Reserves & Surplus என்ற தலைப்பில் நிதிநிலை அறிக்கையில் பொறுப்புகள் இருக்கும் பகுதியில் காட்டப்படும். இவை அனைத்துமே Networth இல் சேர்க்கப்படும். புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதால் இந்த பதிவில் Reserves & Surplus என்பதை Accumulated Income ஆக உதாரணப்படுத்தி இருக்கிறோம். அதாவது Share Capital என்பது பங்குதாரர்கள் செலுத்திய பணம், Reserves & Surplus என்பது நிறுவனம் சம்பாதித்த லாபத்தில் மீதமிருக்கும் பணம். ஒரு நிறுவனத்தில் முதலாளி என்பவர் பங்குதாரர்தான், அதனால் பங்குதாரர் பங்குக்கு செலுத்திய பணம் மற்றும் அந்த பங்குகளை வைத்து நிறுவனம் சம்பாதித்த Reserves & Surplus என்பது அனைத்துமே பங்குதாரர்களுக்கு தான் சொந்தம்.

உதாரணமாக, ஒரு நிறுவனம் Rs.10/- முகமதிப்பில் 10,000 ௦௦௦பங்குகளை வெளியிட்டிருந்தால் அதனுடைய Share Capital Rs.1,00,000. /- இந்த நிறுவனம் முதலாண்டில் Rs.20,000 லாபமாக சம்பதிதிருக்கிறது என்றால் அதனுடைய EPS - அதாவது ஒரு பங்கின் சம்பாத்தியம் Rs.2/- (Net profit / Number of Equity Shares). இந்த நிறுவனம் 10% Dividend கொடுக்க முடிவு செய்திருக்கிறது (Dividend என்பது பங்கின் முகமதிப்பில் கணக்கிடப்படும்) Rs.10/- முகமதிப்புள்ள பங்குக்கு 10% என்றால் ஒரு ரூபாய் Dividend ஆக ஒவ்வொரு பங்குக்கும் கிடைக்கும். ஆக மொத்தமிருக்கும் 10,000 பங்குகளுக்கு ஒரு பங்குக்கு Re.1/- வீதம் Rs.10,000 Dividend ஆக கொடுக்கப்படும். நிறுவனத்தின் மொத்த லாபம் Rs.20,000 Dividend Rs.10,000 கொடுத்தது போக லாபத்தில் மீதம் Rs.10,000 இருக்கிறது. இது Reserves & Surplus இல் சேர்க்கப்படும். ஆக முதலாமாண்டு முடிவில் Dividend கொடுத்தது போக, நிறுவனத்தின் Networth என்பது Rs.1,10,000 ஆக இருக்கும். (Share Capital Rs.1,00,000/- மற்றும் Reserves & Surplus Rs.10,000 ஆக மொத்தம் Rs.1,10,000 Networth ஆக இருக்கிறது). ஆக ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்க பட்ட இந்த நிறுவனத்தின் மதிப்பு அதாவது Networth இன்று Rs.1,10,000 ஆகி இருக்கிறது. நிறுவனத்தின் Networth ஐ அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளின் எண்ணிக்கையை கொண்டு வகுத்தால் ஒரு பங்கின் மதிப்பு என்ன என்பது தெரிய வரும், இந்த மதிப்பைதான் Book Value என்கிறோம். இதனைத்தான் மேலே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி நிதிநிலை அறிக்கையில் கடைசியாக C-இல் குறிப்பிட்டிருக்கிறோம். அதாவது ஒரு பங்கின் மதிப்பு (Book Value) Rs.11 ஆக இருக்கிறது (1,10,000/10,000). ஒருவேளை இந்த நிறுவனம் இப்போது மூடப்பட்டால் அல்லது இந்த நிறுவனம் இனி நாம் தொழில் செய்யப்போவதில்லை அதனால் நிறுவனத்தை மூடிவிடுவோம் என்ற ஒரு முடிவு எடுத்தால், ஒவ்வொரு பங்குக்கும் Rs.11/- திருப்பி கொடுக்கும். அதாவது பங்கின் Book Value என்னவோ அதுதான் அந்த பங்கின் உண்மையான மதிப்பு அலல்து அகமதிப்பு (Intrinsic Value of a Share).

