You will make it....

You will make it....

Saturday, July 16, 2011

பங்கு வர்த்தகம் : Swing Trading - அறிமுகமும் வழிமுறைகளும் (பாகம் 7)

இன்றைய பதிவில் Line Chart பற்றி பாப்போம். முதலில் இது எந்த முறையில் உருவாகிறது என்று பாப்போம். தினமும் ஒரு பங்கின் முடிவு விலையை வைத்து இந்த chart உருவாகிறது. இதில் ஒரு நாளையை Open , High , Low , Close போன்ற விபரங்கள் கிடையாது. ஒவ்வொரு நாளும் ஒரு பங்கின் முடிவு விலையை வைத்து உருவாக்கப்படும் இந்த chart நமக்கு பல தகவல்களை அள்ளிக்கொடுக்கும். ஒரு பங்கின் விலை ஏறுமுகத்தில் இருக்கிறதா அல்லது இறங்குமுகத்தில் இருக்கிறதா என்பதை இந்த Line chart -ஐ வைத்து ஓரளவு கணிக்க முடியும். உதாரணமாக கீழே உள்ள Sample chart -ஐ பாருங்கள்.



ஒரு பங்கின் இன்றைய முடிவு விலை முந்தைய நாளின் முடிவு விலையை விட அதிகமா குறைவா என்று கவனிக்க வேண்டும். எந்த ஒரு பங்குமே ஒரே நேர் கோடாக மேலேயோ அல்லது கீழேயோ போவதில்லை. ஏற்ற இறக்கங்களுடன் தான் விலை இருக்கும். அதனால் முந்தய நாள் மற்றும் முன்றைய அதிக விலை (High) முதலியவற்றை கவனிக்க வேண்டும். ஒரு பங்கு முந்தைய அதிக விலைக்கு மேலே முடிந்தால் அது மேலே போக வாய்புகள் அதிகம் - இதை Higher High என்று சொல்லுவோம். அதே மாதிரி முந்தைய குறைந்த விலையை விட தற்போது உள்ள குறைந்த விலை அதிகமாக இருக்க வேண்டும் இதை Higher Low என்று சொல்லுவோம். ஆக ஒரு பங்கு Higher High மற்றும் Higher Low ஆக இருந்தால் அது மேலே போக வாய்ப்புகள் அதிகம் என்று நம்பலாம். மேலே இருக்கும் chart -ஐ இப்பொழுது பாருங்கள் பங்கு மேலே போகும் போது Higher High மற்றும் Higher Low -வாக இருப்பது உங்களுக்கு புரியும். இதற்கு அப்படியே எதிர்மறையான விளைவுகளை தரக்கூடியது Lower High மற்றும் Lower Low. ஒரு பங்கு முன்றைய உயர்ந்தவிலையை தொடாமல் கீழே இறங்க ஆரம்பிக்க்ரியது என்றால் அது கீழே போவதற்கான வாய்ப்புகள் அதிகம். சரி இப்பொழுது ஒரு சந்தேகம் வரலாம். முந்தைய அதிக விலை என்றால் என்ன? ஒரு chart -ஐ பார்க்கும் போது அதில் எத்தனையோ அதிக விலை இருக்கிறதே நாம் எந்த விலையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு சந்தேகம் வரலாம். இது ரொம்ப சிம்பிள் ஆன விஷயம். இன்றைய முடிவுக்கு முன்பு அதிகமான விலை என்னவோ அதைதான் அதிக விலையாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதே மாதிரிதான் குறைந்த விலையையும் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலே கொடுத்திருக்கும் chart -இல் இதெல்லாம் குறிக்கப்பட்டுள்ளது. ஆக முந்தைய அதிக விலை என்பது இதற்கு முன்பு பங்கு எந்த விலையில் இருந்து இறங்க ஆரம்பித்ததோ அதைத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதை போல் இன்னும் பல chart -ஐ நீங்கள் பார்த்தால் உங்களுக்கு நிறைய விஷயம் புரியவரும். அதனால் அடுத்த பதிவு வரும் வரை சில chart பாருங்கள்.

