You will make it....

You will make it....

Saturday, October 3, 2009

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 13

பங்குச்சந்தை கடந்த ஆறு மாதங்களில் நல்ல வளர்ச்சி அடைந்து, இப்போது மீண்டும் ஒரு Correction இருக்கும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் நிறைய பங்குகள் நல்ல விலை கூடி முதலீட்டளர்களுக்கு நல்ல வருமானம் கொடுத்திருக்கிறது. நிறைய பேர் இந்த ஆறு மாத வளர்ச்சியை சரியாக பயன் படுத்த முடியாமல் போய் இருக்கலாம். மேலும், அடுத்த Correction ஆன பிறகு பங்குகளை வாங்குவது பற்றி பார்க்கலாம்.

நாம் ஏற்கனவே இந்த தொடரில் எழுதியது போல அடிப்படை வலுவாக உள்ள பங்குகளை வாங்க வேண்டும். மேலும் இந்த ஆறு மாதத்தில் சில பங்குகள் நல்ல விலை உயர்வு அடைந்திருக்கிறது. அப்படி பட்ட பங்குகள் இனி விலை குறையும் போது வாங்குவது மீண்டும் அதை போல நல்ல லாபம் தரலாம். அதனால் கடந்த ஆறு மாத கால வளர்ச்சியில் நல்ல விலை உயர்ந்த பங்குகளை தேர்ந்தெடுத்துக்கொண்டு அவை விலை குறையும் போது நாம் வாங்கலாம். முதலில் ஒரு குறிப்பிட்ட துறையை தேர்ந்தெடுத்துக்கொண்டு, அந்த துறையில் இருக்கும் பங்குகளை ஒரு ஒப்பீடு செய்து பார்த்து, அவற்றில் நல்லதை வாங்கலாம்.

உதாரணமாக கட்டுமானத்துறை ஐ எடுத்துக்கொள்வோம். அதில் இந்த ஆண்டு மார்ச் இல் நன்கு விலை குறைந்திருந்த பங்குகளை முதலில் எடுத்துக்கொள்வோம். நன்கு விலை குறைந்த பங்கு என்று எப்படி கண்டு பிடிப்பது? மார்ச் இல் 52 வாரம் குறைந்த விலையை நெருங்கிய பங்குகள், நன்கு விலை குறைந்திருக்கிறதாக எடுத்துக்கொண்டு, அந்த பங்குகளின் விலையை அக்டோபர் 01, 2009 விலையுடன் ஒப்பிட்டு பார்த்து, அதில் அதிக அளவு அதாவது அதிக சதவிகிதம் விலை உயர்ந்த பங்குகளை, இனி விலை குறையும் போது வாங்கலாம். கீழே கொடுத்திருக்கும் அட்டவணையை பார்த்தல் உங்களுக்கே புரியும் (கட்டுமானத்துறையின் அனைத்து பங்குகளையும் இந்த அட்டவணையில் சேர்க்கவில்லை.)



முதலீட்டுக்கு பங்குகளை தேர்ந்தெடுக்கும் வழிகளில் இன்றைய சூழ்நிலையில் இதுவும் ஒரு வழி. இந்த முறையை எப்பொழுதும் பயன்படுத்த முடியாது. ஏனென்றால், கடந்த ஆண்டு பங்குச்சந்தை சந்தித்த சரிவால் அனைத்து பங்குகளும் தலைகீழாக விழுந்திருக்கிறது. அப்படி விழுந்த பங்குகள், இந்த ஆறு மாதத்தில் உயர ஆரம்பித்திருக்கிறது. ஆக, சந்தை நல்ல நிலையில் முன்னேறினால் இந்த பங்குகள் விலை கூடும் என்று நம்பி வாங்கலாம். ஏனென்றால், சந்தை அதல பாதாளத்தில் இருக்கும் போது சரிவை சந்தித்த பங்குகள், சந்தை உயரும் போது வேகமாக விலை கூடுகிறது என்றால், அவை நல்ல பங்குகளாகத்த்தானே இருக்க வேண்டும்? அது மட்டுமில்லாமல், சந்தை குறையும் போது கூட விலை கூடிய பங்குகள் சில உண்டு. அப்படி பட்ட பங்குகள் விலை குறையவில்லை என்பதால் அவை எதிர்காலத்தில் எவ்வளவு கூடும் என்று கணிப்பது கொஞ்சம் கஷ்டமான காரியமாக இருக்கலாம். (உதாரணம் FMCG Sector - MARICO , HUL, etc). அதனால் சந்தை குறையும் போது நல்ல விலை குறைந்து, சந்தை கூடும்போது உயரும் பங்குகளை வாங்கினால், சந்தை மீண்டும் அடுத்த உயர்வுக்கு வரும் போது, இந்த மாதிரி பங்குகள் நல்ல விலை கூடும். ஒரு விஷயத்தை இப்போது நாம் நினைவில் கொள்ள வேண்டும் - 2010 இல் BSE 21,000௦௦௦ புள்ளிகளை தொடும் என்பது கணிப்பாக இருக்கிறது. எனவே, நல்ல பங்குகளாக தேர்ந்தெடுத்து, வரும் Correction -இல் குறைந்த விலையில் வாங்கலாம்.

இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணை ஒரு உதாரணத்திற்கு மட்டுமே. இது பங்கு பரிந்துரை அல்ல. உங்களுக்கு எந்த Sector -இல் முதலீடு செய்ய வேண்டுமோ அதிலுள்ள பங்குகளை நீங்களே தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். இப்படி ஒவ்வொன்னா தேடி பார்த்துதான் பங்குச்சந்தையில் பணம் பார்க்க முடியுமா என்று நீங்கள் நினைக்கலாம். சம்பாதிக்கனும்னா கொஞ்சம் வேலையும் செய்யணுமே...!!!

சந்தை இப்படி ஒரு சரிவை சந்தித்திருக்கா விட்டால் இந்த முறையில் பங்குகளை தேர்ந்தெடுப்பது ஆபத்தாக முடியும்.

Thursday, September 24, 2009

பங்கு வர்த்தகம் : Swing Trading - அறிமுகமும் வழிமுறைகளும் (பாகம் 2)

PLAN A TRADE, TRADE THE PLAN


சென்ற பதிவில் Swing Trading என்றால் என்ன என்று பார்த்தோம். இந்த பதிவில் வர்த்தக திட்டம் பற்றி பார்ப்போம். ஏனென்றால் திட்டத்துடன் செயல் படும் மனிதனை விட திட்டமில்லாமல் செயல்படும் மனிதனின் தவறுகள் அதிகமாக இருக்கும் (இது பங்கு வர்த்தகத்திற்கு மட்டுமல்ல அனைத்திற்கும் பொருந்தும்). திட்டமிடுதல் மட்டும் முக்கியமல்ல அந்த திட்டத்தின் படி கொஞ்சமும் தவறாமல் நடக்க வேண்டும். பங்கு வர்த்தகத்தில் ஒரு Famous Quote உண்டு. plan a Trade , Trade the plan . எப்படி வர்த்தகம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொள்ளுங்கள், அப்புறம் அந்த முடிவுப்படியே வர்த்தகம் செய்ய வேண்டும் - அதிலிருந்து கொஞ்சமும் விலகக்கூடாது.அந்த அளவு மன உறுதியை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இனி திட்டமிடுதல் பற்றி பாப்போம். நன்றாக கவனத்தில் கொள்ளுங்கள் வர்த்தகம் செய்வதற்கான பதிவில் நாம் இருக்கிறோம். வர்த்தகம் என்றால் ஒரு பங்கை வாங்கி 3 முதல் 5 நாட்களில் விற்பதற்கான வர்த்தக திட்டம். சில நேரங்களில் ஒரு நாளில் கூட விற்றுவிடும் சூழ்நிலை வரலாம். இந்த மிகமிக குறுகியகால வர்த்தகத்தை தான் Swing Trading என்கிறோம். அதனால் Swing Trading இல் Timing ரொம்ப முக்கியம். இதற்கு நாம் Trading Rules வரையறுத்துக்கொள்வது தவிர்க்க முடியாதது. கீழ்க்கண்ட Trading Rules or Plan, Swing Trading -கு அவசியம்.

1. லாப இலக்கு (Targeted Profit)
2. சொந்த பணத்தில் தான் வர்த்தகம் செய்ய வேண்டும்
3. குறைந்த அளவு பணத்தில் வர்த்தகத்தை ஆரம்பிக்க வேண்டும்
4. பங்கை வர்த்தகம் செய்யுங்கள் - காதல் கொள்ளாதீர்கள்
5. அடுத்த நாள் வர்த்தகத்துக்கு தினமும் பங்குகளை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்(Watchlist)
6. அடுத்தவர்களின் பரிந்துரைகளை கண்மூடித்தனமாக செயல்படுத்த வேண்டாம்
7. வர்த்தகத்துக்கு இடையே அவசர முடிவுகள் வேண்டாம்
8. லாபத்தை போல் நஷ்டத்தையும் ஏற்க பழகிக்கொள்ளுங்கள் (Stop Loss)
9. உறுதியான நம்பிக்கை இல்லை என்றால் வாங்காதீர்கள்
10.நீங்கள் செய்த வர்த்தகத்தை தினமும் குறித்துக்கொள்ளுங்கள் (Record Keeping)
11.நம்முடைய பணத்தை எப்படி நிர்வகிப்பது? (Managing your money)

இனி ஒவ்வொன்றாக கவனிப்போம்.

லாப இலக்கு (Targeted Profit)

பொதுவாக பங்குகளை வாங்கியவர்கள் சொல்லும் ஒரு வார்த்தை - நான் வாங்கிய பின் இந்த பங்கு 10% லாபத்தில் இருந்தது, ப்ச் விற்காமல் விடுட்டுட்டேன், இப்போ 20% நஷ்டத்தில் இருக்கிறது என்பார்கள். இதற்கு என்ன காரணம்? இதே மாதிரி அனுபவங்கள் எனக்கும் நிறைய இருந்திருக்கிறது. அன்று விற்றிருக்கலாமே என்று இன்று நினைத்தால் ஆகப்போவது ஒன்றுமில்லை. அதனால் நம்முடைய லாபத்திற்கு நாம் ஒரு இலக்கு நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். நாம் வாங்கிய பங்கு, நம்முடைய நிர்ணயிக்கப்பட்ட லாப இலக்கை அடைந்ததும் விற்றுவிட வேண்டும். இந்த பங்கு இன்னும் விலை கூடும் கூடும் என்று நினைத்து, விற்காமல் வைத்திருக்க கூடாது. ஒரு வேளை நாம் வைத்திருக்கும் பங்கு இன்னும் விலை கூடும் என்று நாம் உறுதியாக நம்பினால், பாதி பங்குகளை நம்முடைய இலக்கில் விற்று விட்டு, மீதி இருப்பவற்றை அதிக லாபத்திற்காக வைத்திருக்கலாம். சில நேரம் நாம் விற்ற பங்குகள் விலை கூடலாம், அதற்காக வருத்தப்பட கூடாது. அதே பங்கு நாம் விற்றபின் விலை குறைந்தால் நாம் சந்தோஷ பாடுவோமே, அதைப்போல் விற்றபின் விலை கூடி விட்டதே என்று வருத்தப்பட கூடாது. நமக்கு நம்முடைய லாபம் வந்து விட்டது. போதும் என்று மன நிறைவாக அடுத்த வர்த்தகத்தை கவனிக்க வேண்டும்.

என் நண்பர் ஒருவர் வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். அவரிடம் கேட்டேன், எப்படி லாபத்தை புக் பண்ணுகிறீர்கள் என்று. அதெல்லாம் பெரிய விஷயம் இல்லை, ஒரு பங்குக்கு ஐமபது ரூபாய் லாபம் வந்ததும் விற்று விடுவேன் என்றார். அவர் வாங்கும் பங்குகள் அனேகமாக அதிக விலை உள்ள பங்குகளாக இருக்கும், அவர் வர்த்தகத்திற்கு ஒதுக்கி இருக்கும் பணமும் அதிகம். அதனால் ஐமபது ருபாய் என்றால் ஒரு வர்த்தகத்தில் 5000 முதல் 10000 ரூபாய் வரை லாபம் பார்ப்பார். ஆக அவருக்கு ஒரு இலக்கு - ஐமபது ரூபாய் கூடினால் போதும் என்பது - அந்த ஐம்பது ருபாய் லாபம் ஒரு நாளில் வரலாம் அல்லது ஒரு வாரம் ஆகலாம். இப்படி ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் ஒரு இலக்கு வைத்திருப்பார்கள். லாபத்தை ரூபாயில் நிர்ணயிப்பதை விட, சதவீதத்தில் நிர்ணயித்துக்கொள்ளலாம்.

நாம் Swing Trading செய்யும் போது, குறைந்த பட்ச லாபமாக ஒரு நாளைக்கு 2% அல்லது வாரத்திற்கு 5 முதல் 10 சதவீத லாபம் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 2% என்று இலக்கு நிர்ணயித்து கொண்டபின், சில நேரம் ஒரே நாளில் 5% கூடலாம், அல்லது நாம் 2% லாபத்தில் விற்ற பங்கு அடுத்த நாள் மேலும் 2% கூடலாம். ஒரு பங்கை விற்றுவிட்ட பிறகு, அது கூடுகிறதே என்று கவலைப்படுவதை விட, விற்று வந்த பணத்தில் விற்ற அன்றே அடுத்த பங்கில் முதலீடு செய்து விட வேண்டும். சில நேரங்களில் வாங்கிய அன்றே 2% லாபம் கிடைத்து விடும், விற்று விட்டு அடுத்த பங்கை வாங்குவது நல்லது அல்லது பாதியை விற்றுவிட்டு, மீதியை அடுத்த நாளுக்கு வைத்துக்கொள்ளலாம். சில பங்குகள் நாம் விற்ற பின் கூடிக்கொண்டிருந்தால், அந்த பங்கு இன்னும் கூடும் என்று நாம் உறுதியாக நம்பினால், அதே பங்கை மீண்டும் வாங்கி விற்பதில் தவறு இல்லை. வாங்குவதற்கு முன், விலை உயர்வதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. அதை தெரிந்து கொள்ள இன்னும் நிறைய விஷயங்களை நாம் பார்க்க வேண்டும், தொடர்ந்து பதிவை பாருங்கள்.

ஒவ்வொருவரும் ஒரே பங்கில் நான் 50% லாபம் பார்த்தேன் என்று சொல்கிறார்களே, இங்கே நாம் 2% பற்றி பேசுகிறோமே, இதெல்லாம் ஒரு லாபமா என்ற எண்ணம் சிலருக்கு வரலாம். பலதுளி பெருவெள்ளம் என்பது போல் ஒரு நாளைக்கு 2% என்றால், சராசரியாக ஒரு மாதத்திற்கு இருபது நாட்கள் பங்குச்சந்தை உண்டு. திட்டமிட்டபடியே லாபமீட்ட முடிந்தால் மாதத்திற்கு 40% லாபம் கிடைக்கும். நாம் செய்யும் அத்தனை வர்த்தகமும் லாபத்தில் முடியும் என்று சொல்ல முடியாது. சில பங்குகளை ஒரு சதவீத லாபத்தில் விற்க வேண்டியிருக்கலாம், சில பங்குகளில் ஒரே நாளில் 5% லாபம் கிடைக்கலாம், சில பங்குகளை நஷ்டத்தில் விற்க வேண்டியிருக்கலாம். அதனால் சராசரியாக பத்து வர்த்தகத்தில், ஏழு லாபத்தில் முடிந்தால் கூட, மாதத்தில் 20 நாட்கள் பங்குச்சந்தை உண்டு என்பதால், சராசரியாக மாதத்திற்கு 20% முதல் 25% லாபம் கிடைக்கும். மாதத்திற்கு 20% என்பது மிகப்பெரிய லாபம். நம்புங்கள் மாதத்திற்கு 20% என்பது என்னுடைய மிக குறைந்த மதிப்பீடு.

அதனால் திட்டமிடுதலில் முதல் விஷயமாக லாப இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள். இந்த லாப இலக்கு என்பது Swing Trading -இல் மட்டுமில்லாமல் அனைத்து வர்த்தகத்திலும் அவசியமானது. மற்ற விஷயங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

Wednesday, September 23, 2009

பங்கு வர்த்தகம் : Swing Trading - அறிமுகமும் வழிமுறைகளும் (பாகம் 1)

இது பங்கு வர்த்தகம் பற்றிய புதிய தொடர். எந்த ஒரு பங்குமே தொடர்ந்து ஏறுவதும் இல்லை தொடர்ந்து இறங்குவதும் இல்லை. எந்த ஒரு பங்கை எடுத்துக்கொண்டாலும், சிலநாட்கள் ஏறுமுகமாகவும் சிலநாட்கள் இறங்குகுமுகமாகவும் தான் இருக்கிறது. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Chart-ஐ பாருங்கள். இதில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை கவனியுங்கள். இந்த ஏற்ற இறக்கத்தில் லாபம் பார்ப்பதைத்தான் வர்த்தகம் என்கிறோம்.



சரி இந்த ஏற்ற இறக்கங்களை எப்படி நாம் முன்கூட்டியே தெரிந்துகொள்வது? நாம் மேலே பார்க்கும் Chart ஏற்கனவே நடந்து முடிந்த விஷயம். பங்குகள் ஏறிய பிறகு அதை பார்ப்பதால் உடனடியாக நாம் எந்த பலனும் அடைய முடியாதே. ஒரு பங்கு ஏறும் முன் அல்லது இறங்கும் முன் அதை எப்படி தெரிந்து கொள்வது? தெரிந்துகொண்டால்தானே நாம் அதில் வர்த்தகம் செய்து லாபம் பார்க்க முடியும். இந்த பதிவிலிருந்து தொடர்ந்து வர்த்தகம் பற்றி பார்க்கலாம்.

மீண்டும் மீண்டும் நான் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லிக்கொள்கிறேன், இந்த பதிவின் நோக்கம் பரிந்துரை செய்வது அல்ல. உதாரணத்துக்காக நாம் சில பங்குகளை பார்க்கலாம், சில பங்குகளின் chart ஐ analyse பண்ணலாம், ஆனால் இதில் எங்குமே நான் பரிந்துரை செய்யப்போவது இல்லை. அதனால் நாம் இதில் குறிப்பிடும் பங்குகளை பரிந்துரை என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்.

பங்கு வர்த்தகம் என்று எடுத்துக்கொண்டால் அதில் நிறைய வகை இருக்கிறது. அவை என்ன என்று முதலில் பார்ப்போம்.

1. குறுகிய கால வர்த்தகம் (Short Term Trading)
2. Swing Trading
3. Intra-Day அல்லது Day Trading.