இந்த Book Value தான் பங்கின் சந்தை விலையா அல்லது இந்த Book Value-விற்கு தான் சந்தையில் பங்கு விற்கப்படுமா என்ற ஒரு கேள்வி வரலாம். இல்லை. சந்தை விலை (Current Markeet Price - CMP) என்பது எதிர்காலத்தில் இந்த நிறுவனம் எவ்வளவு வளரும் என்ற கணிப்பு, மற்றும் பொருளாதார நிலை, உலகசந்தை, அந்த பங்குக்கு சந்தையில் இருக்கும் Demand மற்றும் supply போன்ற பல விஷயங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் Book Value என்பது இந்த நிறுவனத்தின் கடந்த காலத்தை கணக்கில் வைத்து நிர்ணயிக்கப்படுவது. Book Value என்பது ஏற்கனவே அடையப்பட்ட மதிப்பு, சந்தை விலை என்பது எதிர்காலத்தை மனதில் கொண்டு எதிர்பார்ப்பில் நிர்ணயிக்கப்படும் விலை. (இந்த Book Value விஷயத்தில் சத்யம் கம்ப்யூட்டர் விதிவிலக்கு, ஏனென்றால் அதனுடைய கணக்கியல் எவ்வளவு தூரம் சரி ஒரு இன்றுவரை ஒரு தெளிவில்லாத நிலை இருக்கிறது).

சரி Networth மற்றும் Book Value பற்றி தெரிந்துகொண்டோம். இனி Bonus Share விஷயத்துக்கு வருவோம். ஒரு நிறுவனம் Bonus Share எப்படி தருகிறது? நிறுவனத்தின் லாபத்தில் Dividend கொடுத்து போக மீதி இருக்கும் லாபத்தை Reserves & Surplus இல் வைத்திருக்கும் என்று ஏற்கனவே பார்த்தோம். அந்த Reserves & Surplus இல் இருந்துதான் Bonus Share கொடுக்கப்படும். நாம் ஏற்கனவே எடுத்துக்கொண்ட உதாரணத்தின் படி Rs.10/- முகமதிப்பில் 10,000 ௦௦௦பங்குகளை வெளியிட்டிருக்கும், Share Capital Rs.1,00,000/- ஆக இருக்கும் நிறுவனம் 5 ஆண்டுகள் வெற்றிகரமாக தொழில் செய்து Reserves & Surplus இல் Rs.2,00,000/- வைத்திருக்கிறது என்றால் அந்த நிறுவனத்தின் Networth Rs.3,00,000/- ஆக இருக்கும். ஒரு பங்கின் Book Value Rs.30/- ஆக இருக்கிறது. Reserves & Surplus இல் Rs.2,00,000/- இருப்பதால், பங்குதாரர்களுக்கு Dividend கொடுப்பதற்கு பதிலாக அதிலிருந்து Bonus Share கொடுக்கலாம் என்று நிறுவனம் முடிவு செய்து, 1:1 என்ற விகிதத்தில் Bonus Share கொடுக்கிறது என்று வைத்துக்கொண்டால் ஏற்கனவே ஒரு பங்கு வைத்திருக்கும் பங்குதாரருக்கு ஒரு பங்கு இலவசமாக கிடைக்கும். பங்குதாரரை பொறுத்த வரை பணம் கொடுக்காமல் ஒரு பங்கு இலவசமாக கிடைக்கிறது. ஆனால் அது உண்மையிலேயே இலவசமா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால், Bonus Share கொடுத்த பிறகு நிறுவனத்தின் Networth மற்றும் Book Value எப்படி இருக்கிறது என்று பார்போம்.

Rs.10/- முகமதிப்பில் 20000 Share (நிறுவனம் வெளியிட்ட பங்குகள் 10000 மற்றும் bonus Share ஆக கொடுத்த பங்குகள் 10000 ஆக மொத்தம் 20000 பங்குகள்) என்பதால் Share Capital Rs.2,00,000/-. Reserves & Surplus Rs.2,00,000/- இருந்தது இதில் Rs.1,00,000/- bonus Share ஆக கொடுக்கப்படிருக்கிறது என்பதால் bonus Share கொடுத்த பிறகு Reserves & Surplus 1,00,000/- ஆக இருக்கும். ஆக இரண்டையும் கூட்டினால் Networth Rs.3,00,000/- ஆக இருக்கிறது. Networth இல் மாற்றமில்லை. ஆனால் பங்கின் Book Value என்ன? Rs.3,00,000/20000 பங்குகள் என்பதால் Book Value Rs.15/- ஆக இருக்கிறது. ஏற்கனவே Rs.30/- Book Value இருந்த பங்கின் இப்போதைய Book Value Rs.15/- மட்டுமே. Bonus Share கொடுக்கும் முன் நிறுவனம் மூடப்பட்டிருந்தால், ஒரு பங்குக்கு Rs.30/- கிடைத்திருக்கும். ஆனால் Bonus Share கொடுத்த பிறகு நிறுவனம் மூடப்பட்டால் ஒரு பங்குக்கு Rs.15/- தான் கிடைக்கும் ஆனால் பங்குதாரர் அவர் வைத்திருந்த ஒரு பங்குக்கு ஒரு பங்கு இலவசமாக பெற்றதால் அவர் இரண்டு பங்கு வைத்திருக்கிறார் என்பதால் அவருக்கு ஒரு பங்குக்கு Rs.15/- வீதம் 2 பங்குக்கும் சேர்த்து Rs.30/- கிடைக்கும். ஆக பங்குதாரருக்கு Bonus Share கிடைத்ததால் எந்த லாபமும் இல்லை. சரி இப்படி கணக்கு பார்த்தால் லாபமில்லை, Bonus Share கிடைத்த பிறகு பங்கு சந்தையில் பங்கின் விலை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