Thursday, July 7, 2011

பங்கு வர்த்தகம் : Swing Trading - அறிமுகமும் வழிமுறைகளும் (பாகம் 6)

இதுவரை பங்கு வர்த்தகம் பற்றிய தொடரில், நாம் தெரிந்துகொண்ட விஷயங்கள் என்று பார்தோமென்றால், Empty Zone , Volume, Entry Level, Volume -கும் பங்கின் விலைக்கும் உள்ள சம்மந்தம், எந்த சந்தர்ப்பத்தில் விலை ஏறுவதற்கு வாய்ப்பு, எந்த சந்தர்ப்பத்தில் விலை இறங்குவதற்கு வாய்ப்பு (வாய்ப்பு என்று தான் சொல்கிறேன், பங்கு சந்தையில் எந்த விஷயத்தையும் உறுதியாக சொல்ல முடியாது) என்பது பற்றி எல்லாம் ஓரளவு தெரிந்து கொண்டோம். இது மட்டுமின்றி, chart எந்த அளவு முக்கியம் என்பதை நான் கொடுக்கும் உதாரண chart மூலமாக உங்களுக்கு தெரிந்திருக்கும். மேலும் ஸ்டாப் லாஸ் பற்றியும் தெரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இப்பொழுது நாம் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயத்தை பாப்போம். நான் சென்ற பதிவில் கூறியது போல ஒரு பங்கு வர்த்தகமாகும் நாள் எந்த விலையில் ஆரம்பித்தது (காலையில் முதல் வர்த்தகத்தின் விலை - Open), அன்றைய நாளில் எவ்வளவு அதிக விலைக்கு விற்றிருக்கிறது (Day High ), அன்றைய நாளில் வர்த்தகமாகிய குறைந்த விலை என்ன (Day Low ), அடுத்து அன்றைய நாளில் என்ன விலையில் கடைசியாக வர்த்தகம் ஆகி இருக்கிறது (Day Close ), என்பது ரொம்ப முக்கியம். பொதுவாக பங்கு சந்தை பற்றி நீங்கள் காணும் விஷயங்கள் அனைத்திலும் கண்டிப்பாக chart படம் போட்டிருக்கும். ஏனென்றால், chart இல்லாமல் பங்கு வணிகம் என்பது முடியாத விஷயம். நாம் என்னதான் ஒரு பங்கின் கடந்த கால விலையை பட்டியல் போட்டு பார்த்தாலும், ஒரு chart -ஐ பார்த்தோமென்றால் அனைத்தும் நேரடியாக ஒரு விஷுவலாக பார்த்து புரிந்து கொள்ளலாம். சரி விஷுவலா பார்க்கலாம், அதிலிருந்து என்ன புரிந்துகொள்ள முடியும்? அதை ஒரு வரியில் சொல்லிவிட முடியுமா என்றால்...இல்லை, அவ்வளவு சிம்பிளா சொல்ற விஷயமில்லை அது, ஆனால் சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல், மீண்டும் மீண்டும் chart -ஐ பார்க்கும் போது அதில் ஒரு புரிதல் கிடைக்கும். ஒரே chart -ஐ ஒரு மணி நேரம் கழித்து பார்த்தால், உங்களுக்கு வேறு மாதிரி தெரியலாம், வேறு சில விஷயங்கள் புரியலாம். எவ்வளவுதான் அனுபவ பட்ட Chart -Reader ஆக இருந்தாலும், கொஞ்சம் இடைவெளி விட்டு கவனிக்கும் போது இன்னும் புரியவரும். அதனால் chart-ஐ கவனித்து முடிவெடுக்கும் முன், chart எத்தனை விதம், அதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை எல்லாம் தெரிந்து கொள்வோம்.

Chart -இல் எத்தனையோ விதம் இருந்தாலும், நாம் பங்கு வர்த்தகத்திற்கு கவனிக்க போவது இரண்டு Chart மட்டுமே. ஒன்று Line Chart இன்னொன்று Candle Stick Chart . கீழே இரண்டு Chart கொடுத்திருக்கிறேன், முதலில் உள்ளது Line Chart இரண்டாவது Candle Stick Chart .






மேலே கொடுத்திருக்கும் இரண்டு Chart -ம் ஒரே பங்குக்கு உள்ளதுதான். line Chart ஒவ்வொரு நாளும் பங்கு என்ன விலையில் முடிகிறதோ (Close) அதை வைத்து உருவாக்கப்பட்டது. Candle Stick Chart , ஒரு நாள் ஆரம்பித்த விலை, அதிக விலை, குறைந்த விலை, முடிவு விலை (Open , High , Low , Close) இவைகளை வைத்து உருவாக்க பட்டது. இன்று இதுவரை போதும், மேலும் அடுத்த பதிவில் பாப்போம்.