நமது பதிவில் நாம் பார்க்கப்போவது Swing Trading. முதலில் Swing Trading என்றால் என்ன என்று கவனிப்போம். எந்த ஒரு பங்கும் தொடர்ந்து ஏறுவதும் இல்லை, தொடர்ந்து இறங்குவதும் இல்லை. ஒரு பங்கு குறைந்த பட்சம் 3 முதல் 5 நாட்கள் வரை கூடும். அதன் பின் சிறிய இறக்கம் இருக்கும், மீண்டும் கூட ஆரம்பிக்கும்.- இது அந்த பங்கு ஏறுமுகத்தில் இருக்கும் போது. அதே மாதிரி, இறங்குமுகத்தில் இருக்கும் போதும் ஏற்ற இரக்கத்தோடு தான் இருக்கும். மேலே இருக்கும் chart-ஐ கவனியுங்கள். Rs.312.75 முதல் Rs.358.65 வரை கூடுகிறது, மீண்டும் Rs.305.25 வரை இறங்கி Rs.361.85 வரை கூடுகிறது. மீண்டும் Rs.305.95 வரை இறங்கி Rs.338.40 வரை கூடுகிறது. அடுத்து Rs.326.70 வரை இறங்கி அப்புறம் மேல்நோக்கி செல்கிறது. சுங் ற்றடிங் என்பது முதலில் Rs.313-இல் வாங்கி Rs.358 வரும்போது விற்றுவிட்டு, அடுத்து Rs.305.25 வரும்போது வாங்கி மீண்டும் Rs.360 வாக்கில் விற்று விட்டு மீண்டும் Rs.306 வாக்கில் வாங்கி அடுத்த உயர்வு வரும் போது விற்று இப்படி அடிக்கடி ஒரு பங்கை வர்த்தகம் செய்வது தான் Swing Trading. ஆக Swing Trading என்பது ஒரு பங்கில் ஏற்படும் மிக குறுகிய கால ஏற்றத்தாழ்வுகளை வைத்து லாபம் பார்ப்பது என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். எந்த பங்கையும் மிக சரியாக குறைந்த விலையில் வாங்குவது என்பதும் மிக சரியான உயர்வில் விற்பது என்பதும் கண்டிப்பாக நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றாலும், ஓரளவு குறைந்த விலை அருகே வாங்கி அதிக விலைக்கு அருகே விற்று லாபம் பார்ப்பது தான் Swing Trading என்பது.

கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, அனால் இது சாத்தியமா என்று கேட்கத்தோன்றும். சாத்தியம் தான் என்பதை இனி வரும் பதிவுகளில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம். அனைவருக்குமே பங்குச்சந்தையில் லாபம் பார்க்க வேண்டும் என்பதுதான் ஆவல், ஆனால் எப்படி சம்பாதிக்க வேண்டும் என்று சரியான வழிமுறைகள் தெரியாமலும், சரியான வழிகாட்டுதல் இல்லாமலும் புரோக்கர் சொன்னார் என்று பங்குகளை வாங்கி சில நேரம் லாபத்திலும், பல நேரம் நஷ்டத்திலும் வர்த்தகம் செய்து முடிவில் பங்குச்சந்தை சூதாட்டம், நான் பணத்தை இழந்துவிட்டேன் என்று சந்தையை குறை கூறிக்கொண்டிருக்கிறோம். பங்குச்சந்தை யாரையும் வா வா என்று அழைப்பது இல்லை, அது தன்போக்கில் போய்க்கொண்டிருக்கிறது, நாம் தான் கவனமாக நம்முடைய முதலை (Capital) பாதுகாத்து அதன் மூலம் லாபம் அடையும் வழிகளை தெரிந்துகொள்ள வேண்டும். பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களை விட வர்த்தகம் செய்கிறவர்களே அதிகம்.

Swing Trading செய்ய என்னென்ன தேவை என்றால் கீழ்க்கண்ட விஷயங்களை சொல்லலாம்.

1. ஒரு நல்ல Charting Software
2. கொஞ்சம் Technical Analysis Knowledge
3. குறைந்தபட்சம் தினமும் (பங்குச்சந்தை முடிந்த பிறகு) இரண்டு மணி நேரம்
4. Demat Account
5. அவரவர் தகுதிக்கேற்ப முதல் (Capital Money)
6. ஒரு நல்ல வர்த்தக திட்டம் (Trading Plan)
7. Trading Plan இல் இருந்து கொஞ்சம் கூட விலகிப்போகாத மனஉறுதி

மேலே கூறியவற்றில் 3,4,5,& 7 இவை எல்லாம் அவரவர் சம்மந்தப்பட்டது. அதனால் மற்ற விஷயங்களை பற்றி நாம் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

முதலில் Charting Software. இன்றைய இன்டர்நெட் உலகில் software பஞ்சம் இல்லை. ஆனால் நாம் வைத்திருக்கும் சாப்ட்வேர் நம்முடைய analysis கு உகந்ததாக இருக்க வேண்டும். அந்த வகையில் www.chartnexus.com என்னை பொறுத்த வரை ஒரு நல்ல choice. இது ஒரு இலவச சாப்ட்வேர் - download செய்துகொள்ளலாம். இதில் தினமும் பங்குச்சந்தை முடிந்ததும் அனைத்து பங்குகளுக்குமான விலை விபரங்களை download செய்துகொள்ள முடியும். நம்முடைய தேவைக்கேற்ற மாதிரி analysis define பண்ண முடியும். நிறைய charting tools இருக்கிறது. அத்தனை tools-இல் நமக்கு தேவையான analysis-ஐ எப்படி செய்துகொள்ளலாம் என்பதை வரும் பதிவுகளில் பார்ப்போம். நான் இலவசமாக தரவிறக்கம் செய்திருக்கும் இந்த மென்பொருளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

இனி நாம் கவனிக்க வேண்டியது நமக்கு தேவையான அளவு Technical Analysis மற்றும் Trading Plan. Techninal Analysis என்பது ஒரு கடல் மாதிரி. அனைத்தையும் படிப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் படித்த Analysis-ஐ எப்படி பயன்படுத்துவது என்பதில் தான் சூட்சுமம் இருக்கிறது. அதுவுமில்லாமல் Technical Analysis-இல் ஒவ்வொரு Analysis-ம் ஒவ்வொரு Result கொடுக்கும். ஒரு Analysis வாங்கு என்று சொன்னால் இன்னொன்று விற்றுவிடு என்று சொல்லும், இன்னொன்றோ வாங்கவும் வேண்டாம் விற்கவும் வேண்டாம் பங்கு விலை Flat ஆக அதாவது கூடவும் செய்யாமல் குறையவும் செய்யாமல் Flat ஆக இருக்கும் என்று சொல்லும். அனைத்து Analysis-ம் படித்து நம்மை நாம் குழப்பதுக்குள்ளாக்கி நம்முடைய பணத்தை போட்டு பங்கை வாங்கவா விற்கவா என்று முடிவெடுக்க முடியாமல் திணறுவதை விட நம்முடைய வர்த்தகத்திற்கு பயன்படும் சில Analysis பற்றி நன்றாக தெரிந்துகொள்வோம்.

Analysis பற்றி தெரிந்து கொள்ளும் முன் வர்த்தக திட்டம் (Trading Plan) பற்றி முதலில் முடிவு செய்து கொள்ளலாம். Trading Plan எப்படி தயாரிப்பது என்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்

Monday, September 14, 2009

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 12

இதுவரை வெளியான பதிவுகளில் முதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்களாக, லாப-நஷ்ட கணக்கு, EPS, நிதிநிலை அறிக்கை, Promoters Holding, Bonus Share, நிறுவனம் சம்மந்தப்பட்டுள்ள தொழில், Mutual Fund மற்றும் FII வைத்திருக்கும் பங்குகள் போன்ற பல விஷயங்களை கவனித்தோம். இந்த பதிவில் நிதிநிலை அறிக்கை (Balance Sheet) பற்றி பாப்போம்.

நாம் ஏற்கனவே பார்த்தது போல் நிதிநிலை அறிக்கை என்பது ஒரு குறிபிட்ட நாளில் ஒரு நிறுவனத்தின் சொத்து, கடன் மற்றும் முதலீடு சம்மந்தப்பட்ட விஷயங்களை கொண்டிருக்கும். ஒவ்வொரு வருட கடைசி நாளில் இது வெளியிடப்படும். ஒவ்வொரு காலாண்டு அறிக்கையிலும் இது வெளியிடப்படும். இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் Reserves and Surplus என்று சொல்லப்படும், ஏற்கனவே ஈட்டிய லாபத்தில் இருந்து எதிர் காலத்திற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் தொகை. இந்த தொகையின் அளவை பொறுத்துதான் பங்கின் புத்தக மதிப்பு கணக்கிடப்படுகிறது. புத்தக மதிப்பு பற்றி ஏற்கனவே நாம் எழுதி இருப்பதால் இப்பொழுது அதை பற்றி அதிகம் சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்.

இதை அடுத்து கவனிக்க வேண்டிய விஷயம் கடன். Secured Loans, Unsecured Loans என்று இருக்கும். ஒரு நிறுவனத்திற்கு அதிக கடன் இருந்தால் அது சம்பாதிக்கும் லாபத்தில் ஒரு பகுதியை அல்லது பெரும் பகுதியை வட்டியாக கொடுக்க வேண்டிஇருக்கும், அப்படி இருக்கும் பட்சத்தில், அது பங்குதாரர்களுக்கு வர வேண்டிய EPS ஐ குறைக்கும். EPS குறைந்தால், பங்கின் விற்பனை விலையும் குறையும் என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அதனால் ஒரு நிறுவனம் வாங்கி இருக்கும் கடன் பற்றிய விபரங்களையும் பார்க்க வேண்டும். மேலும், நிதி நிலை அறிக்கை என்பது ஓராண்டுக்கும் மேலாக அதாவது மூன்று அலல்து நான்கு ஆண்டுகளின் நிலை அறிக்கை ஒப்பிட்டு பார்ப்பதற்க்காக கொடுக்கப்பட்டிருக்கும்.
அதனால் கடந்த வருடத்துடன் நடப்பு ஆண்டு முடிவுகளை ஒப்பிட்டு பார்ப்பதும் நல்லது. கீழே ஒரு நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை கொடுத்திருக்கிறேன்.





கடன் இருந்தால் பங்குதாரர்களின் EPS ஐ பாதிக்கும் என்பதால் கடனே இல்லாமல் இருக்கும் நிறுவன பங்குகளாக வாங்கலாமா என்று ஒரு கேள்வி வரும். அப்படி பட்ட அதாவது கடனே இல்லாத நிறுவன பங்குகளைதன் வாங்குகிறேன் என்று முடிவு செய்தோமென்றால் நிச்சயமாக பங்கு சந்தையில் முதலீடு செய்வது என்பது கனவாகவேதான் இருக்கும். ஏனென்றால், PTC போன்ற ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே கடன் இல்லாமல் இயங்குகிறது. மேலும் கடன் இருந்தால் நல்லது. என்ன? கடன் இருந்தால் நல்லதா..என்று நீங்கள் யோசிக்கிறது எனக்கு புரிகிறது.. நம்புங்கள் ... கடன் இருந்தால் நல்லது. எப்படி என்பதை பார்க்கலாம். பங்குதாரர்கள் தாங்கள் முதலீடு செய்த பணத்திற்கு 15 முதல் 20% வருமானம் எதிர்பார்ப்பார்கள். மேலும் பங்குதாரருக்கு தரப்படும் Dividend-கு வரி கழிவு நிறுவனத்திற்கு கிடையாது (வருமான வரி). ஆனால் வட்டிக்கு வரிக்கழிவு உண்டு. உதாரணமாக வட்டி பத்து சதவீதம் என்றால், வரி 30% கழித்து நிறுவனத்திற்கு உண்ண்மையான வட்டி வெறும் 7% தான். சரி இது எந்த விதத்தில் நல்லது? இதற்கு ஒரு உதாரணத்தை பாப்போம்.

ஒரு நிருவததிற்கு தேவையான முதலீடு இரண்டு லட்சம். இந்த முழு பணத்தையும் இருபதாயிரம் பங்குகளாக வெளியிட்டு குறிப்பிட்ட ஆண்டு லாபம் எண்பதாயிரம் சம்பாதிக்கிறது . அதற்கு வரி முப்பது சதவீதம் என்றால் வரிக்கு அப்புறம் உள்ள லாபம் ஐம்பத்தாறாயிரம் ருபாய். அதாவது EPS Rs.2.80 இதே நிறுவனம் ஒரு லட்ச ருபாய் பங்கு முதலீடாகவும், இன்னொரு ஒரு லட்ச ருபாய் கடனாகவும் (பத்து சதவீத வட்டி) முதலீட்டை பிரித்துக்கொண்டதேன்றால், இப்போது EPS எவ்வளவு என்று பாப்போம். வட்டிக்கு முந்தைய லாபம் எண்பதாயிரம், வட்டி பத்தாயிரம். ஆக நிகர லாபம் எழுபதாயிரம். அதற்கு வரி இருபத்தொன்றாயிரம் போக நிகர லாபம் நாற்பதொன்பதாயிரம். இருக்கும் பங்குகள் வெறும் பத்தாயிரம் மட்டும் என்பதால் EPS Rs.4.90. ௦ஆக கடன் வாங்கியதால், நிறுவனத்தின் EPS எவ்வளவு கூடி இருக்கிறது என்று கவனிக்க வேண்டும். நம் எல்லோருக்கும் நன்றாக தெரியும் EPS கூடினால், பங்கின் சந்தை மதிப்பு கூடும் என்பது. ஆக கடன் இருப்பதும் நல்லதுதான் என்பது இந்த உதாரணத்தின் மூலம் தெரிய வருகிறது. அதே நேரம் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல், தகுதிக்கு மீறி கடன் வாங்கி, வட்டி செலுத்த முடியாத நிலை வந்தால் Sick Unit என்னும் பெயரோடு இந்த நிறுவனம் மூடப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதையும் மறக்க கூடாது.

நிதிநிலை அறிக்கையில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், Assets இருக்கும் பகுதியில் Miscellaneous Expenses Not Written Off என்று ஓன்று இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். இது என்ன என்பதை தெரிந்து கொண்டோமென்றால் அதை ஏன் கவனிக்க வேண்டும் என்பது தானாக புரியும். ஏன்கனவே செலவு செய்து அதை லாப நஷ்ட கணக்கில் செலவு என்று காட்டாமல் வைத்திருப்பதுதான் இது. அதனால், Networth அலல்து Book Value கணக்கிடும் போது இந்த தொகையை Reserves and Surplus இல் இருந்து கழிக்க வேண்டும்.

ஆக இதுவரை முதலீட்டுக்கான விஷயங்களை கவனித்தோம். இனி வர்த்தகம் (Trading) பற்றி அடுத்த பதிவுகளில் கவனிப்போம்.

பின் குறிப்பு : இடையில் கொஞ்ச நாட்களாக எழுதுவது தடைப்பட்டிருந்தது. இனி தடை இல்லாமல் வாரத்திற்கு ஒரு பதிவாவது எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பதிவை முடிக்கிறேன்.

Friday, April 24, 2009

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 11

சென்ற பதிவில் Promoters Holding பற்றி பார்த்தோம். ஒரு நிறுவனத்தில் Promoters என்று சொல்லப்படும் நிறுவனத்தை ஆரம்பித்தவர்கள் ஓரளவு பங்குகளை வைத்திருப்பார்கள். மீதமுள்ள பங்குகளை வெளியாட்கள் - அதாவது Promoters அல்லாதவர்கள் - வைத்திருப்பார்கள். குறிப்பாக Mutual Funds, FII (Foreign Institutional Investors) என்று சொல்லப்படும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், பிற நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் Individual Investors என்று சொல்லப்படும் தனிநபர் முதலீட்டாளர்கள் போன்றவர்களும் நிறுவனத்தில் பங்குகளை வைத்திருப்பார்கள். பொதுவாக ஒரு நிறுவனத்தில் Promoters Holding குறையாமல் இருப்பது நல்லது. நாம் ஏற்கனவே சொன்னது போல் சில நிறுவனங்களில் Promoters அவர்களுடைய பங்கை கூட்டிக்கொண்டு இருப்பார்கள். அப்படி இருந்தால் ரொம்ப நல்லது. ஆனால்
Promoters Holding குறையாமல் இருக்க வேண்டும் என்பது அடிப்படையான விஷயம்.

Promoters அல்லாமல் மற்றவர்களில் குறிப்பாக கவனிக்க வேண்டியது FII மற்றும் Mutual Funds வைத்திருக்கும் பங்குகள். ஏன் இதை கவனிக்க வேண்டும் என்றால், ஒரு நிறுவன பங்கை வாங்கும் முன் நாம் ஏற்கனவே கூறியதுபோல் லாப நஷ்ட கணக்கு மற்றும் நிதிநிலை அறிக்கை பற்றி எல்லாம் நிறைய அலசி பார்க்க வேண்டும். மேலும் இவை எல்லாம் கடந்த காலத்தில் அந்த நிறுவனம் எப்படி நடந்திருக்கிறது என்பதை சொல்லுமே ஒழிய, எதிர்காலத்தில் அது நிறுவனம் எப்படி செயல்படும் என்பதை பற்றி சொல்வது அல்ல. ஆனால் Directors Report என்று சொல்லப்படும் நிறுவனத்தின் இயக்குனர்கள் (Directors) கொடுக்கும் அறிக்கை ஒவ்வொரு வருட நிதிநிலை அறிக்கையுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதில் நிறுவனம் கடந்த ஆண்டு என்னவெல்லாம் சாதித்தது, என்னென்ன தடைகளை தாண்டி வந்தது, மேலும் எதிர்காலத்தில் நிறுவனத்தின் திட்டங்கள் என்ன, அதை அடைய என்னென்ன வழிமுறைகள் போன்றவை பற்றி சொல்லப்பட்டிருக்கும். இவ்வற்றை எல்லாம் தெரிந்து கொண்டு அதன் பிறகு முதலீடு செய்வது நல்லது. ஆனால் நமக்கு இருக்கும் குறைந்தபட்ச நேரத்தில் இவ்வளவு தூரம் நம்மால் கவனிக்க முடியுமா? அல்லது அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் எல்லாம் எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பதை பற்றி ஒரு முடிவுக்கு வருவது ஒரு தனிப்பட்ட நபருக்கு கொஞ்சம் கஷ்டமான காரியமாக இருக்கலாம்.