Bonus Share கொடுக்கும் முன் இந்த நிறுவனத்தின் பங்குகள், சந்தையில் Rs.50/- ஆக விற்பனை ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். Bonus Share கிடைத்த அன்றே சந்தையில் பங்கின் விலை, போனசு Share விகிதத்திற்கு குறைந்து விடும். 1:1 Bonus என்பதால், Rs.50 ஆக இருந்த பங்கின் விலை Rs.25/- (Rs.50/2) ஆக குறைந்து விடும். ஏன் இப்படி குறைகிறது? ஏற்கனவே ஒரு பங்கின் Book Value Rs.30/- ஆக இருந்தது இப்போது பாதியாக குறைந்தது ஒரு காரணம். மேலும், Bonus Share கொடுப்பதற்கு முன் நிறுவனம் சம்பாதித்த நிகர லாபம் 10000 பங்குகளுக்கு மட்டுமே பிரிக்கப்படும், Bonus Share கொடுத்த பிறகு, அதே லாபம் 20000 பங்குகளுக்கு பிரிக்கப்படும். ஆக ஒரு பங்கின் வருமானம் (EPS) பாதியாக குறையும். இந்த காரணங்களால், bonus Share கொடுத்தும், சந்தையில் பங்கின் விலை உடனடியாக குறைகிறது. Bonus Share கிடைக்கும் முன் ஒரு பங்கை விற்று Rs.50/- கிடைக்குமென்றால் Bonus Share கிடைத்த பிறகு இரண்டு பங்கையும் விற்றால் தான் Rs.50/- கிடைக்கும். அதாவது Bonus Share கிடைத்ததால் எந்த லாபமும் இல்லை.

இப்படி எந்த லாபமும் இல்லை என்றால் எதற்கு அந்த Bonus Share?? ஆனால் ஒரு நிறுவனம் Bonus Share கொடுக்க போகிறது என்ற தகவல் வந்ததும் சந்தை முழுக்க அந்த நிறுவனம் பற்றி மிக பெரிதாக பேசிக்கொள்கிறார்களே ஏன்? எந்த லாபமும் இல்லாத ஒரு விஷயத்துக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று நினைக்கதோன்றும். Bonus Share கிடைப்பதால் குறுகிய கால முதலீட்டாளருக்கு எந்த லாபமும் இல்லை. ஆனால் நீண்ட கால முதலீட்டாளருக்கு கண்டிப்பாக லாபம் உண்டு. முதல் ஆதாயம் சந்தையில் பங்கின் விலை குறைவதால் அதிக முதலேட்டாளர்கள் நிறுவனத்தின் பங்கினை வர்த்தகம் செய்ய நிறைய வாய்ப்பு இருக்கிறது. அடுத்து Bonus கொடுக்கும் அளவு இந்த நிறுவனம் ஏற்கனவே லாபம் சம்பாதித்திருக்கிறது என்பது வெளி உலகுக்கு தெரிய வருவதால், அந்த நிறுவனத்தில் பங்கு வாங்கினால் எதிர்காலத்திலும் நிறுவனம் நல்ல லாபம் சம்பாதித்து அதனால் பங்கின் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் நிறைய முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்வார்கள். அப்படி அதிக முதலீடு செய்ய ஆர்வம் உண்டாவதால் இந்த நிறுவனத்தின் பங்குகளுக்கு Demand கூடி அதனால், பங்குகளின் விலை கூடும். உதாரணமாக, 3 ஆண்டுகளுக்கு முன் இன்போசிஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு Rs.5400 விலையில் இருக்கும் போது, ஒரு பங்கு வைத்திருப்பவருக்கு மூன்று பங்கு என்ற விகிதத்தில் Bonus Share கொடுத்தது. உடனே பங்கின் விலை Rs.1350 ஆக குறைந்தது. அதன்பின் பங்கின் விலை சுமார் Rs.2500 வரை கூடியது. அதாவது ஒரு பங்கு வைத்து மூன்று பங்கு Bonus ஆக பெற்ற ஒரு பங்குதாரர் தான் வைத்திருக்கும் 4 பங்குகளையும் விற்றால் அவருக்கு கிடைத்த பணம் Rs.10000. ஆக Bonus Share என்பது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நிச்சயம் லாபம் தரும். மாறாக Bonus Share கிடைக்கப்போகிறது, நான் உடனே அதை விற்று லாபம் பார்த்து விடுவேன் என்று நினைத்து வாங்கினால் நிச்சயம் உடனடி லாபம் இல்லை. மேலும் Bonus Share என்பது கண்டிப்பாக இலவசமில்லை. ஏற்கனவே பங்குதாரர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய Reserves & Surplus இல் இருந்து கொடுக்கப்படுவதுதான் Bonus Share. மற்றபடி Bonus Share நிச்சயமாக இலவசமில்லை. மேலும் Bonus Share கொடுப்பதால் எதிர்காலத்தில் EPS குறையும்.