(Swing Trading என்பது தொடராக வருகிறது. இந்த பதிவை மட்டும் படிப்பவர்களுக்கு இது புரியாதது போல் இருக்கலாம். அதனால் தொடரை முதலில் இருந்து படித்து பாருங்கள், புரியும்.)

Sunday, March 13, 2011

பங்கு வர்த்தகம் : Swing Trading - அறிமுகமும் வழிமுறைகளும் (பாகம் 5)

இதுவரை வந்த பதிவுகளில், பங்கு வர்த்தகத்தில் திட்டமிடுதல், Empty Zone பற்றி பார்த்தோம். சென்ற பதிவில் பங்குகள் வர்த்தகமாகும் எண்ணிக்கை (Volume), பங்கு வர்த்தகத்திற்கு Volume எவ்வளவு முக்கியம் என்பதை பார்த்தோம். நாம் ஏற்கனவே எழுதியது போல், அதிக எண்ணிக்கையில் வர்த்தகமாகும் பங்குகளை நாம் வர்த்தகம் செய்தால் வர்த்தகம் எளிதாகவும், லாபத்தில் இருக்கும் போது பங்கை விற்று லாபத்தை காசாக்குவதும் எளிதாக இருக்கும். அதற்காக அதிக எண்ணிக்கையில் வர்த்தகமாகும் பங்குகள் அனைத்துமே லாபம் தரும் என்றோ, குறைந்த எண்ணிகையில் வர்த்தகமாகும் பங்குகள் எல்லாமே லாபம் எதுவுமே தருவதில்லை என்றோ முடிவு செய்து விடக்கூடாது.

ஒரு பங்கு தினசரி எவ்வளவு வர்த்தகம் ஆகிறது என்று எப்படி தெரிந்து கொள்வது? சந்தையில் எத்தனையோ பங்குகள் வர்த்தகம் ஆகிறது. பங்கு வர்த்தகமாகும் எண்ணிக்கை மட்டுமல்ல, பங்கின் விலை கடந்த காலங்களில் எப்படி இருக்கிறது, அதனுடைய விலை ஏற்ற இறக்கங்கள் எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் கவனித்துதான் பங்குகளை வாங்கவேண்டும். இதையெல்லாம் எப்படி கவனிப்பது என்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

பங்குச்சந்தை மற்றும் பொருளாதாரம் தொடர்பான வலைத்தங்களை பார்த்தோமானால் அதில் தினமும் பங்கு சந்தை முடிந்த பிறகு அன்றைய தினத்தில் அதிகமாக வர்த்தகமான பங்குகளை பற்றி தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாக கீழே உள்ள வலைத்தளங்களை சொல்லலாம்.

http://www.moneycontrol.com/
http://economictimes.indiatimes.com/

இது மட்டுமில்லாமல், பங்குகளின் விலை ஏற்ற இறக்கங்களை பார்க்க இந்த வலைத்தளங்களில் Chart -ம் இருக்கிறது. என்னைப்பொறுத்தவரை இந்த வலைத்தளங்களை தகவல்களுக்காக மட்டுமே பயன் படுத்திக்கொண்டு, நான் ஏற்கனவே கூறியது போல www.chartnexus.com -இல், இலவசமாக Software download செய்து நமது கணினியில் chart -ஐ instal செய்து கொள்வது நல்லது. இந்த software , தினமும் அனைத்து பங்குகளின் விலை மற்றும் வர்த்தகமான பங்குகளின் எண்ணிக்கை போன்ற விவரங்களை download செய்து கொள்ளும். நாம் இதற்கென்று தனியாக ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை. நான் இந்த வலைத்தளத்தில் பயன் படுத்தும் chart அனைத்துமே www.chartnexus.com software மூலமாக உருவாக்கப்பட்டதுதான். அதனால் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் chart முக்கியம். அதை உங்கள் கணினியில் instal செய்துவிடுங்கள்.

