You will make it....

You will make it....

Thursday, September 24, 2009

பங்கு வர்த்தகம் : Swing Trading - அறிமுகமும் வழிமுறைகளும் (பாகம் 2)

PLAN A TRADE, TRADE THE PLAN


சென்ற பதிவில் Swing Trading என்றால் என்ன என்று பார்த்தோம். இந்த பதிவில் வர்த்தக திட்டம் பற்றி பார்ப்போம். ஏனென்றால் திட்டத்துடன் செயல் படும் மனிதனை விட திட்டமில்லாமல் செயல்படும் மனிதனின் தவறுகள் அதிகமாக இருக்கும் (இது பங்கு வர்த்தகத்திற்கு மட்டுமல்ல அனைத்திற்கும் பொருந்தும்). திட்டமிடுதல் மட்டும் முக்கியமல்ல அந்த திட்டத்தின் படி கொஞ்சமும் தவறாமல் நடக்க வேண்டும். பங்கு வர்த்தகத்தில் ஒரு Famous Quote உண்டு. plan a Trade , Trade the plan . எப்படி வர்த்தகம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொள்ளுங்கள், அப்புறம் அந்த முடிவுப்படியே வர்த்தகம் செய்ய வேண்டும் - அதிலிருந்து கொஞ்சமும் விலகக்கூடாது.அந்த அளவு மன உறுதியை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இனி திட்டமிடுதல் பற்றி பாப்போம். நன்றாக கவனத்தில் கொள்ளுங்கள் வர்த்தகம் செய்வதற்கான பதிவில் நாம் இருக்கிறோம். வர்த்தகம் என்றால் ஒரு பங்கை வாங்கி 3 முதல் 5 நாட்களில் விற்பதற்கான வர்த்தக திட்டம். சில நேரங்களில் ஒரு நாளில் கூட விற்றுவிடும் சூழ்நிலை வரலாம். இந்த மிகமிக குறுகியகால வர்த்தகத்தை தான் Swing Trading என்கிறோம். அதனால் Swing Trading இல் Timing ரொம்ப முக்கியம். இதற்கு நாம் Trading Rules வரையறுத்துக்கொள்வது தவிர்க்க முடியாதது. கீழ்க்கண்ட Trading Rules or Plan, Swing Trading -கு அவசியம்.

1. லாப இலக்கு (Targeted Profit)
2. சொந்த பணத்தில் தான் வர்த்தகம் செய்ய வேண்டும்
3. குறைந்த அளவு பணத்தில் வர்த்தகத்தை ஆரம்பிக்க வேண்டும்
4. பங்கை வர்த்தகம் செய்யுங்கள் - காதல் கொள்ளாதீர்கள்
5. அடுத்த நாள் வர்த்தகத்துக்கு தினமும் பங்குகளை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்(Watchlist)
6. அடுத்தவர்களின் பரிந்துரைகளை கண்மூடித்தனமாக செயல்படுத்த வேண்டாம்
7. வர்த்தகத்துக்கு இடையே அவசர முடிவுகள் வேண்டாம்
8. லாபத்தை போல் நஷ்டத்தையும் ஏற்க பழகிக்கொள்ளுங்கள் (Stop Loss)
9. உறுதியான நம்பிக்கை இல்லை என்றால் வாங்காதீர்கள்
10.நீங்கள் செய்த வர்த்தகத்தை தினமும் குறித்துக்கொள்ளுங்கள் (Record Keeping)
11.நம்முடைய பணத்தை எப்படி நிர்வகிப்பது? (Managing your money)

இனி ஒவ்வொன்றாக கவனிப்போம்.