ஆக ஒரு நிறுவனத்தின் லாப நஷ்ட கணக்கில் EPS-ஐ ஒப்பிட்டு பார்க்கும் போது, சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு EPS குறைந்திருந்தால் உடனே இந்த நிறுவனம் சரி இல்லை என்று முடிவு செய்துவிடக்கூடாது. அவ்வாறு முடிவு செய்யும் முன், நிறுவனம் இந்த ஆண்டு புதிதாக பங்கு வெளியிட்டிருக்கிறதா, Bonus Share கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். இது மட்டுமில்லாமல் Share Split செய்யப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். Share Split என்றால் என்ன, அது எவ்வாறு EPS-ஐ பாதிக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்போம்.

Friday, March 13, 2009

பணவீக்கம் தொடர்ந்து குறைந்து 0% கீழே சென்றால் நல்லதா?

பணவீக்கம் என்றால் என்ன என்பது நமக்கு எல்லாம் தெரிந்த விஷயம். பொருட்களின் விலை கூடுவதை பணவீக்கம் என்கிறோம். அதாவது ஏற்கனவே Rs.100/- கொடுத்து வாங்கிய பொருளின் விலை இப்போது Rs.110/- ஆக இருந்தால் பணவீக்கம் 10% என்கிறோம். இதற்கு நேர் மாறாக ஏற்கனவே Rs.100/- கொடுத்து வாங்கிய பொருளின் விலை குறைந்து Rs.90/- ஆக இருந்தால் இதையே DEFLATION என்கிறோம் (பணவீக்கத்திற்கு நேர் எதிர்மறையானது). பணவீக்க்கம் என்பது நம்முடைய பணத்தின் மதிப்பை குறைக்கிறது என்றால் அதற்கு நேர்மறையான DEFLATION பணத்தின் மதிப்பை கூட்டுகிறது. அட இது நல்ல இருக்குதே என்று சொல்ல தோணலாம். அனால் இதனுடைய தாக்கம் என்ன என்று கொஞ்சம் ஆழ்ந்து கவனிதொமென்றால் இப்படி சொல்ல தோணாது.

அண்மைக்காலங்களில் 13% வரை இருந்த பணவீக்கம் இப்போது 2.43% ஆக குறைந்திருக்கிறது. இந்த பணவீக்கம் இப்படியே குறைந்து 1% ஆகி அதன் பின் 0% ஆகி அதன் பின் -1% என்று வரும் போது நாம் அதை DEFLATION என்கிறோம். (பணவீக்கத்திற்கு எதிர்மறையான வார்த்தை என்ன என்று தேடிப்பார்த்தேன்...ம்ஹூம் கிடைக்கவில்லை அதனால் DEFLATION என்று எழுத வேண்டிய கட்டாயம்...!!! பணவீக்கதிருக்கு எதிர்மறையாக பணசுருக்கம் என்று வேண்டுமானால் சொல்லலாம்)