நிறைய வர்த்தகமாகும் பங்குகளை மட்டுமே நாமும் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று சொல்கிறோமே, அதை எப்போது வாங்க வேண்டும் என்பதும், எப்போது விற்க வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்வது? ஒரு பங்கின் விலை கூடும் முன் அந்த பங்கின் Volume கூட ஆரம்பிக்கும். அதனால் volume கூடும் பங்குகளை கவனிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் volume அதிகரித்து அந்த பங்கின் விலை அன்றைய தினம் கலையில் முதல் வர்த்தகமாகும் விலையை விட அதிகமாக இருந்தால் இந்த பங்கின் விலை கூடும் என்று கணிக்கலாம். வர்த்தகம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. அதில் volume முக்கியமானது. அடுத்து அன்றைய தினத்தின் ஆரம்ப விலை (Open), அன்றைய தினத்தின் அதிக விலை (High) அன்றைய தினத்தின் குறைந்த விலை (Low) அடுத்து அன்றைய தினம் பங்கு என்ன விலையில் முடிகிறது (Close) போன்றவற்றை கவனிக்க வேண்டும். சில நாட்களில் சில பங்கின் விலை Open விலையை விட கீழே போய் இருக்காது (Open =Low ). நாம் தின வர்த்தகத்தை பற்றி இதில் பேசவில்லை. Swing Trade என்பது ஒரு பங்கை வாங்கி மூன்று முதல் ஐந்து நாட்கள் வைத்திருந்து அப்புறம் விற்பதை பற்றியது. ஆக பங்கின் விலை Open-ஐ விட மேலே இருந்து நல்ல volume இருந்தால் அதாவது முந்தைய நாளை விட அதிக volume வர்த்தகமாகி இருந்தால், அந்த பங்கை வாங்குவதில் ஆர்வம் (Buying Interest ) இருக்கிறது என்று அர்த்தம். அதனால் அப்படிப்பட்ட பங்குகளை வாங்குவது நல்லது. மேலும், வாங்கும் முன் அந்த பங்கின் Daily chart -ஐ ஒருமுறை கவனிக்க வேண்டும். கீழே உள்ளது அப்போலோ டயர்ஸ் பங்கின் chart. volume கூடினால் பங்கின் விலை கூடுவதை கவனியுங்கள்.



இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், வர்த்தக எண்ணிக்கை கூடியதும் கண்டிப்பாக பங்கின் விலை கூடும் என்று முடிவு செய்து விடக்கூடாது. பங்கின் விலை விழும்போதும், volume கூடத்தான் செய்யும். சரி விலை கூடினாலும் volume கூடுகிறது, விலை குறைந்தாலும் volume கூடுகிறதே, நாம் எப்படி வர்த்தகம் செய்வது என்ற ஒரு கேள்வி வரலாம். ஒரு பங்கின் volume கூடும் போது அதன் விலை கூட ஆரம்பிகிறது என்றால் அந்த பங்கு ஏறுமுகத்தில் இருக்கிறது என்று முடிவு செய்யலாம். விலை ஏற ஆரம்பித்த முதல் நாள் வாங்க முடியாவிட்டாலும், அந்த பங்கை நன்றாக follow செய்து அடுத்த நாள் அதாவது விலை ஏற ஆரம்பித்த இரண்டாவது நாள் வாங்கலாம். மேலும், பங்கின் volume அதிகமாகும் போது அந்த பங்கின் விலை என்ன நிலையில் இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். பங்கின் விலை ஓரளவு கீழே இருந்து, volume அதிகமாகி விலையும் கூடுகிறது என்றால், இது வாங்கும் நேரம் என்பதை முடிவு செய்யலாம். அதே பங்கின் விலை கிட்டத்தட்ட மேலே இருக்கும்போது, அதாவது முந்தைய அதிகபட்ச விலை அருகே வந்து அப்பொழுது volume அதிகமாகி விலை குறைய ஆரம்பித்தால் அது வாங்கும் தருணமல்ல விற்கும் தருணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதுசரி பங்கின் விலை ஏன் இபப்டி அடிக்கடி ஏறி இறங்கி, அதுவும் நல்ல volume -இல் ஏறுகிறது, அதைப்போல volume அதிகமாகி குறைகிறதே காரணம் என்ன?