உதாரணமாக ஆண்டுக்கு ஒரு கோடி ருபாய் விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் அடுத்த ஆண்டு விற்பனை இலக்கு நூறு கூடி என்று Directors Report-இல் சொல்லி இருக்கலாம். ஒரு கோடி ருபாய் விற்பனை செய்யும் நிறுவனம் நூறு கோடியை ஒரு ஆண்டில் எட்டுவது சாத்தியமில்லை என்று நாம் அந்த விஷயத்தை நம்பாமல் அந்த நிறுவன பங்கில் முதலீடு செய்யாமல் விட்டு விடலாம். ஆனால் ஒரு வேளை அந்த நிறுவனம் தன்னுடைய பொருளை விற்பனை செய்ய ஏதாவது ஒப்பந்தம் செய்திருக்கலாம் அல்லது வெளி நாட்டில் ஒரு கிளை ஆரம்பிக்கலாம், இப்படி இன்னும் எத்தனையோ விஷயங்கள் நமக்கு தெரியாமல் இருக்கலாம். இந்த மாதிரி விஷயங்களை ஒரு சிறிய முதலீட்டாளர் தெரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல அலல்து சாத்தியாமில்லாமல் கூட இருக்கலாம். இப்படி விஷயங்கள் தெரியாமல் இருந்து அதனால் ஒரு நிறுவத்தில் முதலீடு செய்யாமல் இருந்தோமென்றால், ஒரு நல்ல வாய்ப்பை தவற விடுகிறோம் என்று அர்த்தம். ஆனால் Mutual Fund மற்றும் FII போன்றவர்கள் அதற்கென்றே ஒரு குழு அமைத்து நிறுவனத்தை பற்றி துல்லியமாக ஆராய்ச்சி செய்து அதன் பிறகே முதலீடு செய்வார்கள். ஒரு சிறு முதலீட்டாளர் தெரிந்து கொள்ள முடியாத விஷயங்களை எல்லாம் அவர்களால் தெரிந்து கொள்ள முடியும். அப்படி அனைத்தும் தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளவர்கள் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்கள் என்றால், நிச்சயமாக அவர்கள் முதலீடு செய்த நிறுவனம் எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்கும் என்று சொல்லலாம்.

அதனால்தான் ஒரு நிறுவனத்தில் Promoters அல்லாமல் பிற நிறுவனங்கள் எவ்வளவு பங்கு வைத்திருக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு காலாண்டு நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கும் போதும் அதனுடன் Shareholding Pattern என்று சொல்லப்படும், பங்குகளை யார் யார் வைத்திருக்கிறார்கள் என்ற விபரத்தையும் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் சமர்பிக்க வேண்டும். அந்த விபரத்தை நாம் BSE அல்லது NSE வலைத்தளத்தில் பார்த்துக்கொள்ளலாம். கீழே இணைத்திருப்பது BSE வலைத்தளத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் Shareholding Pattern. (Click the picture to enlarge)



பங்குகள் பற்றிய எந்த ஒரு வலைத்தளத்திலும் நிறுவனத்தின் பங்குகள் பற்றிய விபரங்களை நாம் பார்க்கும் போது இந்த நிறுவனத்தில் Mutual Funds பங்குகளை வைத்திருக்கிறதா என்பதை பார்க்க ஒரு சுட்டி வைக்கப்பட்டிருக்கும். இதன் அடிப்படை நோக்கமே நிறுவனத்தை பற்றி நாம் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். அதனால் நீண்டகால அடிப்படையில் பங்குகளை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால் Shareholding Pattern-ஐ கவனத்தில் கொள்வது அவசியம்.

மேலும் நாம் ஒரு நிறுவனத்தில் நீண்டகால அடிப்படையில் பங்குகளை வாங்கியபின், அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு காலாண்டு முடிவுகளையும் கவனிக்க வேண்டும். அப்படி கவனிக்கும்போது Promoters, Mutual Funds மற்றும் FII முதலீட்டில் இருக்கும் மாற்றத்தை கவனிக்க வேண்டும். ஒருவேளை இவர்களில் யாராவது முதலீட்டை குறைக்க ஆரம்பித்தார்கள் என்றால் முதலீட்டாளர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எதற்காக குறைக்கிறார்கள் என்பது நமக்கு சொல்லப்படாவிட்டாலும், நாம் அதற்கான காரணத்தை அறிய முற்பட்டால் நல்லது. ஒருவர் ஒரு நிறுவனத்தில் நீண்டகால அடிப்படையில் முதலீடுசெய்துவிட்டு அப்புறம் முதலீட்டின் அளவை குறைக்கிறார் என்றால் என்னென்ன காரணங்கள் இருக்க முடியும்? ஒருவேளை நிறுவனத்தின் செயல்பாடு சரி இல்லாமல் இருந்து, அதனால் எதிர்காலத்தில் இந்த முதலீடு நல்ல வருமானம் தராது என்ற ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது இந்த நிறுவனத்தில் கிடைக்கும் லாபத்தை விட அதிக லாபம் தரும் வேறு நிறுவனத்தில் முதலீடு செய்ய இந்த முதலீட்டை குறைத்திருக்கலாம் அல்லது இதில் எதுவுமே காரணம் இல்லாமல் முதலீடு செய்தவரின் தனிப்பட்ட விஷயங்களுக்கு பணம் தேவை என்பதால் முதலீட்டை குறைத்திருக்கலாம். இதில் கடைசி காரணத்திற்காக - அதாவது தனிப்பட்ட தேவைகளுக்காக ஒருவர் முதலீட்டை குறிக்கிறார் என்றால் அதில் மற்ற முதலீட்டாளர்கள் யோசிக்க ஒன்றுமே இல்லை. ஆனால் முதல் இரண்டு காரணங்களுக்காக ஒருவர் முதலீட்டை குறைக்கிறார் என்றால் பிற முதலீட்டாளர்கள் யோசிக்கக் வேண்டும். இந்த நிறுவனத்தில் எதிர்கால லாபம் குறைகிறது என்று Mutual Funds அல்லது FII முடிவு செய்கிறார்கள் என்றால் நிச்சயம் நாம் அதை பின்பற்றியே ஆக வேண்டும். ஒரு நிறுவனத்தில் பங்குகளை வாங்கும் முன் எப்படி Mutual Fund மற்றும் FII-ஐ பின்பற்றினோமோ அதேபோல் அவர்கள் முதலீட்டை குறைக்கிறார்கள் என்றால் அதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். நமக்கு தெரியாத அல்லது நம் கவனத்திற்கு வராத விஷயங்கள் அவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால் நாம் ஏற்கனவே எழுதியது போல், முதலீடு செய்துவிட்டு, Mutual Funds மற்றும் FII தாங்கள் முதலீடு செய்த நிறுவனத்தின் செயல்பாட்டை உன்னிப்பாக கவனிப்பார்கள். அவர்கள் செய்யும் முதலீட்டின் அளவு பெரிது என்பதால் அவர்களின் கவனமும் அதிகமாக இருக்கும். அதனால் நிறுவனங்கள் எவ்வளவு பங்குகளை வைத்திருக்கிறது, Promoters, Mutual Funds மற்றும் FII வைத்திருக்கும் பங்குகளின் அளவில் சென்ற காலாண்டை விட இந்த காலாண்டில் என்ன மாற்றம் என்பதை எல்லாம் கவனித்து முதலீட்டு முடிவுகளை எடுப்பது நல்லது.

இந்த பதிவில் இருக்கும் விஷயங்களை படித்தபின், இனிமேல் Mutual Funds அல்லது FII முதலீடு செய்யாத நிறுவனத்தில் நான் முதலீடு செய்யமாட்டேன் என்று முடிவு செய்துவிடக் கூடாது. நாம் ஒரு நிறுவனத்தின் லாப நஷ்ட கணக்கு, நிதிநிலை அறிக்கை மற்றும் அந்த நிறுவனம் சார்ந்திருக்கும் துறை பற்றியெல்லாம் அலசி பார்த்து அந்த பங்குகளை வாங்கலாம் என்று முடிவு செய்திருப்பின், அந்த நிறுவனத்தில் Mutual Funds அல்லது FII போன்றோர்களும் முதலீடு செய்திருந்தால் அந்த நிறுவனங்களில் நாம் தைரியமாக முதலீடு செய்யலாம் என்றுதான் சொல்கிறேனே ஒழிய, அவர்கள் முதலீடு செய்யாத நிறுவனங்கள் எல்லாம் நல்ல நிறுவனங்கள் அல்ல என்று சொல்லவில்லை. நம் நாட்டில் எத்தனையோ நிறுவனங்கள் இருக்கிறது, அவற்றில் எல்லாம் அவர்கள் முதலீடு செய்தால் தான் அவை நல்ல நிறுவனம் என்று நினைத்தோமேன்றால் அது தவறு. பங்குகளில் செய்யும் முதலீடு என்பது குறிபிட்ட ஒரே ஒரு விஷயத்தை மட்டும் வைத்து முடிவு செய்யப்படுவதில்லை. இன்னும் கவனிக்க நிறைய விஷயங்கள் இருக்கிறது, அவற்றை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

இதுவரை நாம் கூறியிருக்கும் விஷயங்கள் அனைத்தும் முதலீட்டாளர்களுக்கு - அதாவது Long-term மற்றும் Medium-term முதலீட்டாளர்களுக்கு. ஏனென்றால் வர்த்தகம் செய்கிறவர்கள் இந்த விஷயங்களை எல்லாம் இவ்வளவு துல்லியமாக பார்ப்பதில்லை. பங்கு வர்த்தகர்களின் ஒரே குறிக்கோள் விலை குறையும் போது வாங்கவேண்டும், கூடும் போது விற்க வேண்டும் என்பது மட்டுமே. பங்கு வர்த்தகத்தில் எடுக்க வேண்டிய முடிவுகள் வேறு, முதலீட்டில் எடுக்க வேண்டிய முடிவுகள் வேறு. இந்த இரண்டையும் பிரித்துப்பார்க்க பழகிவிட்டோமென்றால் பங்குச்சந்தை முதலீடு அல்லது பங்குச்சந்தை வர்த்தகம் என்பது எளிதாக இருக்கும். அடுத்து வரும் பதிவுகளில் முதலீட்டுக்கு முன் கவனிக்க வேண்டிய இன்னும் சில விஷயங்களை பார்ப்போம்

Saturday, April 18, 2009

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 10

Promotor என்பவர் ஒரு தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான ஆயத்த வேலைகள் அனைத்தையும் செய்து, ஒரு நிறுவனத்தை ஆரம்பிப்பார். அப்படி ஆரம்பிக்கும் போது, அது தனி நபர் நடத்தும் Proprietorship ஆக இருக்க வேண்டுமா, அல்லது இன்னும் ஓன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களை சேர்த்து Partnership ஆக ஆரம்பிக்கலாமா அல்லது நிறுவனத்தை ஒரு Limited Company ஆக ஆரம்பிக்கலாமா என்று முடிவு செய்து, அதற்கேற்றாற்போல் தன்னுடைய முதலீட்டுக்கான பங்கை செலுத்தி தொழிலை ஆரம்பிப்பார். பொதுவாக ஒரு நிறுவனத்தில் 50%-க்கு அதிகமாக பங்கு இருந்தால் அப்படி பங்கு வைத்திருப்பவர்கள் நிறுவனத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும் (Majority Shareholding), அந்நிறுவனத்தை தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். தன்னுடைய திறமை, நேரம், உழைப்பு அனைத்தையும் பயன்படுத்தி ஒரு நிறுவனத்தை ஆரம்பிப்பவர், அது தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புவது இயற்கையே. அப்படி அதித பங்குகளை ஒருவரோ அல்லது ஒரு குடும்பமோ வைத்திருந்து, நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டையும் தன்னிடமே வைத்திருந்தால் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் நம் பணத்துக்கு என்ன உத்திரவாதம் என்று நமக்கு ஒரு சிறிய சந்தேகம் வரலாம். அப்படி நிறுவனத்தை முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், பங்கு வெளியிட்டு, பொதுமக்களின் பணத்தை முதலீடாக பெற்று நிறுவனத்தை நடத்தும்போது Promotor தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து விட முடியாது. வருடா வருடம் பங்குதாரர்களின் கூட்டத்திற்கு - Annual General Meeting (AGM) - ஏற்பாடு செய்ய வேண்டும். அதில் தான் முக்கியமான முடிவுகளை எடுக்க முடியும். இப்படி ஒருவரோ அல்லது ஒரு குடும்பத்தினரோ அதிகபட்ச பங்குகளை வைத்திருக்கும் போது அவர்களை தவிர நிறுவனத்தில் முதலீடு செய்த மற்றவர்களை Minority Shareholders என்று சொல்கிறோம். இந்த Minority Shareholders-இன் உரிமையை பாதுகாக்க இந்திய நிறுவன சட்டத்தில் இடமிருக்கின்றது(Companies Act 1956). ஆக, ஒரு Promotor என்பவர்தான் நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்.

அப்படி ஆரம்பித்த Promotor, நாளடைவில் மெதுவாக நிறுவனத்தில் இருக்கும் தன்னுடைய பங்குகளை குறைக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? அவருக்கு அந்த நிறுவனத்தில் அதிக நம்பிக்கை இல்லை. நிறுவனத்தில் நடக்கும் விஷயங்கள் அனைத்தும் அவருக்கு தெரிந்திருக்கும் என்பதால், இந்த நிறுவனத்திற்கு நல்ல எதிர்காலம் இல்லை என்பது அவருக்கு தெரிந்ததும், மெதுவாக தன்னுடைய பங்குகளை வெளியே விற்க ஆரம்பிப்பார். ஆனால் ஒவ்வொரு காலாண்டிலும், பங்கு சந்தையில் நிறுவனத்தின் நிதி அறிக்கைகளை தாக்கல் செய்தும் போது, Promoters எவ்வளவு பங்குகள் வைத்திருக்கிறார்கள் என்ற தகவலையும் சேர்த்தே கொடுக்க வேண்டும். இப்படி தகவலை கொடுக்கும் போது, Promoters பங்குகளை விற்றதை முதலீட்டாளர்கள் இதை தெரிந்து கொண்டால், நிறுவனத்தின் நம்பகத்தன்மை போய்விடுமே என்று பயந்து, அனேக Promoters பங்குகளை விற்பதை விட எளிதாக, வெளியே தெரியாமல் அடகு வைப்பதை வழக்கமாக்கி கொண்டார்கள் - நம்மிடம் இருக்கும் தங்கத்தை வங்கியில் அடகு வைத்து நம்முடைய தேவைக்கு பணத்தை கடனாக பெறுவது மாதிரிதான் இதுவும்!!!. ஏனென்றால், பங்குசந்தையை பொறுத்த வரை Promoters பங்குகளை விற்றால் மட்டுமே பங்குசந்தைக்கு தகவல் கொடுக்க வேண்டும் - அடகு வைத்தால் பங்கு சந்தைக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்னும் நிலை இருந்ததால், Promoters பங்குகளை அடகு வைப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள்.

அனுபவம் தான் ஆசான் என்று சொல்வதைப்போல, சத்யம் கம்ப்யுட்டர் நிறுவனத்தில் பிரச்னை வந்த பிறகுதான் செபி அமைப்பு (SEBI - Security and Exchange Board of India), பங்குகளை அடகு வைத்தாலும், பங்குசந்தைக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஒரு விதியை நடைமுறைப்படுத்தியது. அப்படி விதிமுறை அமல் படுத்திய பிறகும் நம்முடைய Promoters தாங்கள் பங்குகளை அடகு வைத்த விபரத்தை உடனே சந்தைக்கு தெரிவித்து விடவில்லை. தகவல் தராத நிறுவனங்களுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப் போகிறேன் என்று செபி மிரட்டிய பிறகுதான் Promoters தாங்கள் அடகு வைத்த பங்குகளின் விபரத்தை சந்தைக்கு தெரிவித்தார்கள். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் சில Promoters தங்களுடைய அனைத்து பங்குகளையும் அடகு வைத்து விட்டார்கள் என்பது இந்த விதி அமலுக்கு வந்த பிறகுதான் முதலீட்டார்களுக்கே தெரிந்தது.

சரி இதெல்லாம் நடைமுறை விஷயம், இதில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன? ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தவர், அதிலிருந்த தன்னுடைய முதலீட்டை குறைக்கிறார் என்றால், அந்த நிறுவனம் நல்லபடியாக வளர்ந்து, நல்ல லாபம் ஈட்டி, அதன் மூலம் அவரது பங்குகளின் மதிப்பு கூடும் என்பதில் அவருக்கே நம்பிக்கை இல்லை என்று அர்த்தம். இதையே வேறு விதமாக யோசித்தோம் என்றால், ஒருவேளை அவருக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லலாம் அல்லது அந்த நிறுவனம் வளராது என்பதை அவர் உறுதியாக நம்புகிறார் என்றும் சொல்லலாம்..!!! இப்படி பட்ட சூழ்நிலையில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் பங்குகளில் நாம் நமது பணத்தை முதலீடு செய்யலாமா, செய்தால் நம் முதலீட்டின் எதிர்கால மதிப்பு என்னவாக இருக்கும் என்பதை இப்பொழுதே சொல்லி விடலாம்!!!

பங்குகளை விற்காமல் சில Promoters அடகு வைப்பார்கள். பங்குகளை அடகு வைத்தால் எவ்வளவு பணம் கிடைத்துவிடும் என்று நாம் நினைக்கலாம். உதாரணமாக, ஒரு promoter பத்து ருபாய் முகமதிப்பில் ஒரு லட்சம் பங்குகளில் பத்து லட்ச ருபாய் முதலீடு செய்து, பொதுமக்களிடம் இருந்தும் பணம் திரட்டி நிறுவனம் ஆரம்பிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நிறுவனம் நல்ல படியாக நடந்து நல்ல லாபம் சம்பாதிப்பதால், சில ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பங்கின் விலை Rs.100 ஆகிறது என்றால் அவருடையை ஒரு லட்சம் பங்கின் சந்தை மதிப்பு ஒரு கோடி ரூபாயாக இருக்கும். பொதுவாக பங்குகளை அடமானமாக வைத்துக்கொண்டு பணம் கொடுக்கும் வங்கிகள், பங்கின் சந்தை மதிப்பில் சுமார் 50 முதல் 60 சதவீதம் வரை கடனாக கொடுக்கும். ஆக பத்து லட்ச ருபாய் முதலீடு செய்து வங்கி மூலமாக சுமார் 50 முதல் 60 லட்சம் வரை promoter கடன் வாங்கலாம். ஒருவேளை கடனுக்கு வட்டியை கொடுக்காமல் இருந்தால் ஒரு அளவுக்கு மேல் வங்கி அந்த பங்குகளை சந்தையில் விற்று தன்னுடைய கடனை சமன் செய்து விடும். இப்படித்தான் சத்யம் விஷயத்தில் நடந்தது.