லாப இலக்கு (Targeted Profit)

பொதுவாக பங்குகளை வாங்கியவர்கள் சொல்லும் ஒரு வார்த்தை - நான் வாங்கிய பின் இந்த பங்கு 10% லாபத்தில் இருந்தது, ப்ச் விற்காமல் விடுட்டுட்டேன், இப்போ 20% நஷ்டத்தில் இருக்கிறது என்பார்கள். இதற்கு என்ன காரணம்? இதே மாதிரி அனுபவங்கள் எனக்கும் நிறைய இருந்திருக்கிறது. அன்று விற்றிருக்கலாமே என்று இன்று நினைத்தால் ஆகப்போவது ஒன்றுமில்லை. அதனால் நம்முடைய லாபத்திற்கு நாம் ஒரு இலக்கு நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். நாம் வாங்கிய பங்கு, நம்முடைய நிர்ணயிக்கப்பட்ட லாப இலக்கை அடைந்ததும் விற்றுவிட வேண்டும். இந்த பங்கு இன்னும் விலை கூடும் கூடும் என்று நினைத்து, விற்காமல் வைத்திருக்க கூடாது. ஒரு வேளை நாம் வைத்திருக்கும் பங்கு இன்னும் விலை கூடும் என்று நாம் உறுதியாக நம்பினால், பாதி பங்குகளை நம்முடைய இலக்கில் விற்று விட்டு, மீதி இருப்பவற்றை அதிக லாபத்திற்காக வைத்திருக்கலாம். சில நேரம் நாம் விற்ற பங்குகள் விலை கூடலாம், அதற்காக வருத்தப்பட கூடாது. அதே பங்கு நாம் விற்றபின் விலை குறைந்தால் நாம் சந்தோஷ பாடுவோமே, அதைப்போல் விற்றபின் விலை கூடி விட்டதே என்று வருத்தப்பட கூடாது. நமக்கு நம்முடைய லாபம் வந்து விட்டது. போதும் என்று மன நிறைவாக அடுத்த வர்த்தகத்தை கவனிக்க வேண்டும்.

என் நண்பர் ஒருவர் வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். அவரிடம் கேட்டேன், எப்படி லாபத்தை புக் பண்ணுகிறீர்கள் என்று. அதெல்லாம் பெரிய விஷயம் இல்லை, ஒரு பங்குக்கு ஐமபது ரூபாய் லாபம் வந்ததும் விற்று விடுவேன் என்றார். அவர் வாங்கும் பங்குகள் அனேகமாக அதிக விலை உள்ள பங்குகளாக இருக்கும், அவர் வர்த்தகத்திற்கு ஒதுக்கி இருக்கும் பணமும் அதிகம். அதனால் ஐமபது ருபாய் என்றால் ஒரு வர்த்தகத்தில் 5000 முதல் 10000 ரூபாய் வரை லாபம் பார்ப்பார். ஆக அவருக்கு ஒரு இலக்கு - ஐமபது ரூபாய் கூடினால் போதும் என்பது - அந்த ஐம்பது ருபாய் லாபம் ஒரு நாளில் வரலாம் அல்லது ஒரு வாரம் ஆகலாம். இப்படி ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் ஒரு இலக்கு வைத்திருப்பார்கள். லாபத்தை ரூபாயில் நிர்ணயிப்பதை விட, சதவீதத்தில் நிர்ணயித்துக்கொள்ளலாம்.

நாம் Swing Trading செய்யும் போது, குறைந்த பட்ச லாபமாக ஒரு நாளைக்கு 2% அல்லது வாரத்திற்கு 5 முதல் 10 சதவீத லாபம் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 2% என்று இலக்கு நிர்ணயித்து கொண்டபின், சில நேரம் ஒரே நாளில் 5% கூடலாம், அல்லது நாம் 2% லாபத்தில் விற்ற பங்கு அடுத்த நாள் மேலும் 2% கூடலாம். ஒரு பங்கை விற்றுவிட்ட பிறகு, அது கூடுகிறதே என்று கவலைப்படுவதை விட, விற்று வந்த பணத்தில் விற்ற அன்றே அடுத்த பங்கில் முதலீடு செய்து விட வேண்டும். சில நேரங்களில் வாங்கிய அன்றே 2% லாபம் கிடைத்து விடும், விற்று விட்டு அடுத்த பங்கை வாங்குவது நல்லது அல்லது பாதியை விற்றுவிட்டு, மீதியை அடுத்த நாளுக்கு வைத்துக்கொள்ளலாம். சில பங்குகள் நாம் விற்ற பின் கூடிக்கொண்டிருந்தால், அந்த பங்கு இன்னும் கூடும் என்று நாம் உறுதியாக நம்பினால், அதே பங்கை மீண்டும் வாங்கி விற்பதில் தவறு இல்லை. வாங்குவதற்கு முன், விலை உயர்வதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. அதை தெரிந்து கொள்ள இன்னும் நிறைய விஷயங்களை நாம் பார்க்க வேண்டும், தொடர்ந்து பதிவை பாருங்கள்.