சில தகவல்களை வைத்து, பெரிய வர்த்தகர்கள் அல்லது Professional traders பங்குகளை அதன் விலை கீழே இருக்கும்போது வாங்க ஆரம்பிக்கிறார்கள் அதனால் பங்கின் volume கூடுகிறது, Demand இருப்பதால் volume அதிகமாகி விலையும் கூடுகிறது. இபப்டி professional traders வாங்கி விலை கூடுவதை பார்த்து சிறு முதலீட்டளர்கள் மூன்று அலல்து நான்கு நாள் கழித்து அதை கவனித்து வாங்க ஆரம்பிக்கிறார்கள். அப்படி சிறு முதலீட்டளர்கள் வாங்க ஆரம்பிக்கும் போது ஏற்கனவே வாங்கியிருந்த பெரிய வர்த்தகர்கள் விற்க ஆரம்பிப்பார்கள். இந்த சூழ்நிலையில் விலை அதிக ஏற்றம் இறக்கம் இல்லாமல் ஒரு நிலையிலேயே இருக்கும். இதைத்தான் நாம் empty zone என்று சொல்கிறோம். என்னடா இது நாம் பங்கை வாங்கி நாள் ஆகிறதே இன்னும் விலை கூடவில்லையே என்று சிறு வர்த்தகர்கள் கிடைத்த லாபத்திற்கு விற்க ஆரம்பிப்பார்கள். அப்படி விற்க ஆரம்பிக்கும் போது, விலை குறைய ஆரம்பிக்கும். இதனால் விலை குறைகிறதே என்று பயந்து பங்குகளை வைத்திருக்கும் மற்ற சிறு வர்த்தகர்கள் கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு போட்ட பணத்தை சிறு லாபத்தில் அல்லது நஷ்டத்தில் விற்று விட்டு வெளியேறும் போது மீண்டும் volume கூடுகிறது. ஆக பெரிய வர்த்தகர்கள் வாங்கும் போது volume கூடி விலை கூடுகிறது. சிறு வர்த்தகர்கள் வாங்க ஆரம்பிக்கும் போது பெரியவர்த்தகர்கள் விற்று விட்டு வெளியே போய் விடுகிறார்கள். அதன் பின் சிறு வர்த்தகர்கள் கிடைத்த விலைக்கு விற்பதால் மீண்டும் volume கூடுகிறது அனால் விலை குறைகிறது. இதுதான் விலைக்கும் volume-க்கும் உள்ள உறவு. கீழே உள்ள chart -ஐ பாருங்கள் ஓரளவு இந்த விஷயங்கள் புரியும்.



அதனால் ஒரு பங்கின் volume கூடும் போது, பங்கின் விலை எந்த நிலையில் இருக்கிறது என்பதை கவனித்து வாங்க வேண்டும். இதற்கு chart -ஐ கண்டிப்பாக பார்க்க வேண்டும். அப்படி கவனித்தால் மட்டுமே பங்கின் விலை இப்போது எங்கே இருக்கிறது, பங்குகளை வாங்க இது சரியான நேரமா என்பதை எல்லாம் முடிவு செய்ய முடியும். பங்கின் விலை ஏற ஆரம்பிக்கும் போதே வாங்கி விட வேண்டும். நாம் பங்குகளை வாங்கும் விலையை Entry Level என்று சொல்கிறோம். சரியான Entry Level , போதுமென்ற மனதுடன் ஓரளவு லாபம் வந்ததும் விற்று விட்டு வெளியேறுவது என்னும் விஷயத்தில் கவனமாக இருந்தால், பங்கு சந்தையில் லாபம் பார்க்கலாம்.

அடுத்த பதிவில் வேறு சில விஷயங்களை பார்ப்போம்.

Monday, February 28, 2011

பங்குசந்தையும் திருமண வாழ்க்கையும்

ரொம்ப நாள் ஆகி போச்சி, பதிவு எழுதி. அதனால், இனி வாரம் ஒரு பதிவு போடலாம்னு ஒரு தீர்மானம் எடுத்திருக்கிறேன், புது வருட தீர்மானம் போல் இல்லாமல் உண்மையாகவே வாரம் ஒரு பதிவு கண்டிப்பா எழுதிடலாம்னு இருக்கேன். சரி இது வரை நம் வலைத்தளத்தில் இருக்கும் பதிவுகளை ஒருமுறை ஒரு Review பண்ணிடுங்க, நானும் continuity -ஐ miss பண்ணாமல் வாரம் ஒரு பதிவு இடுகிறேன்.

அதற்கு முன், ஒரு சின்ன Fresh -up பதிவு. ச்சும்மா ஜாலியா...!!!

இந்த பதிவுக்கும் பங்கு சந்தைக்கும் தொடர்பில்லைன்னு நினைக்க கூடாது. கண்டிப்பா தொடர்பு உண்டு. அதனால் relax -ஆ படிங்க.