பணவீக்க காலங்களில் பொருட்களின் விலை கூடும், மக்களின் வாங்கும் சக்தி குறையும். கூடுகின்ற பொருட்களின் விலையை கட்டுப்படுத்த மக்களிடம் இருக்கும் பண நடமாட்டத்தை குறைக்கும் விதமாக வங்கிகள் அதக வட்டி தந்து மக்களிடம் இருக்கும் பணத்தை வங்கியில் முடக்க முயற்சி எடுக்கும். கையில் பண நடமாட்டம் குறையும் பொது பொருட்களை வாங்குவது குறையும். வாங்குவது குறைவதால் பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உண்டு. இதைதான் மத்திய வங்கி (RBI) செய்யும். மக்களிடம் பண புழக்கத்தை குறைத்து, அதன் மூலம் பொருட்களின் விலையை குறைய வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பணபுழக்கத்தை குறைக்க வங்கிகள் அதிக வட்டி தரும். பணவீக்க காலங்களில் இதெல்லாம் நடக்கும் என்றால், பணசுருக்கம் அல்லது DEFLATION காலங்களில் இதற்கு நேர்மறையாக வங்கிகள் திட்டங்களை வகுக்கும். இந்த விஷயத்தை கவனிக்கும் முன் DEFLATION ஆனால் என்னென்ன பாதிப்புகள் இருக்கும் என்பதை முதலில் பார்த்து விடுவோம்.

DEFLATION என்றால் பொருட்களின் விலை குறையும் என்று பார்த்தோம். பொருட்களின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டிருப்பதால், பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதை தள்ளிப்போட முயற்சிப்பார்கள். பொருட்களின் விலை குறைகிறது என்றால் உற்பத்தியாளர்களுக்கு லாபம் குறையும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் உற்பத்திக்கு செய்த செலவை கூட விற்று வரும் வருமானம் மூலம் எடுக்க முடியாமல் போகலாம். ஆக பொருட்களின் விலை குறையும் போது உற்பத்தியாளர்கள் உற்பத்தியை குறைப்பார்கள். உற்பத்தியை குறைக்கும் போது தொழிலாளர்களை குறைப்பார்கள். வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படும். வேலை இல்லாமல் போவதால் மக்களின் வாங்கும் சக்தி குறையும். வேலை இல்லை என்பதால் கையில் பணம் இல்லை, பணம் இல்லை என்பதால் பொருட்கள் வாங்க முடியாது. பொருட்களை வாங்க ஆள் இல்லை என்னும் சூழ்நிலை வரும்போது, உற்பத்தியாளர்கள் இன்னும் விலையை குறைக்க வேண்டிய அவசியம். அப்படியாவது கிடைத்த விலைக்கு விற்கலாமே என்று எண்ணி, உற்பத்தியாளர்கள் விலையை குறைக்க வேண்டிய நிர்பந்தம் வரும். அப்படி மீண்டும் விலை குறைத்து, நஷ்டத்திற்கு வருவதால் மேற்கொண்டு உற்பத்தியை கூட்ட தயங்கி, இன்னும் உற்பத்தியை குறைக்க வேண்டிய சூழ்நிலை, அதனால் இன்னும் வேலை இழப்பு. இப்படி ஒரு சைக்கிள் மாதிரி விலை குறைப்பு, உற்பத்தி குறைப்பு, வேலை இழப்பு, உற்பத்தி செய்த பொருட்களை விற்க முடியாத தன்மை என்று இது ஒரு புதைகுழி மாதிரி பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கும். இபப்டி ஒரு சூழ்நிலை இருப்பதால் புதிதாக முதலீடு செய்ய யாருக்கும் ஆர்வம் இருக்காது. அதனால் முதலீடு பாதிக்கும், புதிய முதலீடு இல்லாமல் இருப்பதால், வேலைவாய்ப்பு உருவாகாது. வேலை வாய்ப்பு இல்லை, வருமானம் இல்லை, வாங்கும் சக்தி இல்லை என்று பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும்.

இப்படி DEFLATION என்ற ஒரு நிலை வந்தால், மக்களின் வாங்கும் சக்தியை கூட்ட, மக்களின் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, வங்கி தரும் வட்டி விகிதங்களை குறைக்கும். அதாவது, நம் சேமிப்பை வங்கியில் வைப்பதை விட, கையில் வைத்துக்கொள்ளலாம், வங்கி வட்டி என்பது ஒரு லாபமான விஷயமில்லை என்னும் சூழ்நிலைக்கு வங்கி வட்டி குறையும். அதேமாதிரி வங்கியில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் தான் ஜப்பானில் வங்கியில் நம் பணத்தை deposit செய்தால் அந்த வங்கி நமக்கு வட்டி தராது - 1996 முதல் 2006 வரை ஜப்பானில் இந்த நிலை இருந்ததற்கு காரணம் DEFLATION என்று தெரியவரும்போது அதிர்ச்சியாக இருக்கிறதா? இதுதான் உண்மை நிலவரம். ஆக DEFLATION ஆனால் இந்த அளவுக்கு கூட நிலைமை போகலாம். இந்தியாவில் சென்ற ஆகஸ்ட்-ல் 12.91% ஆக இருந்த பணவீக்கம் இப்போது 2.43% ஆக குறைந்திருக்கிறது. இதுவே இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 0% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த ஆண்டு மார்ச் முதல் அக்டோபர் வரை DEFLATION இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உற்பத்தி (IIP) குறைந்திருப்பதை கவனிக்க வேண்டும். சீன DEFLATION ஐ நோக்கி சென்றுகொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. ஏற்கனவே சீனாவில் பணவீக்கம் -1.9% ஆக இந்த ஆண்டு பிப்ரவரி இல் இருந்தது. ஒருமுறை பணவீக்கம் குறைந்து 0% கீழே சென்று விட்டதும் அதை DEFLATION என்று சொல்லிவிட முடியாது. தொடர்ந்து 0% கு கீழே இருந்தால் தான் அது DEFLATION என்று கருதப்படும்.