ஒவ்வொருவரும் ஒரே பங்கில் நான் 50% லாபம் பார்த்தேன் என்று சொல்கிறார்களே, இங்கே நாம் 2% பற்றி பேசுகிறோமே, இதெல்லாம் ஒரு லாபமா என்ற எண்ணம் சிலருக்கு வரலாம். பலதுளி பெருவெள்ளம் என்பது போல் ஒரு நாளைக்கு 2% என்றால், சராசரியாக ஒரு மாதத்திற்கு இருபது நாட்கள் பங்குச்சந்தை உண்டு. திட்டமிட்டபடியே லாபமீட்ட முடிந்தால் மாதத்திற்கு 40% லாபம் கிடைக்கும். நாம் செய்யும் அத்தனை வர்த்தகமும் லாபத்தில் முடியும் என்று சொல்ல முடியாது. சில பங்குகளை ஒரு சதவீத லாபத்தில் விற்க வேண்டியிருக்கலாம், சில பங்குகளில் ஒரே நாளில் 5% லாபம் கிடைக்கலாம், சில பங்குகளை நஷ்டத்தில் விற்க வேண்டியிருக்கலாம். அதனால் சராசரியாக பத்து வர்த்தகத்தில், ஏழு லாபத்தில் முடிந்தால் கூட, மாதத்தில் 20 நாட்கள் பங்குச்சந்தை உண்டு என்பதால், சராசரியாக மாதத்திற்கு 20% முதல் 25% லாபம் கிடைக்கும். மாதத்திற்கு 20% என்பது மிகப்பெரிய லாபம். நம்புங்கள் மாதத்திற்கு 20% என்பது என்னுடைய மிக குறைந்த மதிப்பீடு.

அதனால் திட்டமிடுதலில் முதல் விஷயமாக லாப இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள். இந்த லாப இலக்கு என்பது Swing Trading -இல் மட்டுமில்லாமல் அனைத்து வர்த்தகத்திலும் அவசியமானது. மற்ற விஷயங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

Wednesday, September 23, 2009

பங்கு வர்த்தகம் : Swing Trading - அறிமுகமும் வழிமுறைகளும் (பாகம் 1)

இது பங்கு வர்த்தகம் பற்றிய புதிய தொடர். எந்த ஒரு பங்குமே தொடர்ந்து ஏறுவதும் இல்லை தொடர்ந்து இறங்குவதும் இல்லை. எந்த ஒரு பங்கை எடுத்துக்கொண்டாலும், சிலநாட்கள் ஏறுமுகமாகவும் சிலநாட்கள் இறங்குகுமுகமாகவும் தான் இருக்கிறது. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Chart-ஐ பாருங்கள். இதில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை கவனியுங்கள். இந்த ஏற்ற இறக்கத்தில் லாபம் பார்ப்பதைத்தான் வர்த்தகம் என்கிறோம்.



சரி இந்த ஏற்ற இறக்கங்களை எப்படி நாம் முன்கூட்டியே தெரிந்துகொள்வது? நாம் மேலே பார்க்கும் Chart ஏற்கனவே நடந்து முடிந்த விஷயம். பங்குகள் ஏறிய பிறகு அதை பார்ப்பதால் உடனடியாக நாம் எந்த பலனும் அடைய முடியாதே. ஒரு பங்கு ஏறும் முன் அல்லது இறங்கும் முன் அதை எப்படி தெரிந்து கொள்வது? தெரிந்துகொண்டால்தானே நாம் அதில் வர்த்தகம் செய்து லாபம் பார்க்க முடியும். இந்த பதிவிலிருந்து தொடர்ந்து வர்த்தகம் பற்றி பார்க்கலாம்.