இந்த பதிவு, திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகப்போகும் ஆண்களுக்காக. (இது எல்லாமே சொந்த சரக்கு இல்லை, நெட்-இல் அங்கங்கே படிச்சதையும் சேர்த்திருக்கிறேன்..). வாழ்க்கையில் திருமணம் என்பது ஒரு தவிர்க்க முடியாத விபத்து.. அதை அனேகமாக அனைவரும் சந்திச்சிதான் ஆகணும். ஒரு சிலர் ரொம்ப அதிர்ஷ்டசாலி-யா இருப்பாங்க நம்ம வாஜ்பேயி, அப்துல்கலாம், தமிழகத்தில் இல.கணேசன் இவங்களை மாதிரி. இருந்தாலும் திருமணம் என்பது தவிர்க்க முடியாதது தான். அது ஒரு விளக்கு என்றால் ஆண்களெல்லாம் விட்டில் பூச்சி மாதிரி. கல்யாண வயதில் எப்படியும் கல்யாணம் செய்தே ஆகணும்னு துடியா துடிப்பாங்க... அதாவது விட்டில்பூச்சி விளக்கு வெளிச்சத்தில் விழ ஆசைப்படுவதை போல...விழுந்தப்புறம் விட்டில்பூச்சி நிலை என்னன்னு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை..!!! ஏன் அப்படி சொல்றேன்னா, கல்யாணம் ஆகும் வரை ஆண் என்பவன் பாதி மனிதன் தான், கல்யாணம் ஆனபிறகு ....He is finished ...!!! அட அப்படி எல்லாம் இல்லைப்பா, நாங்களெல்லாம் still alive -னு என்னை மாதிரி நிறைய பேர் சொல்லுவாங்க.. அவங்களும் இதை கண்டிப்பா படிக்கணும். ஏன்னா, still alive -னு சொல்றதை விட happily living -னு சொல்லணுமே.. அப்படி சொல்லணும்னா அதுக்கு சில விதிமுறைகள் இருக்கிறது (பங்குச்சந்தை Trading Rules மாதிரி).

முக்கியமான விதி என்னன்னா, சாப்பிடும் போது சமையலின் சுவை எப்படி இருந்தாலும் ரொம்ப நல்லா இருக்குதுன்னு கண்டிப்பா பாராட்டணும். அப்படி பாராட்டும் போது தலையை குனிஞ்சிகிட்டே பாராட்டிட்டா ரொம்ப நல்லது... முகத்தில் இருக்கும் வலி மனைவிக்கு தெரியாது பாருங்க...!!! (பி.கு.: வீட்டில் மனைவி சமைப்பதாக இருந்தால் மட்டுமே இது பொருந்தும்). இந்த சமையல்னு வரும்போது அது பற்றி நிறைய பேசணும். கொடுக்கும் குழம்பு மஞ்சள் நிறத்தில் இருந்தால் நீங்க உடனே இது பருப்பு குழம்புன்னு முடிவு பண்ணிட கூடாது. அந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும் வஸ்து, கொஞ்சம் கெட்டியாக இருந்தால் அது பருப்பு குழம்பு, அதில் நிறைய அல்லது ஓரளவு காய்கறிகள் இருந்தால் அதுக்கு பேர் சாம்பார், அதுவே வெறும் தண்ணி மாதிரி இருந்தால் அதுக்கு பேர் ரசம். அதனால் நிறத்தை வைத்து தவறான முடிவு எடுத்து குழம்பின் பேர் சொல்லாமல், நிதானமாக ஆராய்ச்சி செய்து பாராட்டினால் மோசமான பின்விழைவுகளை கணிசமாக குறைக்கலாம் (அதுதாங்க Stop Loss மாதிரி).