உலகின் மற்ற நாடுகளில் DEFLATION இருந்திருக்கிறதா என்று பார்தோமென்றால் ஆம் இருந்திருக்கிறது என்று சொல்லலாம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இங்கிலாந்தில் 1921-ல் 10%, 1922-ல் 14% 1930க்களில் 3 முதல் 5% DEFLATION இருந்திருக்கிறது. அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க DEFLATION மூன்று காலக்கட்டங்களில் இருந்ததாக சொல்லலாம். 1836-ல் கிட்டதத்த 30% DEFLATION, 1875 முதல் 1896 வரையான காலக்கட்டங்களில் 1.7%, 1930 - 1933 இல் 10% இருந்திருக்கிறது.

ஆக இன்று இருக்கும் சூழ்நிலையில் இந்தியாவிலும் DEFLATION வருவதற்க்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது.

Saturday, March 7, 2009

நல்ல வருமானம் கிடைக்க எங்கே முதலீடு செய்யலாம்?

நம் ஒவ்வொருவருக்குமே நம்மிடம் இருக்கும் சேமிப்பை எப்படி நல்ல வருமானம் தருவதாக ஆக்க முடியும் என்ற எண்ணம் இருக்கும். உதாரணமாக நம்மிடம் பணம் உபரியாக இருக்கிறது என்றால் அதை எப்படி சேமிப்பில் சேர்க்கலாம், எந்த முறையில் சேமித்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்ற எண்ணம் எல்லோருக்குமே உண்டு. இந்த பதிவில் சேமிக்கும் வழிமுறை பற்றி பார்க்கலாம்.
நம்மிடம் இருக்கும் பணத்தை கீழே இருக்கும் முறைகளில் சேமிக்கலாம்.

1. வங்கியில் வைப்பு நிதி (Fixed Deposit)
2. தங்கம்
3. நிலம்
4. பங்குச்சந்தை
5. பரஸ்பர நிதி (Mutual Fund)

சேமிக்கும் முறையை தேர்ந்தெடுக்கும் முன் அந்த சேமிப்பு பணவீக்கத்தை விட அதிகமாக இருக்க வேண்டும் என்பது அடிப்படை நியதி. அதனால் இந்த பதிவை படிக்கும் இந்த நேரத்தில் நான் ஏற்கனவே எழுதி இருக்கும் ஒரு பதிவான "பணவீக்கமும் நமது சேமிப்பும் " என்ற தலைப்பில் February 2009 இல் எழுதிய பதிவையும் படித்தால் நல்லது. இனி சேமிக்கும் வழிமுறைகளை பார்போம்.

1. வங்கியில் வைப்பு நிதி (Fixed Deposit)
வங்கியின் வட்டி நிலவரங்கள் இன்றைய நிலையில் ஒரு தெளிவில்லாமல் இருக்கிறது. ஏனென்றால் மத்திய வங்கி (Reserve Bank of India) வட்டி விகிதத்தை அடிக்கடி மாற்றுவதால் எல்லா வங்கிகளுமே ஒருவித குழப்பத்தில் இருப்பதால் இன்றைய நிலையில் வங்கியின் வட்டி விகிதம் ஒரு நிலை இல்லாத நிலை இல் இருக்கிறது. இன்றைய நிலையில் வங்கி வட்டி விகிதம் 7 முதல் 8 சதவீதம் வரை இருக்கிறது. நான் ஏற்கனவே முந்தைய பதிவில் சொன்னது போல் நம்முடைய பணவீக்கம் அனேகமாக 5 முதல் ௬ சதவீதம் வரை இருக்கும். ஆக வங்கி வட்டி இன்றைய நிலையில் பாதுகாப்பாக தெரிந்தாலும், அது நிரந்தரம் இல்லை. இதற்கு அடுத்த முதலீட்டு வாய்ப்ப்பாக வருவது தங்கம்.