மீண்டும் மீண்டும் நான் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லிக்கொள்கிறேன், இந்த பதிவின் நோக்கம் பரிந்துரை செய்வது அல்ல. உதாரணத்துக்காக நாம் சில பங்குகளை பார்க்கலாம், சில பங்குகளின் chart ஐ analyse பண்ணலாம், ஆனால் இதில் எங்குமே நான் பரிந்துரை செய்யப்போவது இல்லை. அதனால் நாம் இதில் குறிப்பிடும் பங்குகளை பரிந்துரை என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்.

பங்கு வர்த்தகம் என்று எடுத்துக்கொண்டால் அதில் நிறைய வகை இருக்கிறது. அவை என்ன என்று முதலில் பார்ப்போம்.

1. குறுகிய கால வர்த்தகம் (Short Term Trading)
2. Swing Trading
3. Intra-Day அல்லது Day Trading.

நமது பதிவில் நாம் பார்க்கப்போவது Swing Trading. முதலில் Swing Trading என்றால் என்ன என்று கவனிப்போம். எந்த ஒரு பங்கும் தொடர்ந்து ஏறுவதும் இல்லை, தொடர்ந்து இறங்குவதும் இல்லை. ஒரு பங்கு குறைந்த பட்சம் 3 முதல் 5 நாட்கள் வரை கூடும். அதன் பின் சிறிய இறக்கம் இருக்கும், மீண்டும் கூட ஆரம்பிக்கும்.- இது அந்த பங்கு ஏறுமுகத்தில் இருக்கும் போது. அதே மாதிரி, இறங்குமுகத்தில் இருக்கும் போதும் ஏற்ற இரக்கத்தோடு தான் இருக்கும். மேலே இருக்கும் chart-ஐ கவனியுங்கள். Rs.312.75 முதல் Rs.358.65 வரை கூடுகிறது, மீண்டும் Rs.305.25 வரை இறங்கி Rs.361.85 வரை கூடுகிறது. மீண்டும் Rs.305.95 வரை இறங்கி Rs.338.40 வரை கூடுகிறது. அடுத்து Rs.326.70 வரை இறங்கி அப்புறம் மேல்நோக்கி செல்கிறது. சுங் ற்றடிங் என்பது முதலில் Rs.313-இல் வாங்கி Rs.358 வரும்போது விற்றுவிட்டு, அடுத்து Rs.305.25 வரும்போது வாங்கி மீண்டும் Rs.360 வாக்கில் விற்று விட்டு மீண்டும் Rs.306 வாக்கில் வாங்கி அடுத்த உயர்வு வரும் போது விற்று இப்படி அடிக்கடி ஒரு பங்கை வர்த்தகம் செய்வது தான் Swing Trading. ஆக Swing Trading என்பது ஒரு பங்கில் ஏற்படும் மிக குறுகிய கால ஏற்றத்தாழ்வுகளை வைத்து லாபம் பார்ப்பது என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். எந்த பங்கையும் மிக சரியாக குறைந்த விலையில் வாங்குவது என்பதும் மிக சரியான உயர்வில் விற்பது என்பதும் கண்டிப்பாக நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றாலும், ஓரளவு குறைந்த விலை அருகே வாங்கி அதிக விலைக்கு அருகே விற்று லாபம் பார்ப்பது தான் Swing Trading என்பது.

கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, அனால் இது சாத்தியமா என்று கேட்கத்தோன்றும். சாத்தியம் தான் என்பதை இனி வரும் பதிவுகளில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம். அனைவருக்குமே பங்குச்சந்தையில் லாபம் பார்க்க வேண்டும் என்பதுதான் ஆவல், ஆனால் எப்படி சம்பாதிக்க வேண்டும் என்று சரியான வழிமுறைகள் தெரியாமலும், சரியான வழிகாட்டுதல் இல்லாமலும் புரோக்கர் சொன்னார் என்று பங்குகளை வாங்கி சில நேரம் லாபத்திலும், பல நேரம் நஷ்டத்திலும் வர்த்தகம் செய்து முடிவில் பங்குச்சந்தை சூதாட்டம், நான் பணத்தை இழந்துவிட்டேன் என்று சந்தையை குறை கூறிக்கொண்டிருக்கிறோம். பங்குச்சந்தை யாரையும் வா வா என்று அழைப்பது இல்லை, அது தன்போக்கில் போய்க்கொண்டிருக்கிறது, நாம் தான் கவனமாக நம்முடைய முதலை (Capital) பாதுகாத்து அதன் மூலம் லாபம் அடையும் வழிகளை தெரிந்துகொள்ள வேண்டும். பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களை விட வர்த்தகம் செய்கிறவர்களே அதிகம்.