புத்தாடை எடுக்க ஜவுளிக்கடைக்கு நீங்களும் உங்கள் மனைவி கூட போய் இருந்தால், அவங்க ஏதாவது ஒரு புடவை எடுத்து (அதுக்கே எவ்வளவு நேரம் ஆகும் என்பது வேறு விஷயம்... சில சந்தர்பங்களில் வாங்கிய ஷேர் அப்படியே Empty Zone -இல் இருப்பது போல் நீங்க ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டும்) ஏங்க இது நல்லா இருக்குதான்னு கேட்டாங்கன்னு வைங்க, உடனே ரொம்ப அழகான செலக்க்ஷன், உனக்கு இது ரொம்ப அருமையா இருக்கும்னு சொல்லி பாராட்டி டக்-னு பில் போட கூட்டிட்டு போய்டணும். இதுதான் நல்ல கணவனுக்கும் அழகு, நல்லா இருக்கணும்னு நினைக்கும் கணவனுக்கும் அழகு. அதை விட்டுட்டு இது உனக்கு அவ்வளவு நல்லா இருக்காதே, வேறே ஏதாவது பாரேன்னு சொல்லிட்டீங்கன்னா, மீண்டும் நீங்க ஒரு Empty Zone -இல் இருக்க வேண்டிய சூழ்நிலை வரும், அது மட்டுமல்ல, ஏங்க உங்களுக்கு பிடிக்கலைன்னு சொன்னீங்களே அந்த புடவை எனக்கு பிடிசிருப்பதால், எனக்காக அதையும், உங்களுக்கு பிடிக்கிற மாதிரி இதையும் சேர்த்து ரெண்டு புடவை எடுத்துட்டேங்கன்னு சொல்லி உங்களை மயக்கமடைய வைக்க வாய்ப்புகள் ரொம்ப அதிகம். (Empty Zone தாண்டி ஷேர்-இன் விலை கீழே விழுவதை போல ஒரு சூழ்நிலை இது... அப்படி விழும்போது நம்மால் எப்படி எதுவுமே செய்ய முடியாதோ அதைப்போல் ஆண்களான நம்மால் இந்த சூழ்நிலையில் எதுவுமே சொல்ல முடியாது....)

அடுத்து, வேலைக்கு போய்ட்டு நீங்க உங்க வீடு இருக்கும் தெருவில் நுழையும்போதே நல்ல சமையல் வாசம் அடிச்சதுன்னு வைங்க, நீங்க ரொம்ப கவனமா இருக்கணும், ரொம்ப
Alert -ஆ மனதை திடப்படுத்திக்கணும். அப்படி திடப்படுத்தப்பட்ட மனதோட அடிமேல் அடி வைத்து உங்க வீட்டை நீங்க நெருங்க நெருங்க சமையல் வாசம் இன்னும் கூடினால், நீங்க கலங்க கூடாது. இந்த வாசம் நம் வீட்டில் இருந்து வருதுன்னு நினைச்சி சந்தோஷ பட்டுடவும் கூடாது, நம் வீட்டுக்கு அடுத்த வீட்டிலிருந்து வருதோன்னு.... வருத்தப்பட்டுடவும் கூடாது. உங்க வீட்டிலிருந்து வந்தால் அதில் சந்தோஷத்தை விட கண்டிப்பா உங்க purse -இன் எடை வேகமா குறையப்போகுதுன்னு அர்த்தம், ஏன்னா உங்க மனைவி குடும்பத்தில் உள்ளவர்கள் விருந்துக்கு வந்திருப்பார்கள், அந்த மாதிரி நாட்களில் மட்டுமே நீங்க உங்க கல்யாண வாழ்க்கையிலேயே கண்டறியாத சுவையும், வாசமும் மிகுந்த சாப்பாடு உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் அதிகம். நல்லா கவனிங்க வாய்ப்புகள் அதிகம்னுதான் சொன்னேன், கண்டிப்பா கிடைக்கும்னு சொல்ல முடியாது. கிடைக்குமா இல்லியா என்பது நீங்க வீட்டில் நுழையும் நேரத்தை பொறுத்து. Late -ஆ வீட்டுக்கு வந்தால் வீட்டில் வாசம் மட்டுமே இருக்கும், உங்களுக்கு வழக்கம் போல், சாதமும், மஞ்சள் கலரில் தண்ணியா இருக்கும் வஸ்துவும் கிடைக்கும்னு நம்பலாம் (Entry Level எவ்வளவு முக்கியம்னு இதை வச்சி தெரிஞ்சிக்கலாம். Late Entry -இல் லாபம் குறைவு, சில நேரம் கிடைக்காமலே போகலாம்) இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் நீங்க பொறுமையை கண்டிப்பா கடைபிடிக்கணும். இதை எல்லாம் மனதில் வைத்துதான் வள்ளுவர் சொல்லி இருக்கார், "யாகாவாராயினும் நாகாக்க...காவாக்கால் - - - - - பட்டு"..ன்னு..