2. தங்கம்
தங்கம் என்பது இந்தியாவை பொறுத்த வரை அதிக தேவை (Demand) இருக்கும் ஒரு பொருள். இந்தியாவில் இருக்கும் ஒவொருவருக்கும் தம்மிடம்தங்கம் இருந்தால் அது மிகப்பெரிய சேமிப்பு என்று சொல்லும் அளவு மதிப்பான ஒரு பொருள் தங்கம். அனால் இந்த தங்கத்தை ஆபரணமாக வாங்கினால் செய்கூலி, சேதாரம் னு நிறைய செலவுகளுக்கு உள்ளாகிறது. அதே மாதிரி நாம் வாங்கிய நகையை விற்க போனால் அப்போவும் அந்த கழிவு இந்த கழிவு என்று நாம் கொடுத்த பணத்தை விட குறைந்த பணமே கிடைக்கும் நிலை. அதனால் நாம் தங்கத்தை ஒரு சேமிப்பாக வாங்க வேண்டும் என்று முடிவு பண்ணினால் ஆபரண தங்கம் வாங்குவது சரி இல்லை. சுத்த தங்கம் அதாவது Pure Gold வாங்கினால் அது சேமிப்பு என்ற வகையில் சேரும். சரி Pure Gold வாங்கி அதை வீட்டில் பத்திரமாக பூட்டி வைத்து எப்போது திருடன் வருவானோ என்ற பயத்தில் இருப்பதை விட Gold Exchange Traded Fund வாங்கலாம். உங்களிடம் தேமட் இருந்தால் இது சாத்தியம். இல்லேன்னா தங்கத்தை வாங்கி வீட்டில் பூட்டி வைத்து பாதுகாக்க வேண்டியதுதான். அனால் இந்த தங்கம் என்பது உண்மையிலேயே வங்கி வட்டியை விட சிறந்ததா என்று யோசித்தோம் என்றால் சிறந்தது தான் என்று உடனே சொல்லி விட முடியாது. குறிப்பாக 1998 இல் ஒரு கிராம் தங்கத்தின் விலை 500 ரோபாயாக இருந்தது அதுவே 2008 இல் தான் 1000 ரூபாயை தாண்டியது. ஆக 10 வருடத்தில் 2 மடங்காக ஆகி இருக்கிறது. அதாவது சராசரியாக வருடத்திற்கு 7.18 சதவீதம் வருமானம் கொடுத்திருக்கிறது. இதற்கும் வங்கி வட்டிக்கும் இப்போதிருக்கும் சூழ்நிலையில் அதிக வித்தியாசமில்லையே? அனால் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். வங்கி வட்டி என்பது மேலும் கீழுமாக இருந்தாலும், தங்கம் என்பது என்று இருந்தாலும் நம் கையில் இருக்கும் ஒரு பொருள். இந்தியாவில் தங்கத்துக்கு என்றுமே தேவை (Demand) இருக்கும் என்பதால் வங்கி வட்டியை விட தங்கம் ஓரளவு நல்ல வருமானத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. இதுக்கு அடுத்து சேமிப்பு என்று பார்க்கும்போது நம் கண்ணில் தெரிவது நிலம். அது பற்றி பார்போம்.

3. நிலம்
நிலம் என்ற பேச்சி வந்துவிட்டாலே அது ஒருவித மயக்கம் தரும் விஷயம். சென்னை இல் எனக்கு ஒரு கிரவுண்டு (Ground) நிலம் இருக்கிறது என்று சொன்னாலே அது மிக பெருமையான விஷயம் என்ற ஒரு நிலை ஆகி விட்டது. உண்மைதான் - நிலம் வைத்திருந்தால் அது ஒரு பெருமைக்குரிய விஷயம் என்பது உண்மைதான். அனால் நிலத்தை வாங்க வேண்டும் என்றால் அதற்கு பெரிய தொகை வேண்டும். தங்கம் நாம் நினைக்கும் போது நம்மிடம் இருக்கும் பணத்தை பொறுத்து எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம். அதாவது நம்மிடம் ஒரு 10000 ருபாய் இருந்தால் அதற்கு தங்கம் வாங்கிக்கலாம். அனால் நிலம் என்றால் அப்படியா? இல்லையே. அதற்கு மிக பெரிய தொகை வேண்டும். அப்படியே மிகப்பெரிய தொகையை முதலீடு செய்து நிலம் வாங்கினாலும் நாம் விற்கப்போகும் போது விலையை குறைத்துத்தான் கேட்பார்கள். ஏனென்றால் நம் நாட்டில் (நம் நாட்டில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் இப்படித்தான்) நம்மிடம் இருக்கும் நிலத்தை விற்க போகும் போது விலையை குறைத்துதான் கேட்பார்கள். ஏனென்றால் நிலம் வாங்கும் - விற்கும் சந்தை தரகர்களின் கையில் இருக்கிறது. அதனால் நிலம் என்பது ஒரு நல்ல முதலீடு தான். இருந்தாலும் தரகர்களின் ஈடுபாட்டை நமக்கு சமாளிக்க தெரிய வேண்டும். ஆனாலும் நிலம் நல்ல முதலீடுதான். அதிகமான முதலீடு, தரகர் இப்படி பிரச்னைகள் இருந்தாலும், நிலம் நல்ல முதலீடுதான் - அதாவது நாம் ஏற்கனவே பார்த்த இரண்டு முதலீட்டையும் விட இது நல்ல முதலீடு தான் சந்தேகமே வேண்டாம். அதிக பணம் வேண்டும் அது ஒரு மிகப்பெரிய குறைபாடு. அடுத்து நாம் கவனிக்க வேண்டிய முதலீட்டு வாய்ப்பு பங்குச்சந்தை.