Swing Trading செய்ய என்னென்ன தேவை என்றால் கீழ்க்கண்ட விஷயங்களை சொல்லலாம்.

1. ஒரு நல்ல Charting Software
2. கொஞ்சம் Technical Analysis Knowledge
3. குறைந்தபட்சம் தினமும் (பங்குச்சந்தை முடிந்த பிறகு) இரண்டு மணி நேரம்
4. Demat Account
5. அவரவர் தகுதிக்கேற்ப முதல் (Capital Money)
6. ஒரு நல்ல வர்த்தக திட்டம் (Trading Plan)
7. Trading Plan இல் இருந்து கொஞ்சம் கூட விலகிப்போகாத மனஉறுதி

மேலே கூறியவற்றில் 3,4,5,& 7 இவை எல்லாம் அவரவர் சம்மந்தப்பட்டது. அதனால் மற்ற விஷயங்களை பற்றி நாம் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

முதலில் Charting Software. இன்றைய இன்டர்நெட் உலகில் software பஞ்சம் இல்லை. ஆனால் நாம் வைத்திருக்கும் சாப்ட்வேர் நம்முடைய analysis கு உகந்ததாக இருக்க வேண்டும். அந்த வகையில் www.chartnexus.com என்னை பொறுத்த வரை ஒரு நல்ல choice. இது ஒரு இலவச சாப்ட்வேர் - download செய்துகொள்ளலாம். இதில் தினமும் பங்குச்சந்தை முடிந்ததும் அனைத்து பங்குகளுக்குமான விலை விபரங்களை download செய்துகொள்ள முடியும். நம்முடைய தேவைக்கேற்ற மாதிரி analysis define பண்ண முடியும். நிறைய charting tools இருக்கிறது. அத்தனை tools-இல் நமக்கு தேவையான analysis-ஐ எப்படி செய்துகொள்ளலாம் என்பதை வரும் பதிவுகளில் பார்ப்போம். நான் இலவசமாக தரவிறக்கம் செய்திருக்கும் இந்த மென்பொருளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

இனி நாம் கவனிக்க வேண்டியது நமக்கு தேவையான அளவு Technical Analysis மற்றும் Trading Plan. Techninal Analysis என்பது ஒரு கடல் மாதிரி. அனைத்தையும் படிப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் படித்த Analysis-ஐ எப்படி பயன்படுத்துவது என்பதில் தான் சூட்சுமம் இருக்கிறது. அதுவுமில்லாமல் Technical Analysis-இல் ஒவ்வொரு Analysis-ம் ஒவ்வொரு Result கொடுக்கும். ஒரு Analysis வாங்கு என்று சொன்னால் இன்னொன்று விற்றுவிடு என்று சொல்லும், இன்னொன்றோ வாங்கவும் வேண்டாம் விற்கவும் வேண்டாம் பங்கு விலை Flat ஆக அதாவது கூடவும் செய்யாமல் குறையவும் செய்யாமல் Flat ஆக இருக்கும் என்று சொல்லும். அனைத்து Analysis-ம் படித்து நம்மை நாம் குழப்பதுக்குள்ளாக்கி நம்முடைய பணத்தை போட்டு பங்கை வாங்கவா விற்கவா என்று முடிவெடுக்க முடியாமல் திணறுவதை விட நம்முடைய வர்த்தகத்திற்கு பயன்படும் சில Analysis பற்றி நன்றாக தெரிந்துகொள்வோம்.