சில Promoters பங்குகளை அடகு வைத்துவிட்டு அந்த பணத்தில் அடுத்த நிறுவனம் ஆரம்பித்தேன் என்று சொல்லுவார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை என்பதை அவ்வளவு எளிதாக நாம் உறுதி செய்துவிட முடியாது. ஆக, Promoters பங்குகளை விற்றாலோ அல்லது அடகு வைத்தாலோ அந்த நிறுவன பங்குகளை நீண்டகால அடிப்படையில் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இது நிறுவனத்தை ஆரம்பித்து நடத்துபவரின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விஷயம். அவர் ஆரம்பித்த நிறுவனத்தை அவரே பெரிதாக நம்பவில்லை என்னும் போது நாம் மட்டும் எப்படி நம்புவது? பங்கு சந்தையில் முதலீடு செய்யும் போது எவ்வளவு லாபம் சம்பாதிக்க முடியும் என்று கனவு காணும் முன், நாம் போட்ட பணம் நஷ்டமில்லாமல் நம் கைக்கு திரும்ப கிடைக்குமா என்பதை ஒருமுறைக்கு பலமுறை யோசித்துதான் முடிவு செய்ய வேண்டும். பங்கு சந்தையில் முதலீடு செய்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு நஷ்டமடைந்தவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்தான். யாரோ சொன்னார்கள் என்று ஏதோ ஒரு பங்கில் முதலீடு செய்துவிட்டு, அவ்வளவு கஷ்டப்படு சம்பாதித்த பணத்தை இப்படி எளிதாக தொலைத்து விடலாமா? அதனால் லாபத்தை பற்றி கனவு காணும் முன், நஷ்டத்தை தவிர்ப்பது அல்லது முதலீடு பாதுகாப்பானதுதானா என்று ஓரளவு உறுதிபடுத்திக்கொண்டால் நல்லது. எவ்வளவு நல்ல நிறுவன பங்காக இருந்தாலும், சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப, பங்கின் விலையும் கூடி ... குறைந்து ... மீண்டும் கூடி...இப்படி ஒருவித ஏற்ற இறக்கத்தோடுதான் விலை நீண்ட காலத்தில் கூடுமே தவிர, முதலீடு செய்த நாள் முதல் கூடிக்கொண்டே இருக்காது. அதனால் நல்ல நிறுவன பங்குகளை தேர்ந்தெடுத்து வாங்கினால் லாபம் அடைய முடியும்.

பங்குகளை விற்பது அல்லது அடகு வைப்பதற்கு மாறாக,சில நிறுவனங்களில் Promoters தன்னுடைய பங்கை கூட்டுவார்கள் - அதாவது ஏற்கனவே இருக்கும் பங்குகளுக்கு மேல் இன்னும் பங்குகளை வாங்கி நிறுவனத்தில் தன்னுடைய முதலீட்டை கூட்டுவார்கள். அப்படி கூட்டுகிறார்கள் என்றால், அவர்கள் அந்த நிறுவனத்தின் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம். அப்படிப்பட்ட நிறுவனங்களில் நாம் முதலீடு செய்தால் நிச்சயம் அந்த முதலீடு நல்ல வருமானம் கொடுக்கும்.


இதுவரை Promoters Holding பற்றி மட்டும் பார்த்தோம். இனி வரும் பதிவில், Shareholding Pattern என்று சொல்லப்படும், நிறுவனத்தின் மூலதனத்த்தில் யார் யாரெல்லாம் முதலீடு செய்திருக்கிறார்கள் என்னும் தகவலை எப்படி பெறுவது, அதை நீண்டகால முதலீட்டுக்கு எப்படி பயன் படுத்துவது என்பது பற்றி பார்போம்

Saturday, April 11, 2009

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 9

இதுவரை எழுதிய பதிவுகளில் ஒரு நிறுவனத்தின் லாப நஷ்ட கணக்கில் என்னென்ன பார்க்க வேண்டும் என்று கவனித்தோம். அதில் மிக முக்கியமானது EPS என்பதையும் பார்த்தோம். இந்த பதிவில் EPS-ஐ எப்படி பயன்படுத்துவது என்று பார்போம்.

EPS என்பது ஒரு நிறுவனத்தின் பங்கு எவ்வளவு சம்பாதித்தது என்பதை குறிக்கும். அனால் எந்த நிறுவனமும் சம்பாதித்த அனைத்து பணத்தையும் பங்குதாரர்களுக்கு Dividend ஆக தருவதில்லை. EPS இன் ஒரு பகுதியை Dividend ஆக நிறுவனம் பங்குதாரர்களுக்கு கொடுக்கும். ஆக ஒரு நிறுவனத்தின் EPS நன்றாக இருந்தாலும் அது Dividend தருகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். சில நிறுவனங்கள் நிறைய EPS சம்பாதித்திருப்பதாக கணக்கு காட்டி இருந்தாலும், அந்த நிறுவனம் Dividend தரவில்லை என்றால் ஒன்று அந்த நிறுவனம் சம்பாதித்த பணத்தை விரிவாக்கத்திற்கு பயன்படுத்தலாம். அப்படி இல்லை என்றால் அந்த நிறுவனத்தில் பணப்பிரச்சினை இருக்கிறதாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது அந்த நிறுவனம் நல்ல லாபம் சம்பாதித்திருந்தாலும், விரிவாக்கம் எதுவும் செய்யவில்லை எத்ன்றால் Dividend கொடுக்க அதனிடம் பணம் இல்லாமல் இருக்கலாம். அப்படியானால் சம்பாதித்த பணம் எல்லாம் எங்கே போனது என்று ஒரு கேள்வி வரும். அந்த நிறுவனத்தால் விற்பனை செய்த பணத்தை ஒழுங்காக வசூலிக்க முடியாமல் இருந்திருக்கலாம். சில நிறுவனங்கள் நல்ல லாபம் காட்டினாலும், Dividend தர முடியாமல் இருந்து, அதற்கு பதில் Bonus Share கொடுத்து பங்குதாரர்களை சமாதான படுத்தலாம். அதனால் EPS அதிகமாக இருந்தாலும் வருடா வருடம் நிறுவனம் Dividend தருகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். தொடர்ந்து Dividend கொடுத்துக்கொண்டிருக்கும் நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம்.

மேலும் EPS என்பது வருடா வருடம் கூடிக்கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை காலாண்டு அறிக்கையை பங்குச்சந்தையில் சமர்பிக்க வேண்டும் என்பது பங்குசந்தையின் விதி. அதனால் ஒவ்வொரு காலாண்டு அறிக்கையையும் நாம் கவனிக்க வேண்டும். விற்பனை கூடி இருக்கிறதா, Operating Profit கூடி இருக்கிறதா, என்பதை எல்லாம் கவனிக்கும் நேரத்தில் EPS கூடி இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். எந்த நிறுவனமும் எப்பொழுதுமே நல்ல நிறுவனமாக இருப்பதில்லை. இன்று நல்ல நிலையில் இருக்கும் நிறுவனம் அடுத்த ஆண்டு மோசமாக பாதிக்கப்படலாம். அதனால் காலாண்டு அறிக்கையை கவனமாக பார்க்க வேண்டும். இவை எல்லாம் நல்ல படியாக இருந்தால், அந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யலாம். அந்த நிறுவனம் எதிர்காலத்தில் நல்ல லாபம் சம்பாதித்து வளரும்போது, அதன் காரணமாக நாம் வைத்திருக்கும் பங்குகளின் விலையும் கூடும்.

இது மட்டுமில்லாமல் பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 7 இல் குறிப்பிட்டிருந்தது போல், ஒரு பங்கின் Book Value என்னவாக இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். பொதுவாக Book Value என்பது சந்தை விலையை நிர்ணயிப்பது இல்லை என்றாலும், ஒரு பங்கின் Book Value நல்ல நிலையில் இருந்தால் அந்த நிறுவனம் ஏற்கனவே நல்ல முறையில் நடத்தப்பட்டு அதனால் லாபம் அடைந்திருக்கிறது என்று அர்த்தம். Book Value என்பது அந்த நிறுவனம் ஏற்கனவே சம்பாதித்து வைத்திருப்பதால் அடைந்திருக்கும் மதிப்பு. ஆனால் சந்தை விலை என்பது, எதிர்காலத்தில் இந்த நிறுவனம் எப்படி வளரும் என்னும் கணிப்பை வைத்து நிர்ணயிக்க படுகிறது. அதனால் அனேகமாக எல்லா பங்குகளின் சந்தை விலையும், Book Value-வை விட அதிகமாகவே இருக்கும். ஆனால் இதற்கு மாறாக, சில பங்குகளின் Book Value சந்தை விலையை விட அதிகமாக இருக்கும். ஏன் இப்படி? சில நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் இன்னும் பிரபலம் ஆகாமல் இருக்கலாம். நல்ல நிலையில் நிறுவனம் நடந்துகொண்டிருந்தாலும், முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்காத வரை அந்த நிறுவன பங்கின் சந்தை விலை கூடுவது என்பது கஷ்டமான காரியம். இன்று மிக பிரபலமாக இருக்கும் பல நிறுவனங்கள் ஒரு காலத்தில் வெளி உலகுக்கு தெரியாமல் இருந்தவைதான். அதனால் அப்படி பட்ட நிறுவனத்தின் பங்குகளை கவனமாக தேர்ந்தெடுத்து வாங்கினால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கொடுக்க வாய்ப்பு உண்டு. இந்த மாதிரி சந்தை விலையை விட Book Value அதிகம் இருக்கும் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதை Value Buy என்று சொல்கிறார்கள்.

Book Value அதிகம் இருக்கிறது என்பதற்காக மட்டுமே பங்குகளை வாங்கி விடக்கூடாது. அந்த நிறுவனம் என்ன தொழிலில் இருக்கிறது, அந்த தொழிலுக்கு எதிர்காலத்தில் இருக்கும் வாய்ப்பு, Promotors என்று சொல்லப்படும் நிறுவனத்தை ஆரம்பித்தவர்களை பற்றி தெரிந்துகொள்ளுதல் மற்றும் Promotors நிறுவனத்தில் எவ்வளவு பங்கு வைத்திருக்கிறார்கள் என்பது பற்றி எல்லாம் அலசி பார்த்து வாங்கவேண்டும். இது பற்றி வரும் பதிவில் பார்போம்.

Saturday, March 21, 2009

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 8

சென்ற பதிவில் Bonus Share மற்றும் அது எவ்வாறு EPS-ஐ பாதிக்கிறது என்பது பற்றி பார்த்தோம். இனி Share Split என்றால் என்ன, EPS-ல் அதனுடைய தாக்கம் என்ன என்பதை இந்த பதிவில் பார்போம்.

Bonus Share என்பது ஏற்கனவே நிறுவனம் சம்பாதித்து வைத்திருக்கும் லாபத்தை பங்குகளாக முதலீட்டளர்களுக்கு தருவது, இதற்கு பணம் எதுவும் வாங்குவது இல்லை என்பதால் Bonus Share என்கிறோம். ஆனால் Bonus Share என்பது நடைமுறையை வைத்து பார்த்தல் அது இலவசமல்ல என்பதையும், குறுகிய கால முதலீட்டளர்களுக்கு லாபமில்லை என்பதையும் பார்த்தோம். Share Split என்பதும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான், ஆனால் ஒரு சில வித்தியாசங்கள் இருக்கிறது.

ஒரு நிறுவனத்தின் பங்குகளை குறைந்த முகமதிப்பிற்கு பிரிப்பதைத்தான் Share Split என்கிறோம். உதாரணமாக ஒரு நிறுவன பங்கின் முகமதிப்பு Rs.10/- ஆக இருக்கிறது என்றால், அந்த முகமதிப்பை Re.1/- ஆக குறைத்து ஏற்கனவே ஒரு பங்கு வைத்திருக்கும் பங்குதாரருக்கு இன்னும் 9 பங்குகளை நிறுவனம் கொடுக்கும் இதைத்தான் Share Split என்கிறோம். ஆக முன்பு பத்து ரூபாய் முகமதிப்பில் ஒரு பங்கு வைத்திருந்த ஒரு பங்குதாரர் இப்போது ஒரு ரூபாய் முகமதிப்பில் 10 பங்குகளை வைத்திருப்பார். பங்குதாரரை பொறுத்த வரை, முன்பு ஒரு பங்கு வைத்திருந்தவர் இப்போது பத்து பங்கு வைத்திருப்பார். ஆக, நமக்கு இது லாபம் தானே என்று எண்ணத்தோன்றும் - பணமே கொடுக்காமல் 9 பங்குகள் இலவசமாக கிடைத்தல் அது லாபம் என்று தான் எண்ணத்தோன்றும். ஆனால் இது லாபமுமில்லை, நஷ்டமுமில்லை. ஏனென்றால் ஏற்கனவே இருப்பதை பிரித்திருக்கிறார்கள் அவ்வளவுதான். சரி நிறுவனம் பிரித்திருக்கிறது, சந்தையில் பங்கின் விலையில் ஏதாவது மாற்றம் வருமா?

சந்தையிலும் பங்கின் விலை Split விகிதத்தின் படி குறைந்து விடும். உதாரணமாக சந்தையில் Rs.150/- விலையில் இருக்கும் ஒரு பங்கு, ஒன்றுக்கு பத்து என்ற விகிதத்தில் Split ஆகிறது என்றால், ஒரு பங்கு பத்தாக பிரிகிறதல்லவா? அதைப்போல் ஒரு பங்கின் விலையும் Rs.15/- ஆகிவிடும்.

Texmaco Ltd. என்னும் நிறுவனத்தின் பங்குகள் பத்து ருபாய் முகமதிப்பில் இருந்து ஒரு ரூபாய் முகமதிப்புக்கு குறைக்கப்பட்டது. 31-12-2008 அன்று Rs.737.10 ஆக இருந்த பங்கு, அடுத்தநாள் அதாவது Split ஆனதும் காலை சந்தையில் Rs.75/- என்ற விலையில் வர்த்தகம் ஆக ஆரம்பித்தது. அதாவது Rs.737.10 என்ற விலையில் விற்ற பங்கு, பத்தாக பிரிக்கப்படும் போது, அதன் விலையை பத்தால் வகுத்ததால் Rs.73.71 ஆகிறது. அடுத்த நாள் காலை கொஞ்சம் விலை கூடி Rs.75/- என்ற விலையில் வர்த்தகம் நடந்தது.

சரி இப்படி எந்த லாபமும் இல்லை என்றால் ஏன் Share Split செய்யப்படுகிறது? ஒரு பங்கின் விலை அதிகமாக இருந்தால் சிறு முதலீட்டாளர்கள் அந்த பங்கை வர்த்தகம் செய்வது எளிதல்ல என்பதால், Share Split செய்யப்படுகிறது. Bonus Share தருவதற்கும் இது ஒரு காரணம்.

சில நிறுவனங்கள் ஒரே நேரத்தில் Bonus Share மற்றும் Share Split இரண்டையும் கொடுக்கும். உதாரணமாக 2007 October இல் Jai Corporation Ltd. என்னும் நிறுவனம் ஒரு பங்கை பத்து ருபாய் முகமதிப்பில் இருந்து ஒரு ரூபாய் முகமதிப்பிற்கு குறைத்தது. மேலும் 1:1 என்ற விகிதத்தில் Bonus Share கொடுத்தது. ஆக இந்த நிறுவனத்தில் ஒருவர் வாங்கியிருந்த ஒரு பங்கு 20 பங்குகளாக ஆகி இருக்கும் (1 பங்கு Split மூலமாக 10 ஆகும், அப்படி ஆன 10 பங்குக்கும் மேலும் 10 பங்குகள் Bonus ஆக கிடைக்கும்). Bonus மற்றும் Split ஆவதற்கு முந்தைய நாள் Jai Corporation Ltd.-இன் ஒரு பங்கின் விலை Rs.15,310/- ஆக இருந்தது. ஒரு பங்கு 20 பங்கு ஆகிறது என்பதால் விலையும் அதே அளவு குறையும் என்று பார்த்தோம். அதன்படி ஒரு பங்கின் விலை Rs.765.50 ஆக குறைந்திருக்கும். அடுத்த நாள் பங்கின் விலை கொஞ்சம் கூடி Rs.803.70/- ஆக இருந்தது. யோசித்து பாருங்கள், ஒரு சிறு முதலீட்டாளர் Rs.15,310/- கொடுத்து ஒரு பங்கு வாங்க முடியுமா? அப்படி அவரிடம் இருக்கும் பணத்தை எல்லாம் ஒரே பங்கில் போட்டு ஒரு வேளை அந்த பங்கின் விலை குறைந்தால் அவருடைய முதலீடு எல்லாம் அடிபட்டுப்போகும் ஒரு பெரிய risk இருகிறதே.. (Don't put all your eggs in single basket என்ற பழமொழியை நினைவு படுத்திக்கொள்ளுங்கள் - முதலீட்டின் அடிப்படி இது. குறிப்பாக பங்கு முதலீட்டுக்கு இதை கண்டிப்பாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்) அதனால் Bonus மற்றும் Split ஆவதால் சிறு முதலீட்டாளர்கள் இப்படி பட்ட நிறுவன பங்குகளை வர்த்தகம் செய்ய முடியும். அப்படி நிறைய பேர் முதலீடு செய்வதால் பங்கின் விலை கூடும் வாய்ப்பு உண்டு. வாய்ப்பு உண்டு என்றுதான் சொல்கிறேனே தவிர, கண்டிப்பாக கூடும் உடனே அப்படி பங்குகளை வாங்குங்கள் என்று சொல்லவில்லை. ஒரு பங்கை வாங்கவேண்டும் என்று முடிவு செய்யும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

Share Split ஒரு பங்கின் EPS-ஐ எவ்வாறு பாதிக்கறது என்று பார்போம். ஒரு நிறுவனம் 1,000 பங்குகள் வெளியிட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதனுடைய நிகர லாபம் Rs.20,000/- என்றால் ஒரு பங்கு சம்பாதித்த பணம் அதாவது EPS Rs.20/-. இதே நிறுவனம் பங்கின் முகமதிப்பை பத்து ரூபாயில் இருந்து ஒரு ரூபாயாக குறைத்தால் நிறுவனத்தின் மொத்த பங்குகள் 10,000 ஆகும் (1000 x 10). இப்போது நிகர லாபம் Rs.20,000/- என்பது 10,000 பங்குகளுக்கும் பிரித்து கொடுக்கப்பட வேண்டும் - EPS Rs.2/- ஆகும். இருபது ரூபாயாக இருந்த EPS, Share Split-க்கு அப்புறம் இரண்டு ரூபாயாக குறைகிறது. ஆக லாப நஷ்ட கணக்கை பார்க்கும் போது, சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு EPS குறைந்திருக்கிறது என்றதும், இந்த ஆண்டு நிறுவனத்தின் செயல்பாடு சரி இல்லை என்று முடிவு செய்து விடக்கூடாது. Bonus Share கொடுக்கப்பட்டிருக்கிறதா, Share Split ஆகி இருக்கிறதா என்பதை எல்லாம் கவனித்து முடிவு செய்ய வேண்டும்.