4.பங்குச்சந்தை
பங்குச்சந்தை முதலீடு என்பது ஓரளவு விஷயம் தெரிந்து செய்ய வேண்டியது. என்னென்ன விஷயங்களை தெரிந்து அதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை விளக்குவதற்காகத்தான் இந்த வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. பங்குச்சந்தை என்பது சூதாட்டமா என்னும் தலைப்பில் வரும் தொடர் பங்குச்சந்தை பற்றி அணைத்து விஷயங்களையும் அலசும். ஆனால் இதற்கு முன் பார்த்த மூன்று முதலீட்டு வழியை விட பங்குச்சந்தையில் அதிக வருமாம் பார்க்கலாம். கடந்த ௨௦ ஆண்டு புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும் போது, பங்கு சந்தை சராசரியாக வருடத்திற்கு 17 சதவீதம் வருவாய் கொடுத்திருக்கிறது என்று தெரிகிறது. இது வங்கி வட்டியை விட அதிகம் ஆக பங்குச்சந்தை அதிக லாபம் கொடுக்கும் அனால், ரிஸ்க் அதிகம். Sathyam Computers நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் நிலையை யோசித்து பாருங்கள். அதல பாதாளத்துக்கு போய் விட்டார்கள். இதுதான் பங்கு சந்தையின் அபாயத்துக்கு ஒரு எச்சரிக்கை மணி. பங்கு சந்தையில் என்னென்ன கவனிக்க வேண்டும் என்பதை நம்முடைய தொடரை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். ஆனால் பங்கு சந்தை என்பது நல்ல லாபத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை, அதே நேரத்தில் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி நிறைய விஷயங்களை தெரிந்துக்கொள்ள நேரமும், விபரமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது Mutual Funds. இனி Mutual Funds பற்றி பார்போம்.

5. பரஸ்பர நிதி (Mutual Funds)
Mutual Funds என்பது நம்மிடம் இருந்து பணத்தை வாங்கி, அந்த பணத்தை பங்குச்சந்தை இல் முதலீடு செய்யும். நமக்கு பங்குச்சந்தை பற்றி படித்து, விஷயங்களை அலசி பார்த்து எந்த பங்கை வாங்கலாம் என்று முடிவு செய்ய நேரமில்லை அல்லது அதற்கான விஷயங்கள் நமக்கு தெரியவில்லை என்று நாம் நினைத்தால் நாம் நாட வேண்டியது Mutual Funds ஐ தான். நம்மிடம் இருந்து வாங்கும் பணத்தை நல்ல நிறுவன பங்குகளில் முதலீடு செய்து, நமக்கு நல்ல வருமானம் கொடுக்கும் ஒரு வழிதான் Mutual Funds. இப்படி நமக்காக வாங்கி நமக்கு லாபத்தை கொடுப்பதற்காக Mutual Funds நம்மிடம் ஒரு தொகையை செலவு என்று வசூலிக்கும். இது நம்முடைய வருமானத்தில் இருந்து கழிக்கப்படும் என்பதால், நாம் இதை தனியாக செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இப்படிப்பட்ட வசதியோடு வரும் Mutual Funds நடுத்தர வர்க்கத்துக்கு ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பாக இருக்கிறது. எனவே இதை எல்லாம் யோசித்து பார்த்து, முதலீடு செய்வது நலம்..

சரி படிச்சிட்டீங்கல்ல, கீழே இருக்கும் Tamilish இல் ஒரு ஒட்டு போட்டுட்டு போங்க. மறக்காம உங்க கருத்தை பின்னோட்டத்தில் எழுதுங்க.
Page copy protected against web site content infringement by Copyscape