Analysis பற்றி தெரிந்து கொள்ளும் முன் வர்த்தக திட்டம் (Trading Plan) பற்றி முதலில் முடிவு செய்து கொள்ளலாம். Trading Plan எப்படி தயாரிப்பது என்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்

Monday, September 14, 2009

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 12

இதுவரை வெளியான பதிவுகளில் முதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்களாக, லாப-நஷ்ட கணக்கு, EPS, நிதிநிலை அறிக்கை, Promoters Holding, Bonus Share, நிறுவனம் சம்மந்தப்பட்டுள்ள தொழில், Mutual Fund மற்றும் FII வைத்திருக்கும் பங்குகள் போன்ற பல விஷயங்களை கவனித்தோம். இந்த பதிவில் நிதிநிலை அறிக்கை (Balance Sheet) பற்றி பாப்போம்.

நாம் ஏற்கனவே பார்த்தது போல் நிதிநிலை அறிக்கை என்பது ஒரு குறிபிட்ட நாளில் ஒரு நிறுவனத்தின் சொத்து, கடன் மற்றும் முதலீடு சம்மந்தப்பட்ட விஷயங்களை கொண்டிருக்கும். ஒவ்வொரு வருட கடைசி நாளில் இது வெளியிடப்படும். ஒவ்வொரு காலாண்டு அறிக்கையிலும் இது வெளியிடப்படும். இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் Reserves and Surplus என்று சொல்லப்படும், ஏற்கனவே ஈட்டிய லாபத்தில் இருந்து எதிர் காலத்திற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் தொகை. இந்த தொகையின் அளவை பொறுத்துதான் பங்கின் புத்தக மதிப்பு கணக்கிடப்படுகிறது. புத்தக மதிப்பு பற்றி ஏற்கனவே நாம் எழுதி இருப்பதால் இப்பொழுது அதை பற்றி அதிகம் சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்.

இதை அடுத்து கவனிக்க வேண்டிய விஷயம் கடன். Secured Loans, Unsecured Loans என்று இருக்கும். ஒரு நிறுவனத்திற்கு அதிக கடன் இருந்தால் அது சம்பாதிக்கும் லாபத்தில் ஒரு பகுதியை அல்லது பெரும் பகுதியை வட்டியாக கொடுக்க வேண்டிஇருக்கும், அப்படி இருக்கும் பட்சத்தில், அது பங்குதாரர்களுக்கு வர வேண்டிய EPS ஐ குறைக்கும். EPS குறைந்தால், பங்கின் விற்பனை விலையும் குறையும் என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அதனால் ஒரு நிறுவனம் வாங்கி இருக்கும் கடன் பற்றிய விபரங்களையும் பார்க்க வேண்டும். மேலும், நிதி நிலை அறிக்கை என்பது ஓராண்டுக்கும் மேலாக அதாவது மூன்று அலல்து நான்கு ஆண்டுகளின் நிலை அறிக்கை ஒப்பிட்டு பார்ப்பதற்க்காக கொடுக்கப்பட்டிருக்கும்.
அதனால் கடந்த வருடத்துடன் நடப்பு ஆண்டு முடிவுகளை ஒப்பிட்டு பார்ப்பதும் நல்லது. கீழே ஒரு நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை கொடுத்திருக்கிறேன்.





கடன் இருந்தால் பங்குதாரர்களின் EPS ஐ பாதிக்கும் என்பதால் கடனே இல்லாமல் இருக்கும் நிறுவன பங்குகளாக வாங்கலாமா என்று ஒரு கேள்வி வரும். அப்படி பட்ட அதாவது கடனே இல்லாத நிறுவன பங்குகளைதன் வாங்குகிறேன் என்று முடிவு செய்தோமென்றால் நிச்சயமாக பங்கு சந்தையில் முதலீடு செய்வது என்பது கனவாகவேதான் இருக்கும். ஏனென்றால், PTC போன்ற ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே கடன் இல்லாமல் இயங்குகிறது. மேலும் கடன் இருந்தால் நல்லது. என்ன? கடன் இருந்தால் நல்லதா..என்று நீங்கள் யோசிக்கிறது எனக்கு புரிகிறது.. நம்புங்கள் ... கடன் இருந்தால் நல்லது. எப்படி என்பதை பார்க்கலாம். பங்குதாரர்கள் தாங்கள் முதலீடு செய்த பணத்திற்கு 15 முதல் 20% வருமானம் எதிர்பார்ப்பார்கள். மேலும் பங்குதாரருக்கு தரப்படும் Dividend-கு வரி கழிவு நிறுவனத்திற்கு கிடையாது (வருமான வரி). ஆனால் வட்டிக்கு வரிக்கழிவு உண்டு. உதாரணமாக வட்டி பத்து சதவீதம் என்றால், வரி 30% கழித்து நிறுவனத்திற்கு உண்ண்மையான வட்டி வெறும் 7% தான். சரி இது எந்த விதத்தில் நல்லது? இதற்கு ஒரு உதாரணத்தை பாப்போம்.