இந்த பதிவில் சில நிறுவனங்களை குறிபிட்டிருக்கிறேன். இவை எல்லாம் உதாரணத்திற்காக மட்டுமே சொல்லப்பட்டது. மற்றபடி இந்த பங்குகளை வாங்கவோ விற்கவோ பரிந்துரை செய்யவில்லை.

அடுத்து வரும் பதிவுகளில், ஒரு பங்கை வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கும் முன் EPS-ஐ எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்போம். அதற்கு முன் உங்களுடைய பின்னூட்டத்தை எழுதுங்கள்.

Tuesday, March 17, 2009

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 7

இதுவரை லாப நஷ்ட கணக்கில் கவனிக்க வேண்டிய விஷயங்களை பார்த்தோம். குறிப்பாக, Other Income (இதர வருமானம்), Extra ordinary Income, Operating profit, Interest (வட்டி), Net profit (நிகர லாபம்) மற்றும் EPS என்று சொல்லப்படும் ஒரு பங்கு குறிப்பிட்ட காலத்தில் எத்தனை ரூபாய் சம்பாதித்திருக்கிறது போன்றவற்றை கவனிக்க வேண்டும் என்று பார்த்தோம். இதில் EPS பற்றி இன்னும் விரிவாக பார்க்க வேண்டும்.

EPS பற்றி விரிவாக பார்க்கும் முன், நிதிநிலை அறிக்கை (Balance Sheet) பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஒரு நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை என்பது குறிப்பிட்ட நாளில் அந்த நிறுவனத்திற்கு இருக்கும் சொத்துக்கள், கடன் மற்றும் மூலதனம் பற்றிய விபரங்களை காட்டும். அதனால் தான் ஒவ்வொரு வருடமும் அந்த நிறுவனத்தின் நிதியாண்டின் கடைசி நாள் தேதியிட்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும். வருடத்திற்கு ஒருமுறை வெளியிடுவது போல், 3 மாதத்திற்கு ஒருமுறையும் வெளியிடப்படும் (Quarterly Result). ஒரு நிதிநிலை அறிக்கை என்பது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மாதிரி அமைப்பில் இருக்கும்.

A. Sources Of Funds
A 1. Equity Share Capital
A 2. Reserves & Surplus
A 3. Networth
A 4. Secured Loans
A 5. Unsecured Loans
A 6. Total Debt
A 7. Total Liabilities


B. Application Of Funds
B 1. Gross Block
B 2. Less: Accum. Depreciation
B 3. Net Block
B 4. Capital Work in Progress
B 5. Investments
B 6. Inventories
B 7. Sundry Debtors
B 8. Cash and Bank Balance
B 9. Total Current Assets
B 10. Loans and Advances
B 11. Fixed Deposits
B 12. Total CA, Loans & Advances
B 13. Current Liabilities
B 14. Provisions
B 15. Total CL & Provisions
B 16. Net Current Assets
B 17. Miscellaneous Expenses
B 18. Total Assets

C. Book Value (Rs)

இதில் நாம் முதலில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான, முதலீட்டாளர் அத்தியாவசியமாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்றால் அது A3-இல் இருக்கும் Networth என்பது. பங்கு மூலதனம் (Share Capital) மற்றும் Reserves & Surplus இரண்டையும் கூட்டினால் வருவதுதான் Networth. Share Capital என்பது பங்குகளை வெளியிட்டு அதன் மூலம் இந்த நிறுவனம் பெற்றிருக்கும் முதலீடு என்பது நம் அனைவருக்கும் தெரியும். Reserves & Surplus என்றால் என்ன? நிறுவனங்கள் ஈட்டிய லாபம் அனைத்தையுமே பங்குதாரர்களுக்கு பிரித்து கொடுதுவிடுவதில்லை. லாபத்தில் ஒரு பகுதியை சட்டபூர்வமான ஒதுக்கீடு (Statutory Reserve) என்று ஒதுக்கி வைக்கும். மேலும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன் படுத்த பொது ஒதுக்கீடு (General Reserve) என்று ஒரு தொகையை ஒதுக்கி வைக்கும். இந்த ஒதுக்கீடுகள் எல்லாம் போக மீதமுள்ள பணத்தில் ஒரு பகுதியை பங்குதாரர்களுக்கு Dividend என்று வழங்கும். Dividend கொடுத்து போக மீதி இருக்கம் லாபத்தை லாப நஷ்ட கணக்கு (Accumulated Income) என்ற பெயரில் வைத்திருக்கும். இப்படி செய்யப்பட ஒதுக்கீடுகள் (Reserves) மற்றும் மீதமுள்ள லாபம் (Accumulated Income) அனைத்துமே Reserves & Surplus என்ற தலைப்பில் நிதிநிலை அறிக்கையில் பொறுப்புகள் இருக்கும் பகுதியில் காட்டப்படும். இவை அனைத்துமே Networth இல் சேர்க்கப்படும். புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதால் இந்த பதிவில் Reserves & Surplus என்பதை Accumulated Income ஆக உதாரணப்படுத்தி இருக்கிறோம். அதாவது Share Capital என்பது பங்குதாரர்கள் செலுத்திய பணம், Reserves & Surplus என்பது நிறுவனம் சம்பாதித்த லாபத்தில் மீதமிருக்கும் பணம். ஒரு நிறுவனத்தில் முதலாளி என்பவர் பங்குதாரர்தான், அதனால் பங்குதாரர் பங்குக்கு செலுத்திய பணம் மற்றும் அந்த பங்குகளை வைத்து நிறுவனம் சம்பாதித்த Reserves & Surplus என்பது அனைத்துமே பங்குதாரர்களுக்கு தான் சொந்தம்.

உதாரணமாக, ஒரு நிறுவனம் Rs.10/- முகமதிப்பில் 10,000 ௦௦௦பங்குகளை வெளியிட்டிருந்தால் அதனுடைய Share Capital Rs.1,00,000. /- இந்த நிறுவனம் முதலாண்டில் Rs.20,000 லாபமாக சம்பதிதிருக்கிறது என்றால் அதனுடைய EPS - அதாவது ஒரு பங்கின் சம்பாத்தியம் Rs.2/- (Net profit / Number of Equity Shares). இந்த நிறுவனம் 10% Dividend கொடுக்க முடிவு செய்திருக்கிறது (Dividend என்பது பங்கின் முகமதிப்பில் கணக்கிடப்படும்) Rs.10/- முகமதிப்புள்ள பங்குக்கு 10% என்றால் ஒரு ரூபாய் Dividend ஆக ஒவ்வொரு பங்குக்கும் கிடைக்கும். ஆக மொத்தமிருக்கும் 10,000 பங்குகளுக்கு ஒரு பங்குக்கு Re.1/- வீதம் Rs.10,000 Dividend ஆக கொடுக்கப்படும். நிறுவனத்தின் மொத்த லாபம் Rs.20,000 Dividend Rs.10,000 கொடுத்தது போக லாபத்தில் மீதம் Rs.10,000 இருக்கிறது. இது Reserves & Surplus இல் சேர்க்கப்படும். ஆக முதலாமாண்டு முடிவில் Dividend கொடுத்தது போக, நிறுவனத்தின் Networth என்பது Rs.1,10,000 ஆக இருக்கும். (Share Capital Rs.1,00,000/- மற்றும் Reserves & Surplus Rs.10,000 ஆக மொத்தம் Rs.1,10,000 Networth ஆக இருக்கிறது). ஆக ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்க பட்ட இந்த நிறுவனத்தின் மதிப்பு அதாவது Networth இன்று Rs.1,10,000 ஆகி இருக்கிறது. நிறுவனத்தின் Networth ஐ அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளின் எண்ணிக்கையை கொண்டு வகுத்தால் ஒரு பங்கின் மதிப்பு என்ன என்பது தெரிய வரும், இந்த மதிப்பைதான் Book Value என்கிறோம். இதனைத்தான் மேலே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி நிதிநிலை அறிக்கையில் கடைசியாக C-இல் குறிப்பிட்டிருக்கிறோம். அதாவது ஒரு பங்கின் மதிப்பு (Book Value) Rs.11 ஆக இருக்கிறது (1,10,000/10,000). ஒருவேளை இந்த நிறுவனம் இப்போது மூடப்பட்டால் அல்லது இந்த நிறுவனம் இனி நாம் தொழில் செய்யப்போவதில்லை அதனால் நிறுவனத்தை மூடிவிடுவோம் என்ற ஒரு முடிவு எடுத்தால், ஒவ்வொரு பங்குக்கும் Rs.11/- திருப்பி கொடுக்கும். அதாவது பங்கின் Book Value என்னவோ அதுதான் அந்த பங்கின் உண்மையான மதிப்பு அலல்து அகமதிப்பு (Intrinsic Value of a Share).

இந்த Book Value தான் பங்கின் சந்தை விலையா அல்லது இந்த Book Value-விற்கு தான் சந்தையில் பங்கு விற்கப்படுமா என்ற ஒரு கேள்வி வரலாம். இல்லை. சந்தை விலை (Current Markeet Price - CMP) என்பது எதிர்காலத்தில் இந்த நிறுவனம் எவ்வளவு வளரும் என்ற கணிப்பு, மற்றும் பொருளாதார நிலை, உலகசந்தை, அந்த பங்குக்கு சந்தையில் இருக்கும் Demand மற்றும் supply போன்ற பல விஷயங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் Book Value என்பது இந்த நிறுவனத்தின் கடந்த காலத்தை கணக்கில் வைத்து நிர்ணயிக்கப்படுவது. Book Value என்பது ஏற்கனவே அடையப்பட்ட மதிப்பு, சந்தை விலை என்பது எதிர்காலத்தை மனதில் கொண்டு எதிர்பார்ப்பில் நிர்ணயிக்கப்படும் விலை. (இந்த Book Value விஷயத்தில் சத்யம் கம்ப்யூட்டர் விதிவிலக்கு, ஏனென்றால் அதனுடைய கணக்கியல் எவ்வளவு தூரம் சரி ஒரு இன்றுவரை ஒரு தெளிவில்லாத நிலை இருக்கிறது).

சரி Networth மற்றும் Book Value பற்றி தெரிந்துகொண்டோம். இனி Bonus Share விஷயத்துக்கு வருவோம். ஒரு நிறுவனம் Bonus Share எப்படி தருகிறது? நிறுவனத்தின் லாபத்தில் Dividend கொடுத்து போக மீதி இருக்கும் லாபத்தை Reserves & Surplus இல் வைத்திருக்கும் என்று ஏற்கனவே பார்த்தோம். அந்த Reserves & Surplus இல் இருந்துதான் Bonus Share கொடுக்கப்படும். நாம் ஏற்கனவே எடுத்துக்கொண்ட உதாரணத்தின் படி Rs.10/- முகமதிப்பில் 10,000 ௦௦௦பங்குகளை வெளியிட்டிருக்கும், Share Capital Rs.1,00,000/- ஆக இருக்கும் நிறுவனம் 5 ஆண்டுகள் வெற்றிகரமாக தொழில் செய்து Reserves & Surplus இல் Rs.2,00,000/- வைத்திருக்கிறது என்றால் அந்த நிறுவனத்தின் Networth Rs.3,00,000/- ஆக இருக்கும். ஒரு பங்கின் Book Value Rs.30/- ஆக இருக்கிறது. Reserves & Surplus இல் Rs.2,00,000/- இருப்பதால், பங்குதாரர்களுக்கு Dividend கொடுப்பதற்கு பதிலாக அதிலிருந்து Bonus Share கொடுக்கலாம் என்று நிறுவனம் முடிவு செய்து, 1:1 என்ற விகிதத்தில் Bonus Share கொடுக்கிறது என்று வைத்துக்கொண்டால் ஏற்கனவே ஒரு பங்கு வைத்திருக்கும் பங்குதாரருக்கு ஒரு பங்கு இலவசமாக கிடைக்கும். பங்குதாரரை பொறுத்த வரை பணம் கொடுக்காமல் ஒரு பங்கு இலவசமாக கிடைக்கிறது. ஆனால் அது உண்மையிலேயே இலவசமா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால், Bonus Share கொடுத்த பிறகு நிறுவனத்தின் Networth மற்றும் Book Value எப்படி இருக்கிறது என்று பார்போம்.

Rs.10/- முகமதிப்பில் 20000 Share (நிறுவனம் வெளியிட்ட பங்குகள் 10000 மற்றும் bonus Share ஆக கொடுத்த பங்குகள் 10000 ஆக மொத்தம் 20000 பங்குகள்) என்பதால் Share Capital Rs.2,00,000/-. Reserves & Surplus Rs.2,00,000/- இருந்தது இதில் Rs.1,00,000/- bonus Share ஆக கொடுக்கப்படிருக்கிறது என்பதால் bonus Share கொடுத்த பிறகு Reserves & Surplus 1,00,000/- ஆக இருக்கும். ஆக இரண்டையும் கூட்டினால் Networth Rs.3,00,000/- ஆக இருக்கிறது. Networth இல் மாற்றமில்லை. ஆனால் பங்கின் Book Value என்ன? Rs.3,00,000/20000 பங்குகள் என்பதால் Book Value Rs.15/- ஆக இருக்கிறது. ஏற்கனவே Rs.30/- Book Value இருந்த பங்கின் இப்போதைய Book Value Rs.15/- மட்டுமே. Bonus Share கொடுக்கும் முன் நிறுவனம் மூடப்பட்டிருந்தால், ஒரு பங்குக்கு Rs.30/- கிடைத்திருக்கும். ஆனால் Bonus Share கொடுத்த பிறகு நிறுவனம் மூடப்பட்டால் ஒரு பங்குக்கு Rs.15/- தான் கிடைக்கும் ஆனால் பங்குதாரர் அவர் வைத்திருந்த ஒரு பங்குக்கு ஒரு பங்கு இலவசமாக பெற்றதால் அவர் இரண்டு பங்கு வைத்திருக்கிறார் என்பதால் அவருக்கு ஒரு பங்குக்கு Rs.15/- வீதம் 2 பங்குக்கும் சேர்த்து Rs.30/- கிடைக்கும். ஆக பங்குதாரருக்கு Bonus Share கிடைத்ததால் எந்த லாபமும் இல்லை. சரி இப்படி கணக்கு பார்த்தால் லாபமில்லை, Bonus Share கிடைத்த பிறகு பங்கு சந்தையில் பங்கின் விலை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

Bonus Share கொடுக்கும் முன் இந்த நிறுவனத்தின் பங்குகள், சந்தையில் Rs.50/- ஆக விற்பனை ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். Bonus Share கிடைத்த அன்றே சந்தையில் பங்கின் விலை, போனசு Share விகிதத்திற்கு குறைந்து விடும். 1:1 Bonus என்பதால், Rs.50 ஆக இருந்த பங்கின் விலை Rs.25/- (Rs.50/2) ஆக குறைந்து விடும். ஏன் இப்படி குறைகிறது? ஏற்கனவே ஒரு பங்கின் Book Value Rs.30/- ஆக இருந்தது இப்போது பாதியாக குறைந்தது ஒரு காரணம். மேலும், Bonus Share கொடுப்பதற்கு முன் நிறுவனம் சம்பாதித்த நிகர லாபம் 10000 பங்குகளுக்கு மட்டுமே பிரிக்கப்படும், Bonus Share கொடுத்த பிறகு, அதே லாபம் 20000 பங்குகளுக்கு பிரிக்கப்படும். ஆக ஒரு பங்கின் வருமானம் (EPS) பாதியாக குறையும். இந்த காரணங்களால், bonus Share கொடுத்தும், சந்தையில் பங்கின் விலை உடனடியாக குறைகிறது. Bonus Share கிடைக்கும் முன் ஒரு பங்கை விற்று Rs.50/- கிடைக்குமென்றால் Bonus Share கிடைத்த பிறகு இரண்டு பங்கையும் விற்றால் தான் Rs.50/- கிடைக்கும். அதாவது Bonus Share கிடைத்ததால் எந்த லாபமும் இல்லை.

இப்படி எந்த லாபமும் இல்லை என்றால் எதற்கு அந்த Bonus Share?? ஆனால் ஒரு நிறுவனம் Bonus Share கொடுக்க போகிறது என்ற தகவல் வந்ததும் சந்தை முழுக்க அந்த நிறுவனம் பற்றி மிக பெரிதாக பேசிக்கொள்கிறார்களே ஏன்? எந்த லாபமும் இல்லாத ஒரு விஷயத்துக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று நினைக்கதோன்றும். Bonus Share கிடைப்பதால் குறுகிய கால முதலீட்டாளருக்கு எந்த லாபமும் இல்லை. ஆனால் நீண்ட கால முதலீட்டாளருக்கு கண்டிப்பாக லாபம் உண்டு. முதல் ஆதாயம் சந்தையில் பங்கின் விலை குறைவதால் அதிக முதலேட்டாளர்கள் நிறுவனத்தின் பங்கினை வர்த்தகம் செய்ய நிறைய வாய்ப்பு இருக்கிறது. அடுத்து Bonus கொடுக்கும் அளவு இந்த நிறுவனம் ஏற்கனவே லாபம் சம்பாதித்திருக்கிறது என்பது வெளி உலகுக்கு தெரிய வருவதால், அந்த நிறுவனத்தில் பங்கு வாங்கினால் எதிர்காலத்திலும் நிறுவனம் நல்ல லாபம் சம்பாதித்து அதனால் பங்கின் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் நிறைய முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்வார்கள். அப்படி அதிக முதலீடு செய்ய ஆர்வம் உண்டாவதால் இந்த நிறுவனத்தின் பங்குகளுக்கு Demand கூடி அதனால், பங்குகளின் விலை கூடும். உதாரணமாக, 3 ஆண்டுகளுக்கு முன் இன்போசிஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு Rs.5400 விலையில் இருக்கும் போது, ஒரு பங்கு வைத்திருப்பவருக்கு மூன்று பங்கு என்ற விகிதத்தில் Bonus Share கொடுத்தது. உடனே பங்கின் விலை Rs.1350 ஆக குறைந்தது. அதன்பின் பங்கின் விலை சுமார் Rs.2500 வரை கூடியது. அதாவது ஒரு பங்கு வைத்து மூன்று பங்கு Bonus ஆக பெற்ற ஒரு பங்குதாரர் தான் வைத்திருக்கும் 4 பங்குகளையும் விற்றால் அவருக்கு கிடைத்த பணம் Rs.10000. ஆக Bonus Share என்பது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நிச்சயம் லாபம் தரும். மாறாக Bonus Share கிடைக்கப்போகிறது, நான் உடனே அதை விற்று லாபம் பார்த்து விடுவேன் என்று நினைத்து வாங்கினால் நிச்சயம் உடனடி லாபம் இல்லை. மேலும் Bonus Share என்பது கண்டிப்பாக இலவசமில்லை. ஏற்கனவே பங்குதாரர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய Reserves & Surplus இல் இருந்து கொடுக்கப்படுவதுதான் Bonus Share. மற்றபடி Bonus Share நிச்சயமாக இலவசமில்லை. மேலும் Bonus Share கொடுப்பதால் எதிர்காலத்தில் EPS குறையும்.