மனைவி வீட்டிலுள்ளவர்கள்னு சொல்லும்போது மச்சினி நினைவுக்கு வந்திருக்குமே உங்களுக்கு? மச்சினி என்பது Futures and Options Trade பண்ற மாதிரி High Risk Area. மச்சினியிடம் பேசலைன்னா மனைவி கோவப்படுவாங்க, என் வீட்டிலுள்ளவங்க கூட நீங்க ஒழுங்கா பேசறதே இல்லைன்னு. அதனால் நீங்க கண்டிப்பா பேசியாகணும். அதேநேரம் அதிகம் பேசிட்டீங்கன்னா அது மிகப்பெரிய ரிஸ்க். உங்க மனைவி உங்களை ஒரு CIA Agent -இன் கண்ணோட்டத்தில் இருந்து கவனிப்பாங்க. ஆக பேசினாலும் ரிஸ்க் பேசாட்டியும் ரிஸ்க், அளவோட இருக்கணும் - அதாவது F&O Trading மாதிரி.

ஒரு விழாவில் பேசும் போது, டைரக்டர் செல்வமணி சொன்னார், காதலிக்கும் போது அவருக்கும், நடிகை (அவரது இன்றைய மனைவி) ரோஜாவுக்கும் சண்டை வருவதே இல்லியாம், கல்யாணம் ஆகி மூன்று நாட்கள் கூட அவங்களால சண்டை போடாமல் இருக்க முடியலியாம். அப்போதான் யோசிச்சி பார்த்து அவர் ஒரு முடிவுக்கு வந்தாராம், மனைவியை ஜெயிக்க முடியாது, அதுக்கு முயற்சி பண்ணி கஷ்டப்படறதை விட, அவங்களிடம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போய்டறது நல்லதுன்னு. இதேதான் பங்குசந்தையும். சந்தையை நம்மால் ஜெயிக்க முடியாது, அதன் போக்கில் நாமும் போய்டணும்.

பங்கு சந்தை எந்த திசை நோக்கி போகுதுன்னு யாராலுமே உறுதியா கணிக்க முடியாது. நல்ல பட்ஜெட்-னு நினைச்சி ஷேர் வாங்குவோம், அடுத்த நாளே தலைகீழா விழும். சரி உலக சந்தை நிலவரம் சரி இல்லைன்னு அமைதியா இருக்க முடிவு செய்திருப்போம் அப்போதான் கிடு கிடுன்னு வேகமா சந்தை மேலே போய் இருக்கும். இதைபோல்தான் மனைவியும். என்ன சொல்ல வரேன்னா, கணிப்புகள் தவற வாய்ப்புகள் அதிகம், சந்தையில் தவறினால் பணம் நஷ்டம், வீட்டில் தவறினால் மனதுக்கு கஷ்டம் (சில சமயம் இதில் பணத்துக்கும் கஷ்டம் வரலாம், புடவை எடுக்க போன மாதிரி...!!!). அதனால் அதிகம் கணிப்பதை விட்டுட்டு, அதன் போக்கிலே போயிட்டா நல்லது.

சரி பதிவு ரொம்ப பெருசா போகுது அதனால் மேலே சொன்ன சில விதிகளோட இந்த பதிவை முடிச்சிக்கலாம். இன்னொரு முறை வாய்ப்பு இருந்தால் மேலும் சில விதிகளை பாப்போம். ஐயோ....ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்... உங்களுக்கு பிடிக்குதோ இல்லியோ...தினமும் ஒருமுறை உங்கள் மனைவியிடம்... I Love You -னு மறக்காம சொல்லிடுங்க...காலையிலே வீட்டில் கந்தசஷ்டி கவசம் சொல்றமாதிரி கண்டிப்பா சொல்லிடுங்க. (நான் தான் என் மனைவியை கல்யாணம் பண்ணிகிட்டேனே அதுக்கப்புறம் என் மனைவியை லவ்வும் பண்ணனுமான்னு குறுக்கு கேள்வி எல்லாம் கேட்க கூடாது. I Love You சொல்லுங்கன்னு தானே சொன்னேன்....!!!!)

சரி அடுத்த பதிவில் வழக்கமான பங்குச்சந்தை விஷயங்களை பாப்போம்.
Page copy protected against web site content infringement by Copyscape