ஒரு நிருவததிற்கு தேவையான முதலீடு இரண்டு லட்சம். இந்த முழு பணத்தையும் இருபதாயிரம் பங்குகளாக வெளியிட்டு குறிப்பிட்ட ஆண்டு லாபம் எண்பதாயிரம் சம்பாதிக்கிறது . அதற்கு வரி முப்பது சதவீதம் என்றால் வரிக்கு அப்புறம் உள்ள லாபம் ஐம்பத்தாறாயிரம் ருபாய். அதாவது EPS Rs.2.80 இதே நிறுவனம் ஒரு லட்ச ருபாய் பங்கு முதலீடாகவும், இன்னொரு ஒரு லட்ச ருபாய் கடனாகவும் (பத்து சதவீத வட்டி) முதலீட்டை பிரித்துக்கொண்டதேன்றால், இப்போது EPS எவ்வளவு என்று பாப்போம். வட்டிக்கு முந்தைய லாபம் எண்பதாயிரம், வட்டி பத்தாயிரம். ஆக நிகர லாபம் எழுபதாயிரம். அதற்கு வரி இருபத்தொன்றாயிரம் போக நிகர லாபம் நாற்பதொன்பதாயிரம். இருக்கும் பங்குகள் வெறும் பத்தாயிரம் மட்டும் என்பதால் EPS Rs.4.90. ௦ஆக கடன் வாங்கியதால், நிறுவனத்தின் EPS எவ்வளவு கூடி இருக்கிறது என்று கவனிக்க வேண்டும். நம் எல்லோருக்கும் நன்றாக தெரியும் EPS கூடினால், பங்கின் சந்தை மதிப்பு கூடும் என்பது. ஆக கடன் இருப்பதும் நல்லதுதான் என்பது இந்த உதாரணத்தின் மூலம் தெரிய வருகிறது. அதே நேரம் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல், தகுதிக்கு மீறி கடன் வாங்கி, வட்டி செலுத்த முடியாத நிலை வந்தால் Sick Unit என்னும் பெயரோடு இந்த நிறுவனம் மூடப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதையும் மறக்க கூடாது.

நிதிநிலை அறிக்கையில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், Assets இருக்கும் பகுதியில் Miscellaneous Expenses Not Written Off என்று ஓன்று இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். இது என்ன என்பதை தெரிந்து கொண்டோமென்றால் அதை ஏன் கவனிக்க வேண்டும் என்பது தானாக புரியும். ஏன்கனவே செலவு செய்து அதை லாப நஷ்ட கணக்கில் செலவு என்று காட்டாமல் வைத்திருப்பதுதான் இது. அதனால், Networth அலல்து Book Value கணக்கிடும் போது இந்த தொகையை Reserves and Surplus இல் இருந்து கழிக்க வேண்டும்.

ஆக இதுவரை முதலீட்டுக்கான விஷயங்களை கவனித்தோம். இனி வர்த்தகம் (Trading) பற்றி அடுத்த பதிவுகளில் கவனிப்போம்.

பின் குறிப்பு : இடையில் கொஞ்ச நாட்களாக எழுதுவது தடைப்பட்டிருந்தது. இனி தடை இல்லாமல் வாரத்திற்கு ஒரு பதிவாவது எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பதிவை முடிக்கிறேன்.
Page copy protected against web site content infringement by Copyscape