ஆக ஒரு நிறுவனத்தின் லாப நஷ்ட கணக்கில் EPS-ஐ ஒப்பிட்டு பார்க்கும் போது, சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு EPS குறைந்திருந்தால் உடனே இந்த நிறுவனம் சரி இல்லை என்று முடிவு செய்துவிடக்கூடாது. அவ்வாறு முடிவு செய்யும் முன், நிறுவனம் இந்த ஆண்டு புதிதாக பங்கு வெளியிட்டிருக்கிறதா, Bonus Share கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். இது மட்டுமில்லாமல் Share Split செய்யப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். Share Split என்றால் என்ன, அது எவ்வாறு EPS-ஐ பாதிக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்போம்.

Friday, March 13, 2009

பணவீக்கம் தொடர்ந்து குறைந்து 0% கீழே சென்றால் நல்லதா?

பணவீக்கம் என்றால் என்ன என்பது நமக்கு எல்லாம் தெரிந்த விஷயம். பொருட்களின் விலை கூடுவதை பணவீக்கம் என்கிறோம். அதாவது ஏற்கனவே Rs.100/- கொடுத்து வாங்கிய பொருளின் விலை இப்போது Rs.110/- ஆக இருந்தால் பணவீக்கம் 10% என்கிறோம். இதற்கு நேர் மாறாக ஏற்கனவே Rs.100/- கொடுத்து வாங்கிய பொருளின் விலை குறைந்து Rs.90/- ஆக இருந்தால் இதையே DEFLATION என்கிறோம் (பணவீக்கத்திற்கு நேர் எதிர்மறையானது). பணவீக்க்கம் என்பது நம்முடைய பணத்தின் மதிப்பை குறைக்கிறது என்றால் அதற்கு நேர்மறையான DEFLATION பணத்தின் மதிப்பை கூட்டுகிறது. அட இது நல்ல இருக்குதே என்று சொல்ல தோணலாம். அனால் இதனுடைய தாக்கம் என்ன என்று கொஞ்சம் ஆழ்ந்து கவனிதொமென்றால் இப்படி சொல்ல தோணாது.

அண்மைக்காலங்களில் 13% வரை இருந்த பணவீக்கம் இப்போது 2.43% ஆக குறைந்திருக்கிறது. இந்த பணவீக்கம் இப்படியே குறைந்து 1% ஆகி அதன் பின் 0% ஆகி அதன் பின் -1% என்று வரும் போது நாம் அதை DEFLATION என்கிறோம். (பணவீக்கத்திற்கு எதிர்மறையான வார்த்தை என்ன என்று தேடிப்பார்த்தேன்...ம்ஹூம் கிடைக்கவில்லை அதனால் DEFLATION என்று எழுத வேண்டிய கட்டாயம்...!!! பணவீக்கதிருக்கு எதிர்மறையாக பணசுருக்கம் என்று வேண்டுமானால் சொல்லலாம்)

பணவீக்க காலங்களில் பொருட்களின் விலை கூடும், மக்களின் வாங்கும் சக்தி குறையும். கூடுகின்ற பொருட்களின் விலையை கட்டுப்படுத்த மக்களிடம் இருக்கும் பண நடமாட்டத்தை குறைக்கும் விதமாக வங்கிகள் அதக வட்டி தந்து மக்களிடம் இருக்கும் பணத்தை வங்கியில் முடக்க முயற்சி எடுக்கும். கையில் பண நடமாட்டம் குறையும் பொது பொருட்களை வாங்குவது குறையும். வாங்குவது குறைவதால் பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உண்டு. இதைதான் மத்திய வங்கி (RBI) செய்யும். மக்களிடம் பண புழக்கத்தை குறைத்து, அதன் மூலம் பொருட்களின் விலையை குறைய வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பணபுழக்கத்தை குறைக்க வங்கிகள் அதிக வட்டி தரும். பணவீக்க காலங்களில் இதெல்லாம் நடக்கும் என்றால், பணசுருக்கம் அல்லது DEFLATION காலங்களில் இதற்கு நேர்மறையாக வங்கிகள் திட்டங்களை வகுக்கும். இந்த விஷயத்தை கவனிக்கும் முன் DEFLATION ஆனால் என்னென்ன பாதிப்புகள் இருக்கும் என்பதை முதலில் பார்த்து விடுவோம்.

DEFLATION என்றால் பொருட்களின் விலை குறையும் என்று பார்த்தோம். பொருட்களின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டிருப்பதால், பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதை தள்ளிப்போட முயற்சிப்பார்கள். பொருட்களின் விலை குறைகிறது என்றால் உற்பத்தியாளர்களுக்கு லாபம் குறையும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் உற்பத்திக்கு செய்த செலவை கூட விற்று வரும் வருமானம் மூலம் எடுக்க முடியாமல் போகலாம். ஆக பொருட்களின் விலை குறையும் போது உற்பத்தியாளர்கள் உற்பத்தியை குறைப்பார்கள். உற்பத்தியை குறைக்கும் போது தொழிலாளர்களை குறைப்பார்கள். வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படும். வேலை இல்லாமல் போவதால் மக்களின் வாங்கும் சக்தி குறையும். வேலை இல்லை என்பதால் கையில் பணம் இல்லை, பணம் இல்லை என்பதால் பொருட்கள் வாங்க முடியாது. பொருட்களை வாங்க ஆள் இல்லை என்னும் சூழ்நிலை வரும்போது, உற்பத்தியாளர்கள் இன்னும் விலையை குறைக்க வேண்டிய அவசியம். அப்படியாவது கிடைத்த விலைக்கு விற்கலாமே என்று எண்ணி, உற்பத்தியாளர்கள் விலையை குறைக்க வேண்டிய நிர்பந்தம் வரும். அப்படி மீண்டும் விலை குறைத்து, நஷ்டத்திற்கு வருவதால் மேற்கொண்டு உற்பத்தியை கூட்ட தயங்கி, இன்னும் உற்பத்தியை குறைக்க வேண்டிய சூழ்நிலை, அதனால் இன்னும் வேலை இழப்பு. இப்படி ஒரு சைக்கிள் மாதிரி விலை குறைப்பு, உற்பத்தி குறைப்பு, வேலை இழப்பு, உற்பத்தி செய்த பொருட்களை விற்க முடியாத தன்மை என்று இது ஒரு புதைகுழி மாதிரி பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கும். இபப்டி ஒரு சூழ்நிலை இருப்பதால் புதிதாக முதலீடு செய்ய யாருக்கும் ஆர்வம் இருக்காது. அதனால் முதலீடு பாதிக்கும், புதிய முதலீடு இல்லாமல் இருப்பதால், வேலைவாய்ப்பு உருவாகாது. வேலை வாய்ப்பு இல்லை, வருமானம் இல்லை, வாங்கும் சக்தி இல்லை என்று பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும்.

இப்படி DEFLATION என்ற ஒரு நிலை வந்தால், மக்களின் வாங்கும் சக்தியை கூட்ட, மக்களின் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, வங்கி தரும் வட்டி விகிதங்களை குறைக்கும். அதாவது, நம் சேமிப்பை வங்கியில் வைப்பதை விட, கையில் வைத்துக்கொள்ளலாம், வங்கி வட்டி என்பது ஒரு லாபமான விஷயமில்லை என்னும் சூழ்நிலைக்கு வங்கி வட்டி குறையும். அதேமாதிரி வங்கியில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் தான் ஜப்பானில் வங்கியில் நம் பணத்தை deposit செய்தால் அந்த வங்கி நமக்கு வட்டி தராது - 1996 முதல் 2006 வரை ஜப்பானில் இந்த நிலை இருந்ததற்கு காரணம் DEFLATION என்று தெரியவரும்போது அதிர்ச்சியாக இருக்கிறதா? இதுதான் உண்மை நிலவரம். ஆக DEFLATION ஆனால் இந்த அளவுக்கு கூட நிலைமை போகலாம். இந்தியாவில் சென்ற ஆகஸ்ட்-ல் 12.91% ஆக இருந்த பணவீக்கம் இப்போது 2.43% ஆக குறைந்திருக்கிறது. இதுவே இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 0% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த ஆண்டு மார்ச் முதல் அக்டோபர் வரை DEFLATION இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உற்பத்தி (IIP) குறைந்திருப்பதை கவனிக்க வேண்டும். சீன DEFLATION ஐ நோக்கி சென்றுகொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. ஏற்கனவே சீனாவில் பணவீக்கம் -1.9% ஆக இந்த ஆண்டு பிப்ரவரி இல் இருந்தது. ஒருமுறை பணவீக்கம் குறைந்து 0% கீழே சென்று விட்டதும் அதை DEFLATION என்று சொல்லிவிட முடியாது. தொடர்ந்து 0% கு கீழே இருந்தால் தான் அது DEFLATION என்று கருதப்படும்.

உலகின் மற்ற நாடுகளில் DEFLATION இருந்திருக்கிறதா என்று பார்தோமென்றால் ஆம் இருந்திருக்கிறது என்று சொல்லலாம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இங்கிலாந்தில் 1921-ல் 10%, 1922-ல் 14% 1930க்களில் 3 முதல் 5% DEFLATION இருந்திருக்கிறது. அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க DEFLATION மூன்று காலக்கட்டங்களில் இருந்ததாக சொல்லலாம். 1836-ல் கிட்டதத்த 30% DEFLATION, 1875 முதல் 1896 வரையான காலக்கட்டங்களில் 1.7%, 1930 - 1933 இல் 10% இருந்திருக்கிறது.

ஆக இன்று இருக்கும் சூழ்நிலையில் இந்தியாவிலும் DEFLATION வருவதற்க்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது.

Saturday, March 7, 2009

நல்ல வருமானம் கிடைக்க எங்கே முதலீடு செய்யலாம்?

நம் ஒவ்வொருவருக்குமே நம்மிடம் இருக்கும் சேமிப்பை எப்படி நல்ல வருமானம் தருவதாக ஆக்க முடியும் என்ற எண்ணம் இருக்கும். உதாரணமாக நம்மிடம் பணம் உபரியாக இருக்கிறது என்றால் அதை எப்படி சேமிப்பில் சேர்க்கலாம், எந்த முறையில் சேமித்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்ற எண்ணம் எல்லோருக்குமே உண்டு. இந்த பதிவில் சேமிக்கும் வழிமுறை பற்றி பார்க்கலாம்.
நம்மிடம் இருக்கும் பணத்தை கீழே இருக்கும் முறைகளில் சேமிக்கலாம்.

1. வங்கியில் வைப்பு நிதி (Fixed Deposit)
2. தங்கம்
3. நிலம்
4. பங்குச்சந்தை
5. பரஸ்பர நிதி (Mutual Fund)

சேமிக்கும் முறையை தேர்ந்தெடுக்கும் முன் அந்த சேமிப்பு பணவீக்கத்தை விட அதிகமாக இருக்க வேண்டும் என்பது அடிப்படை நியதி. அதனால் இந்த பதிவை படிக்கும் இந்த நேரத்தில் நான் ஏற்கனவே எழுதி இருக்கும் ஒரு பதிவான "பணவீக்கமும் நமது சேமிப்பும் " என்ற தலைப்பில் February 2009 இல் எழுதிய பதிவையும் படித்தால் நல்லது. இனி சேமிக்கும் வழிமுறைகளை பார்போம்.

1. வங்கியில் வைப்பு நிதி (Fixed Deposit)
வங்கியின் வட்டி நிலவரங்கள் இன்றைய நிலையில் ஒரு தெளிவில்லாமல் இருக்கிறது. ஏனென்றால் மத்திய வங்கி (Reserve Bank of India) வட்டி விகிதத்தை அடிக்கடி மாற்றுவதால் எல்லா வங்கிகளுமே ஒருவித குழப்பத்தில் இருப்பதால் இன்றைய நிலையில் வங்கியின் வட்டி விகிதம் ஒரு நிலை இல்லாத நிலை இல் இருக்கிறது. இன்றைய நிலையில் வங்கி வட்டி விகிதம் 7 முதல் 8 சதவீதம் வரை இருக்கிறது. நான் ஏற்கனவே முந்தைய பதிவில் சொன்னது போல் நம்முடைய பணவீக்கம் அனேகமாக 5 முதல் ௬ சதவீதம் வரை இருக்கும். ஆக வங்கி வட்டி இன்றைய நிலையில் பாதுகாப்பாக தெரிந்தாலும், அது நிரந்தரம் இல்லை. இதற்கு அடுத்த முதலீட்டு வாய்ப்ப்பாக வருவது தங்கம்.

2. தங்கம்
தங்கம் என்பது இந்தியாவை பொறுத்த வரை அதிக தேவை (Demand) இருக்கும் ஒரு பொருள். இந்தியாவில் இருக்கும் ஒவொருவருக்கும் தம்மிடம்தங்கம் இருந்தால் அது மிகப்பெரிய சேமிப்பு என்று சொல்லும் அளவு மதிப்பான ஒரு பொருள் தங்கம். அனால் இந்த தங்கத்தை ஆபரணமாக வாங்கினால் செய்கூலி, சேதாரம் னு நிறைய செலவுகளுக்கு உள்ளாகிறது. அதே மாதிரி நாம் வாங்கிய நகையை விற்க போனால் அப்போவும் அந்த கழிவு இந்த கழிவு என்று நாம் கொடுத்த பணத்தை விட குறைந்த பணமே கிடைக்கும் நிலை. அதனால் நாம் தங்கத்தை ஒரு சேமிப்பாக வாங்க வேண்டும் என்று முடிவு பண்ணினால் ஆபரண தங்கம் வாங்குவது சரி இல்லை. சுத்த தங்கம் அதாவது Pure Gold வாங்கினால் அது சேமிப்பு என்ற வகையில் சேரும். சரி Pure Gold வாங்கி அதை வீட்டில் பத்திரமாக பூட்டி வைத்து எப்போது திருடன் வருவானோ என்ற பயத்தில் இருப்பதை விட Gold Exchange Traded Fund வாங்கலாம். உங்களிடம் தேமட் இருந்தால் இது சாத்தியம். இல்லேன்னா தங்கத்தை வாங்கி வீட்டில் பூட்டி வைத்து பாதுகாக்க வேண்டியதுதான். அனால் இந்த தங்கம் என்பது உண்மையிலேயே வங்கி வட்டியை விட சிறந்ததா என்று யோசித்தோம் என்றால் சிறந்தது தான் என்று உடனே சொல்லி விட முடியாது. குறிப்பாக 1998 இல் ஒரு கிராம் தங்கத்தின் விலை 500 ரோபாயாக இருந்தது அதுவே 2008 இல் தான் 1000 ரூபாயை தாண்டியது. ஆக 10 வருடத்தில் 2 மடங்காக ஆகி இருக்கிறது. அதாவது சராசரியாக வருடத்திற்கு 7.18 சதவீதம் வருமானம் கொடுத்திருக்கிறது. இதற்கும் வங்கி வட்டிக்கும் இப்போதிருக்கும் சூழ்நிலையில் அதிக வித்தியாசமில்லையே? அனால் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். வங்கி வட்டி என்பது மேலும் கீழுமாக இருந்தாலும், தங்கம் என்பது என்று இருந்தாலும் நம் கையில் இருக்கும் ஒரு பொருள். இந்தியாவில் தங்கத்துக்கு என்றுமே தேவை (Demand) இருக்கும் என்பதால் வங்கி வட்டியை விட தங்கம் ஓரளவு நல்ல வருமானத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. இதுக்கு அடுத்து சேமிப்பு என்று பார்க்கும்போது நம் கண்ணில் தெரிவது நிலம். அது பற்றி பார்போம்.

3. நிலம்
நிலம் என்ற பேச்சி வந்துவிட்டாலே அது ஒருவித மயக்கம் தரும் விஷயம். சென்னை இல் எனக்கு ஒரு கிரவுண்டு (Ground) நிலம் இருக்கிறது என்று சொன்னாலே அது மிக பெருமையான விஷயம் என்ற ஒரு நிலை ஆகி விட்டது. உண்மைதான் - நிலம் வைத்திருந்தால் அது ஒரு பெருமைக்குரிய விஷயம் என்பது உண்மைதான். அனால் நிலத்தை வாங்க வேண்டும் என்றால் அதற்கு பெரிய தொகை வேண்டும். தங்கம் நாம் நினைக்கும் போது நம்மிடம் இருக்கும் பணத்தை பொறுத்து எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம். அதாவது நம்மிடம் ஒரு 10000 ருபாய் இருந்தால் அதற்கு தங்கம் வாங்கிக்கலாம். அனால் நிலம் என்றால் அப்படியா? இல்லையே. அதற்கு மிக பெரிய தொகை வேண்டும். அப்படியே மிகப்பெரிய தொகையை முதலீடு செய்து நிலம் வாங்கினாலும் நாம் விற்கப்போகும் போது விலையை குறைத்துத்தான் கேட்பார்கள். ஏனென்றால் நம் நாட்டில் (நம் நாட்டில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் இப்படித்தான்) நம்மிடம் இருக்கும் நிலத்தை விற்க போகும் போது விலையை குறைத்துதான் கேட்பார்கள். ஏனென்றால் நிலம் வாங்கும் - விற்கும் சந்தை தரகர்களின் கையில் இருக்கிறது. அதனால் நிலம் என்பது ஒரு நல்ல முதலீடு தான். இருந்தாலும் தரகர்களின் ஈடுபாட்டை நமக்கு சமாளிக்க தெரிய வேண்டும். ஆனாலும் நிலம் நல்ல முதலீடுதான். அதிகமான முதலீடு, தரகர் இப்படி பிரச்னைகள் இருந்தாலும், நிலம் நல்ல முதலீடுதான் - அதாவது நாம் ஏற்கனவே பார்த்த இரண்டு முதலீட்டையும் விட இது நல்ல முதலீடு தான் சந்தேகமே வேண்டாம். அதிக பணம் வேண்டும் அது ஒரு மிகப்பெரிய குறைபாடு. அடுத்து நாம் கவனிக்க வேண்டிய முதலீட்டு வாய்ப்பு பங்குச்சந்தை.

4.பங்குச்சந்தை
பங்குச்சந்தை முதலீடு என்பது ஓரளவு விஷயம் தெரிந்து செய்ய வேண்டியது. என்னென்ன விஷயங்களை தெரிந்து அதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை விளக்குவதற்காகத்தான் இந்த வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. பங்குச்சந்தை என்பது சூதாட்டமா என்னும் தலைப்பில் வரும் தொடர் பங்குச்சந்தை பற்றி அணைத்து விஷயங்களையும் அலசும். ஆனால் இதற்கு முன் பார்த்த மூன்று முதலீட்டு வழியை விட பங்குச்சந்தையில் அதிக வருமாம் பார்க்கலாம். கடந்த ௨௦ ஆண்டு புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும் போது, பங்கு சந்தை சராசரியாக வருடத்திற்கு 17 சதவீதம் வருவாய் கொடுத்திருக்கிறது என்று தெரிகிறது. இது வங்கி வட்டியை விட அதிகம் ஆக பங்குச்சந்தை அதிக லாபம் கொடுக்கும் அனால், ரிஸ்க் அதிகம். Sathyam Computers நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் நிலையை யோசித்து பாருங்கள். அதல பாதாளத்துக்கு போய் விட்டார்கள். இதுதான் பங்கு சந்தையின் அபாயத்துக்கு ஒரு எச்சரிக்கை மணி. பங்கு சந்தையில் என்னென்ன கவனிக்க வேண்டும் என்பதை நம்முடைய தொடரை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். ஆனால் பங்கு சந்தை என்பது நல்ல லாபத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை, அதே நேரத்தில் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி நிறைய விஷயங்களை தெரிந்துக்கொள்ள நேரமும், விபரமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது Mutual Funds. இனி Mutual Funds பற்றி பார்போம்.

5. பரஸ்பர நிதி (Mutual Funds)
Mutual Funds என்பது நம்மிடம் இருந்து பணத்தை வாங்கி, அந்த பணத்தை பங்குச்சந்தை இல் முதலீடு செய்யும். நமக்கு பங்குச்சந்தை பற்றி படித்து, விஷயங்களை அலசி பார்த்து எந்த பங்கை வாங்கலாம் என்று முடிவு செய்ய நேரமில்லை அல்லது அதற்கான விஷயங்கள் நமக்கு தெரியவில்லை என்று நாம் நினைத்தால் நாம் நாட வேண்டியது Mutual Funds ஐ தான். நம்மிடம் இருந்து வாங்கும் பணத்தை நல்ல நிறுவன பங்குகளில் முதலீடு செய்து, நமக்கு நல்ல வருமானம் கொடுக்கும் ஒரு வழிதான் Mutual Funds. இப்படி நமக்காக வாங்கி நமக்கு லாபத்தை கொடுப்பதற்காக Mutual Funds நம்மிடம் ஒரு தொகையை செலவு என்று வசூலிக்கும். இது நம்முடைய வருமானத்தில் இருந்து கழிக்கப்படும் என்பதால், நாம் இதை தனியாக செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இப்படிப்பட்ட வசதியோடு வரும் Mutual Funds நடுத்தர வர்க்கத்துக்கு ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பாக இருக்கிறது. எனவே இதை எல்லாம் யோசித்து பார்த்து, முதலீடு செய்வது நலம்..

சரி படிச்சிட்டீங்கல்ல, கீழே இருக்கும் Tamilish இல் ஒரு ஒட்டு போட்டுட்டு போங்க. மறக்காம உங்க கருத்தை பின்னோட்டத்தில் எழுதுங்க.

Saturday, February 28, 2009

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 6

இந்த பதிவில் EPS என்பதை பற்றி இன்னும் என்னென்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்று பார்போம்.


EPS என்றால் என்ன என்பதை ஒரு உதாரணத்தை வைத்து பார்போம். ஒரு நிறுவனத்தின் நிகர லாபம் Rs.10,000/- . அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் மொத்த பங்குகள் 1,000 என்று வைத்துக்கொண்டால் ஒரு பங்குக்கான வருமானம் என்ன என்பதை கணக்கிட்டால் EPS கிடைக்கும். இந்த உதாரணத்தின்படி ஒரு பங்குக்கான சம்பாத்தியம் Rs.10/- அதாவது Net Profit/ Number of Shares (10,000/1,000). இந்த நிறுவனத்தில் நாம் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்கும் வருடத்திற்கு 10 ரூபாய் சம்பாதிக்கிறது என்று பொருள். இரண்டு நிறுவனத்தை நாம் ஒப்பிட்டு பார்க்கும் போது EPS ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. உதாரணமாக இரண்டு நிறுவங்களில், ஒவ்வொரு நிறுவனத்தின் வருட நிகர லாபம் Rs.10,000/- என்று வைத்துக்கொள்வோம். இதில் ஒரு நிறுவனம் 1,000 பங்குகளை வெளியிட்டிருக்கிறது இன்னொரு நிறுவனம் 2,000 பங்குகள் வெளியிட்டிருக்கிறது. லாபத்தை வைத்து பார்க்கும்போது இரண்டு நிறுவனமும் சமமாக இருப்பதுபோல் தோன்றும், ஏனென்றால் இரண்டு நிறுவனமும் ஒரே அளவு லாபம் சம்பாதித்திருக்கிறது. ஆனால் EPS பார்த்தோமென்றால் முதல் நிறுவனத்தின் EPS Rs.10/- இரண்டாவது நிறுவனத்தின் EPS Rs.5/- மட்டுமே. நாம் முதல் நிறுவனத்தில் பங்கு வாங்கினோம் என்றால் நமது ஒரு பங்குக்கு 10 ரூபாய் வருட சம்பாத்தியம். அதே நேரத்தில் இரண்டாவது நிறுவனத்தில் பங்கு வாங்கினோம் என்றால் ஒரு பங்கின் சம்பாத்தியம் 5 ரூபாய் மட்டுமே. அதிக வருமானம் இருக்கும் நிறுவனத்தில் தான் நாம் முதலீடு செய்ய வேண்டும் என்பது அடிப்படை. ஆக முதலாவது நிறுவனம் இரண்டாவது நிறுவனத்தை விட நல்ல நிறுவனம் என்று முடிவு செய்ய EPS தான் உதவும். எனவே EPS மிக மிக முக்கியம்.


EPS என்பது வருடாவருடம் கூடிக்கொண்டே இருக்கவேண்டும். குறைந்தபட்சம் பணவீக்கத்தை சமன் செய்யும் அளவாவது கூடி இருக்க வேண்டும். EPS கூட வேண்டும் என்றால் நிகர லாபம் கூடவேண்டும். ஆனால் சில நிறுவனங்களில் பார்த்தோமென்றால் நிகரலாபம் கூடி இருந்தாலும் EPS குறைந்திருக்கும். இது ஏன் என்று பார்போம். நாம் ஏற்கனவே பார்த்த உதாரணத்தின் படி நிகரலாபம் Rs.10,000,௦௦௦/- அது வெளியிட்டிருக்கும் பங்குகளின் எண்ணிக்கை 1,000 இந்த ஆண்டு EPS Rs.10/- . இதே நிறுவனம் அடுத்த ஆண்டு Rs.15,000௦௦௦/- லாபமாக சம்பதிதிருக்கிறது என்றால் இரண்டாமாண்டு EPS Rs.15/-. ஒருவேளை இந்த நிறுவனம் இரண்டாமாண்டில் மேலும் பங்குகளை வெளியிட்டிருந்தால் EPS பாதிக்கப்படும். உதாணரமாக இந்த நிறுவனம் இரண்டாமாண்டில் 1,000 பங்குகளை வெளியிட்டிருந்தால் மொத்த பங்குகளின் எண்ணிக்கை 2,000, நிகர லாபமோ Rs.15,000/- ஆக EPS Rs.7.50 ஆக இருக்கும். இரண்டு ஆண்டுகளிலும் EPS மட்டுமே ஒப்பிட்டு பார்தோமென்றால் இரண்டாமாண்டு நிறுவனம் சரிவில் இருப்பது போல் தோன்றும், ஆனால் உண்மையிலேயே இரண்டாமாண்டு இந்த நிறுவனம் 50% வளர்ச்சி அடைந்திருக்கிறது. சரி அதிக பங்குகளை வெளியிட்டால் நிறுவனத்திற்கு பணம் உள்ளே வந்திருக்கவேண்டும், அந்த பணத்தை வைத்து லாபம் சம்பாதித்து இந்த நிறுவனம் EPS-ஐ கூட்டி இருக்கவேண்டுமே... இது ஏன் நடக்கவில்லை என்று நாம் கவனிக்கக் வேண்டும். ஒருவேளை இன்னொரு தொழிற்கூடம் கட்ட இந்த பணத்தை உபயோகித்தார்கள் என்றால் அந்த தொழிற்கூடம் உற்பத்தியை ஆரம்பிக்கும்வரை, பங்குமூலமாக திரட்டிய பணத்தால் வருமானம் இருக்காது என்பதால் EPS குறைவாகவே இருக்கும். இந்த சந்தர்பத்தில் நாம் நிகரலாபம் குறையாமலிருக்கிறதா என்பதையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.


இதுமட்டுமின்றி Bonus Share என்று சொல்லப்படும் இலவச பங்குகளை நிறுவனம் ஏற்கனவே இருக்கும் பங்குதாரர்களுக்கு கொடுத்திருந்தாலும் நிறுவனம் வெளியிட்டிருக்கும் பங்குகளின் எண்ணிக்கை கூடி அது EPS-ஐ குறைக்கும். சரி Bonus Share என்றால் என்ன? ஒரு நிறுவனம் தான் சம்பாதிக்கும் லாபம் முழுவதையும் டிவிடென்ட் ஆக பங்குதாரர்களுக்கு கொடுப்பதில்லை. சம்பாதித்ததில் ஒரு பகுதியைத்தான் அதாவது EPS-இன் ஒரு பகுதியைத்தான் டிவிடென்ட் ஆக கொடுக்கும். மீதமுள்ள சம்பாதித்த லாபத்தை நிறுவனம் வைத்திருக்கும். இந்த லாபம் இருப்புநிலை அறிக்கையில் (Balance Sheet) Accumulated Profit அல்லது Reserves and Surplus என்று பொறுப்புகள் இருக்கும் பகுதியில் இருக்கும். ஒரு நிறுவனம் சம்பாதிக்கும் லாபம் அனைத்தும் பங்குதாரர்களுக்கே சொந்தம். அதனால் சம்பாதித்த லாபம் அத்தனையையும் Accumulated Profit அல்லது Reserves and Surplus என்று Balance Sheet இல் வைக்கப்பட்டிருக்கும். ஒருவேளை Dividend கொடுத்திருந்தால், டிவிடென்ட் கொடுத்து போக மீதமுள்ள லாபம் Accumulated Profit அல்லது Reserves and Surplus என்று வைக்கப்பட்டிருக்கும். இப்படி பல வருடமாக சேர்ந்த லாபத்தை - அதாவது சம்பாதித்த லாபத்தில் டிவிடென்ட் கொடுத்தது போக மீதியாக இருக்கும் லாபத்தை - பங்குதாரர்களுக்கு Bonus Share என்று இலவசமாக நிறுவனம் கொடுக்கும் (இப்படி கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை, நிறுவனம் விரும்பினால் கொடுக்கலாம்) . இப்படி கொடுக்கப்படுவதால், நிறுவனம் வெளியிட்டிருக்கும் பங்குகளின் எண்ணிக்கை கூடி, அதனால் EPS குறையும். Bonus Share கொடுக்கப்படும்போது அங்கே பங்குதாரர்கள் நிறுவனத்திற்கு பணம் தர வேண்டியது இல்லை - அதனால் தான் அதாவது இலவசமாக கொடுக்கப்படுவதால் இதை Bonus என்று சொல்கிறோம்.


Bonus Share என்பது உன்ன்மையிலேயே இலவசம் தானா என்பது பற்றியும், EPS வேறு என்னென்ன விஷயங்களுக்கு பயன்படுகிறது, ஒரு பங்கை வாங்கும் போதோ விற்கும் போதோ EPS-ஐ எப்படி கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றியும், Share Split என்றால் என்ன என்பது பற்றியும் Share Split என்பது EPS-ஐ எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றியும் வரும் பதிவில் பார்ப்போம்.


பின்குறிப்பு : பங்கு சந்தை என்பது சூதாட்டமா? என்ற கட்டுரை ஒரு தொடராக எழுதப்படுவதால், புதிதாக வரும் நண்பர்கள் முன்னோட்டதிலிருந்து படித்தால் இதில் சொல்லப்படும் விஷயங்கள் ஒரு கோர்வையாக, படித்து புரிந்துகொள்ள எளிதாக இருக்கும். உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Tuesday, February 24, 2009

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 5

சென்ற பதிவில் லாபநஷ்ட கணக்கில் கவனிக்க வேண்டிய விஷயங்களில் சிலவற்றை பார்த்தோம். குறிப்பாக Operating Profit, Other Income மற்றும் Extra-ordinary Items பற்றி பார்த்தோம். இது மட்டுமில்லாமல் விற்பனை வருடா வருடம் கூட வேண்டும் என்றும் பார்த்தோம். அதேமாதிரி விற்பனை மட்டும் கூடினால் போதாது, அப்படி கூடும் விற்பனை லாபத்தையும் கூட்ட வேண்டும் என்றும் பார்தோம். இனி இந்த பதிவில் வேறு என்னென்ன கவனிக்க வேண்டும் என்று பார்போம்.

லாபநஷ்ட கணக்கில் வட்டி (Interest) என்று ஒரு line item இருக்கும் (வரிசை என் 6-ல் உள்ளது : பார்க்க பாகம் 4). இது ஒரு நிறுவனம் குறிப்பிட்ட வருடத்தில் எவ்வளவு பணம் வட்டி செலுத்தியிருக்கிறது என்பதை குறிக்கும். இன்றைய காலகட்டத்தில் கடன் இல்லாமல் தொழில் செய்வது என்பது மிக கஷ்டமான காரியம், கிட்டத்தட்ட கடன் இல்லாமல் தொழில் செய்ய முடியாது என்று கூட கூறலாம். ஆக கடன் இருந்தால் வட்டி கொடுக்க வேண்டியிருக்கும். சில நிறுவனங்கள் குறைந்த அளவு வட்டி செலவு செய்திருக்கலாம், வேறுசில நிறுவனங்களோ சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை வட்டிக்கே செலவிடலாம். நாம் ஏற்கனவே கூறியது போல் குறைந்தபட்சம் மூன்று வருட லாபநஷ்ட கணக்கை நாம் ஒப்பிட்டு பார்க்கவேண்டும். அப்படி பார்க்கும்போது ஒவ்வொரு வருடமும் வட்டிக்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறது என்று பார்க்கவேண்டும். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வட்டி அதிகமா குறைவா என்று கவனிக்க வேண்டும். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வட்டி குறைவாக இருக்கிறது என்றால் அந்த நிறுவனம் கடன்களை திருப்பி செலுத்தியிருக்கிறது என்று பொருள். இது ஒரு விதத்தில் நல்ல விஷயம்.

கடன்களை திருப்பி செலுத்துவதற்கு அந்த நிறுவனம் பணத்தை இரண்டு வழிகளில் ஏற்பாடு செய்யலாம். ஒன்று நல்ல லாபம் சம்பாதித்து லாபத்தில் வந்த பணத்தை வைத்து கடனை அடைத்திருக்கலாம் அல்லது புதிதாக பங்குகளை வெளியிட்டு அதன் மூலம் வந்த பணத்தை வைத்து கடன்களை திருப்பி செலுத்தி இருக்கலாம். புதிதாக பங்குகளை வெளியிடாமல் (லாபத்தின் மூலம்) கடன்களை திருப்பி செலுத்தும் அளவு இந்த நிறுவனத்திடம் பணம் இருந்திருக்கிறது என்றால் அந்த நிறுவனம் நல்ல நிலையில் நடக்கிறது என்று அர்த்தம். நிச்சயமாக இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் நம் முதலீடு நன்கு வளரும் என்று நம்பலாம். (இதை மட்டுமே வைத்து முதலீடு செய்து விடக்கூடாது... முதலீடு செய்யலாம் என்பதற்கு சாதகமான அம்சங்களில் இதுவும் ஒன்று.) புதிதாக பங்குகளை வெளியிட்டு கடன்களை அடைத்திருக்கிறது என்றால் அதன் சாதக பாதகங்களை வரும் பதிவுகளில் கவனிப்போம்.

சில நிறுவனங்கள் நல்ல லாபம் சம்பாதித்திருக்கும் ஆனால் சம்பாதித்த லாபத்தில் பெரும்பகுதி வட்டிக்கு செலவாகி இருக்கும். இப்படி லாபத்தில் பெரும்பகுதியை வட்டி செலுத்த செலவிட்டால், முதலீடு செய்தவர்களுக்கு என்ன மிஞ்சும்? அல்லது முதலீடு செய்தவர்களுக்கு லாபத்தில் விகிதம் குறையத்தானே செய்யும்? அதனால் அதிக வட்டி செலுத்தும் நிறுவனங்களில் முதலீடு செய்வதை ரொம்ப யோசித்து முடிவு செய்ய வேண்டும். உதாரணமாக சுபிக்க்ஷா சிக்கலில் இருக்கிறது என்று செய்திகள் வருகிறது. அதற்கு சுபிக்க்ஷாவின் கடனும் ஒரு முக்கிய காரணம். அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் வட்டிக்கு செலவிட்டு, நடப்பு முதலீடு என்று சொல்லப்படும் அன்றாட தேவைக்கான Working Capital-ல் பாதிப்பு வந்து சுபிக்க்ஷா இன்று மூடப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது என்று செய்திகள் வருகிறது. ஆக அளவுக்கதிகமான வட்டி ஒரு எச்சரிக்கை மணி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதற்கு ஒரு விதிவிலக்கு உண்டு. சில நிறுவனங்கள் தொழில் விருத்தி செய்ய புதிதாக கடன் வாங்கியிருக்கும். அதாவது புதிதாக ஒரு தொழிற்கூடம் அமைக்க கடன் வாங்கியிருக்கலாம். தொழிற்கூடம் என்பதை ஒரு நாளில் கட்டி முடித்து அடுத்த நாளே உற்பத்தி செய்து பொருட்களை விற்பனை செய்துவிட முடியாது. நிறுவனம் இருக்கும் தொழிலை பொறுத்து கட்டுமானத்திற்கான காலம் ஆறு மாதமோ, ஒரு வருடமோ அல்லது அதற்கு மேலாக கூட ஆகலாம். அதற்கு பிறகுதான் புதிய தொழிற்கூடம் உற்பத்தி ஆரம்பித்து விற்பனை கூடி அதன்மோலம் லாபமும் கூடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், புதிய தொழிற்கூடம் உற்பத்தியை ஆரம்பிக்கும் முன்பும், வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டியிருக்கும் - விற்பனை கூடி இருக்காது. இது நஷ்டதிற்கோ அல்லது குறைந்த நிகர லாபத்திற்கோ வழிவகுக்கலாம். எனவே வட்டி கூடியிருக்கிறது என்றதும், நிறுவனம் மோசம் என்று முடிவு செய்து விடாமல், நிறுவனம் சம்மந்தப்பட்ட செய்திகளை படித்துப்பார்த்து நாம் புரிந்துகொள்ளலாம். எங்கே தகவல் கிடைக்கும்? அனைத்து நிறுவனங்களும் தமது தொழில் சம்மந்தப்பட்ட தகவல்களை பங்குசந்தைக்கு கொடுக்க வேண்டும். அதனால் BSE அல்லது NSE வலைத்தளத்தில் பார்க்கலாம்.

ஆக விற்பனை கூடி இருக்க வேண்டும், Operating Profit கூடி இருக்க வேண்டும், Extra-ordinary Items பற்றி கவனிக்க வேண்டும், வட்டி செலவை கவனிக்க வேண்டும். லாபநஷ்ட கணக்கு என்பது இதை எல்லாம் கடந்துதான் நிகர லாபம் என்ற நிலையை அடைகிறது. நிகர லாபம் விற்பனையில் எத்தனை சதவிகிதம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். உதாரணமாக சென்ற ஆண்டு விற்பனை 1,000 ரூபாயாக இருந்து நிகர லாபம் (Net Profit) 200 ரூபாய இருந்தால் நிகர லாபம் (Net Profit Ratio) 20 சதவிகிதம் என்று சொல்கிறோம் (200/1000x100). ஒவ்வொரு வருடமும் இந்த Net Profit Ratio என்பது கொஞ்சமாவது கூட வேண்டும். கூடாவிட்டாலும் குறையாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் நிகர லாபம்தான் முதலீட்டளர்களுக்கான லாபம். இந்த லாபத்தில் ஒரு பகுதியை தான் முதலீட்டளர்களுக்கு நிறுவனம் Dividend என்ற பெயரில் வருடா வருடம் கொடுக்கும். மேலும் ஒரே தொழிலில் இருக்கும் இரண்டு வெவ்வேறு நிறுவங்களின் Net Profit Ratio-வை ஒப்பிட்டு பார்த்து இரண்டில் எந்த நிறுவனத்தின் Ratio அதிகமோ அந்த நிறுவனம் நன்றாக இயங்குகிறது என்று முடிவுக்கு வரலாம். இந்த ஒப்பீடு ஒரு வருடத்தை மட்டும் வைத்து செய்யாமல் குறைந்தபட்சம் 2 நிறுவனங்களின் 2 ஆண்டு கணக்கை வைத்து பார்க்க வேண்டும். இந்த மாதிரி ஒப்பிடுதல் (Comparison), Ratio கணக்கிடுதல் இவையெல்லாம் நிறுவனத்தின் லாபம் சம்பாதிக்கும் திறனை நாம் உணர்ந்துகொள்ள உதவும்.

இனி லாபநஷ்ட கணக்கில் கவனிக்க வேண்டிய மிக மிக முக்கியமான பகுதிக்கு நாம் வருகிறோம். அதுதான் EPS என்ற Earning Per Share என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், ஒரு பங்கு எவ்வளவு சம்பாதிக்கிறது என்பதை குறிக்கும் ஒரு சொல். EPS பற்றி பேச நிறைய விஷயங்கள் இருப்பதால் அடுத்த பதிவில் EPS பற்றி மட்டுமே எழுதலாம் என்றிருக்கிறேன்.

அதற்குமுன் இதை படிக்கும் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். ஒரு பங்கு வாங்குமுன் இவ்வளவு விஷயங்கள் பார்க்க வேண்டுமா என்று தோணலாம். பங்கு சந்தை முதலீடு என்பது நான் ஏற்கனவே கூறியதுபோல், ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டை பொறுத்துதான் நமக்கு வருமானத்தை கொடுக்கும். அதனால் அடிப்படையில் நல்ல நிறுவன பங்கை தேர்ந்தெடுத்து வாங்கினால் நல்ல வருமானம் பார்க்க அதிக வாய்ப்பு உண்டு. நண்பர் திரு.சதுக்கபூதம் அவர்கள் என்னுடைய ஒரு பதிவிற்கு கீழ்க்கண்ட பின்னூட்டத்தை கொடுத்திருந்தார்.

//தற்போது இடை தரகர்கள் மற்றும் சிலர் உள் நோக்கத்துடன் தவறான செய்திகளை பரப்புவது வாடிக்கையாகி விட்டது. செயற்கையான் விலை ஏற்றத்திற்கு இது போன்ற செய்தி தாள்களை உபயோக படுத்துகிறார்கள். சிறு முதலீட்டாளர்கள் இவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்//

மேற்கண்ட முன்னூட்டம் இன்றைய சில தரகர்கள் மற்றும் சிலரின் தவறான நோக்கத்தை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது (அனைத்து தரகர்களுமே தவறாக வழிகாட்டுகிறார்கள் என்று எடுத்துக்கொள்ள கூடாது). இந்த மாதிரி தவறான வழிகாட்டுதல்களை தவிர்க்க, நாம் செய்யும் முதலீடு பாதுகாப்பானதாக இருக்க நாம் நிறைய விஷயங்களை அலசி ஆராய்ந்துதான் முதலீடு செய்ய வேண்டும். லாபம் சம்பாதிப்பதுதான் பங்கு சந்தை முதலீட்டின் ஒரே குறிக்கோள் என்றாலும், அதைவிட முக்கியமாக முதலீடு அழிந்து போகாமல் இருக்க வேண்டுமே...!!! அதற்க்காக இப்படி நிறைய விஷயங்களை அலசி பார்த்து, அடிப்படையில் வலுவாக இருக்கும் நிறுவனங்களின் (Fundamentally Strong Companies) பங்குகளை வாங்கினோமானால் நம் முதலீடும் பாதுகாப்பானதாக இருக்கும், வருமானமும் நன்றாக இருக்கும். எனவே நாம் ஏற்கனவே கூறிய விஷயங்களை எல்லாம் கவனித்தே ஆகவேண்டும்.

இனி அடுத்த பதிவில் EPS பற்றி மேலும் விரிவாக பார்ப்போம்.

Saturday, February 21, 2009

பணவீக்கமும் நமது சேமிப்பும்

கடந்த ஆறேழு மாதமாக பணவீக்கம் என்று சொல்லப்படும் Inflation பற்றி அடிக்கடி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பணவீக்கம் என்றல் என்ன? இதை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் பார்க்கலாம். இன்று ஒரு பொருளை நீங்கள் 100 ரூபாய் கொடுத்து வாங்க முடிகிறது என்றால் இதே பொருளை அடுத்த ஆண்டு அதாவது ஒரு வருடம் கழித்து வாங்க எவ்வளவு கொடுக்க வேண்டியிருக்கும்? ஏனென்றால் வருடா வருடம் அனைத்து பொருளின் விலையும் கூடத்தான் செய்யும். குறைந்தபட்சம் 105 ரூபாய் கொடுக்கவேண்டியிருக்கும். அலல்து 110 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். 105 ரூபாய் கொடுத்து வாங்கினீர்கள் என்றால் பணவீக்கம் 5%, 110 ரூபாய் கொடுத்து வாங்கினீர்கள் என்றால் பணவீக்கம் 10%. அதாவது இன்று நாம் 100 ரூபாய் கொடுத்து வாங்கும் பொருளுக்கு அடுத்த ஆண்டு 110 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். இதையே வேறுமாதிரி சொல்லவேண்டும் என்றால், அடுத்த ஆண்டு நாம் 110 ரூபாய் சம்பாதித்தால் அதனுடைய இன்றைய மதிப்பு 100 ரூபாய் மட்டுமே. அதனால் பணத்தை வீட்டில் இரும்புப்பெட்டியில் பூட்டி வைத்தால் பணம் பாதுக்காப்பாக இருக்கும், ஆனால் மதிப்பை இழக்கிறது என்று அர்த்தம்.

இந்தியாவில் கடந்த கால பணவீக்கத்தை கவனித்தால் அனேகமாக ஐந்து முதல் ஆறு சதவீதம் வரை இருந்திருக்கிறது. மூன்று மாதத்திற்கு முன் 12% ஆக இருந்த பணவீக்கம், இப்பொழுது நான்கு முதல் ஐந்து சதவீதம் வரை இருக்கிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதத்திற்குள் பணவீக்கம் 3% வரை குறையலாம் என்று எதிர்பார்க்க படுகிறது. இருந்தாலும் நம்முடைய இந்த பதிவிற்கு பணவீக்கத்தை 6% உதாரணமாக வைத்துக்கொள்ளலாம். இப்போது வங்கியில் வைப்பு நிதிக்கு (Fixed Deposit) 8% வரை வட்டி கிடைக்கிறது. இந்தநிலையில் ஒருவர் வங்கியில் 100 ரூபாய் Deposit செய்கிறார் என்றல் ஒரு வருடம் கழித்து அவருக்கு 108 ரூபாய் கிடைக்கும். இதை வைத்து நமக்கு வருமானம் 8 ரூபாய் என்று கணக்கிடுகிறோம். உண்மையில் வருமானம் 8 ரூபாயா? இல்லை. பணவீக்கம் 6% என்ற நிலையில் இப்போது 100 ரூபாய்க்கு வாங்கும் பொருளை அடுத்த ஆண்டு வாங்க 106 ரூபாய் ஆகும் . நமக்கு வங்கி தருவதோ 108 ரூபாய். ஆக நமக்கு உண்ண்மையான வருமானம் 2 ரூபாய் மட்டுமே.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வங்கியில் நாம் செய்யும் Deposit க்கு வெறும் 4% வட்டி மட்டுமே கிடைத்தது. அந்த சூழ்நிலையில் நாம் செய்த Deposit மூலம் உன்ன்மையில் நமக்கு 2% நஷ்டம் தான் ஆனது. அதனால் நாம் முதலீடு பற்றி முடிவு செய்யும் முன் பணவீக்கத்தையும் மனதில் வைத்து முடிவு செய்ய வேண்டும். நாம் செய்யும் முதலீடு பணவீக்கத்தை விட அதிக வருமானம் கிடைப்பதாக இருக்கவேண்டும்.

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 4

லாப நஷ்ட கணக்கு என்பது ஒரு நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் எவ்வளவு விற்பனை செய்திருக்கிறது, என்னென்ன செலவுகள் செய்திருக்கிறது மொத லாபம் என்ன, நிகர லாபம் என்ன போன்ற விஷயங்களை கொண்டிருக்கும். வழக்கமாக லாப நஷ்ட கணக்கு வருடத்திற்கு ஒருமுறை அதாவது 12 மதங்களுக்கான கணக்காக இருக்கும். பங்கு சந்தையில் பதிவு செயயப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் வருடாந்திர கணக்கை பங்கு சந்தைக்கு தெரிவிக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு 3 மாதத்திற்கும் லாப நஷ்ட கணக்கை சமர்பிக்க வேண்டும். இவ்வாறு ஒரு விதிமுறை பங்குசந்தையில் இருக்க காரணம் முதலீட்டாளர்கள் தாங்கள் பங்கு வைத்திருக்கும் நிறுவனத்தின் செயல்பாட்டை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

லாப நஷ்ட கணக்கு எனபது அந்த நிறுவனத்தில் லாப நஷ்டத்தை பற்றிய குறிப்பு என்றால் நிதிநிலை அறிக்கை (Balance Sheet) என்பது குறிப்பிட்ட ஒரு நாளில் அந்த நிறுவனத்தின் சொத்து எவ்வளவு, அந்த நிறுவனத்தின் பொறுப்பு அல்லது அந்த நிறுவனம் கொண்டிருக்கும் கடன்கள் எவ்வளவு என்பதை குறிக்கும் ஒரு statement. ஒவ்வொரு வருடத்தின் இறுதியில் நிறுவனம் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கும். உதாரணமாக 2007-2008 நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை 31.03.௨008 தேதியிட்டு சமர்பிக்க பட்டிருக்கும். அதேபோல் 2008-2009 நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை 31.03.2009 தேதியிட்டு சமர்பிக்கப்படும். இந்த இரண்டு நிதிநிலை அறிக்கைக்கும் இடைப்பட்ட 12 மாத காலத்தில் இந்த நிறுவனத்தின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை குறிப்பதுதான் லாப நஷ்ட கணக்கு. இதுமட்டுமின்றி பணம் எந்த வழியில் வந்தது அது எப்படி எல்லாம் செலவு செய்யப்பட்டது என்ற விபரங்கள் அடங்கிய ஒரு அறிக்கையை சமர்பிக்க வேண்டும். அதை Cash Flow statement என்று அழைக்கிறோம். ஆக, நிறுவனம் 3 விதமான அறிக்கைகள் சமர்பிக்கிறது.

1. லாப நஷ்ட கணக்கு (Profit and Loss Account)
2. நிதிநிலை அறிக்கை (Balance Sheet)
3. Cash Flow Statement

முதலில் லாப நஷ்ட கணக்கில் நாம் கவனிக்க வேண்டியது என்ன என்பதை பார்ப்போம். ஏற்கனவே கூறியதுபோல் லாப நஷ்ட கணக்கு அந்த நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் லாபம் சம்பதிததா அலல்து நஷ்டமடைந்திருக்கிறதா என்பதை குறிக்கும். நிறுவனங்களின் லாப நஷ்ட கணக்கு என்பது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மாதிரி அமைப்பில் இருக்கும்.

1. Sales
2. Operating Expenses
3. Operating Profit (1-2)
4. Other Income
5. NPBDIT (Net Profit Before Depreciation, Interest and Tax) (3+4)
6. Interest
7. NPBDT (Net Profit Before Depreciation and Tax) (5-6)
8 . Depreciation
9. NPBT (Net Profit Before Tax) (7-8)
10. Extra-ordinary items - Profit / Loss
11. NPBT (Net Profit Before Tax - post extra-ordinary items) (9 and 10)
12. Tax
13. NPAT (Net Profit After Tax)/Reported Net Profit (11-12)
14. Earning per Share (EPS)

இதில் நாம் கவனிக்க வேண்டியது என்ன? முதலில் இந்த நிறுவனம் லாபத்தில் இருக்கிறதா அலல்து நஷ்டத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள வரிசை எண் 13-ஐ பார்க்க வேண்டும், இந்தி பார்த்தால் நமக்கு அந்த நிறுவனம் எவ்வளவு நிகர லாபம் சம்பாதித்திருக்கிறது என்று தெரியும். ஆனால் இதை மட்டுமே வைத்து, லாபத்தில் இருக்கிற ஒரே காரணத்திற்காக அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாமா என்றால் சரி என்று சொல்வதற்கு முன் இன்னும் நிறைய விஷயங்களை பார்க்க வேண்டும். எந்த ஒரு நிறுவனத்தின் லாபத்தை பற்றி நாம் ஒரு கணிப்புக்கு வர வேண்டும் என்றால் ஒரு வருட லாபத்தை மட்டும் வைத்து முடிவு செய்ய கூடாது. மேலும் நிகர லாபத்தை மட்டும் பார்ப்பதை விட Operating Profit ஐ பார்க்க வேண்டும். operating Profit என்றால் என்ன? அந்த நிறுவனம் செய்யும் விற்பனையில் செலவுகளை கழித்த பிறது வரும் லாபத்தை operating Profit என்கிறோம். தேய்மானம், வட்டி மற்றும் வருமானவரி போன்றவற்றை கழிக்கும் முன் இருக்கும் லாபம்தான் Operating Profit. குறைந்தபட்சம் மூன்று வருட லாப நஷ்ட கணக்கை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அவ்வாறு ஒப்பிடும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்? அந்த நிறுவனத்தின் விற்பனை (sales) வருட வருடம் கூடுகிறதா என்று கவனிக்க வேண்டும். ஏனென்றால் ஒரு நிறுவனம் என்பது வருடா வருடம் வளர வேண்டும். வளர்ச்சி என்பது விற்பனையில் தெரிய வரும். விற்பனை கூடுகிறதா என்று கவனிக்க வேண்டும். அவ்வாறு கூடும் விற்பனை லாபத்தை கூட்டுகிறதா என்று கவனக்க வேண்டும். விற்பனை கூடினால் லாபம் கூடத்தானே வேண்டும் என்று நமக்கு தோணலாம். ஆனால் சில நிறுவனங்கள் விற்பனையை கூட்டினாலும் விற்பனை விகிதத்தை விட செலவு விகிதம் கூடி இருந்தால் லாபத்தை பாதிக்கும்.

உதாரணமாக சென்ற வருடம் விற்பனையில் 80% செலவு ஆகி இருக்கிறது என்றால் விற்பனையில் 20% லாபமாக இருக்கும். அதே நிறுவனம் இந்த ஆண்டு விற்பனையை இரண்டு மடங்காத கூட்டி இருக்கிறது என்றால், லாபமும் இரண்டு மடங்காக கூடி இருக்க வேண்டும். கீழே இருக்கும் உதாரணத்தை பார்த்தால் இந்த விஷயத்தில் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும்.

Year 1
1. Sales 200
2. Operating Expenses 160
3. Operating Profit (1-2) 40

Year 2
1. Sales 400
2. Operating Expenses 350
3. Operating Profit (1-2) 50

மேலே இருக்கும் உதாரணத்தில், நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டில் லாபம் கூடி இருக்கிறது என்பது மேலோட்டமாக பார்க்கும் போது தெரியும். ஆனால் இந்த நிறுவனம் உன்ன்மையிலேயே லாபத்தை கூட்டி இருக்கிறதா? இந்த நிறுவனம் முதலாண்டு Rs.200 விற்பனை செய்து Rs.40 ஐ வருமானமாக அடைந்திருக்கிறது. அதாவது விற்பனையில் 20% லாபம் (40/200x100). இரண்டாம் ஆண்டு இந்த நிறுவனத்தின் விற்பனை Rs.400 ஆக உயர்ந்திருக்கிறது. இப்படி விற்பனை உயர்ந்திருப்பதால் அந்தன் லாபமும் கூட வேண்டும். லாபம் Rs.50 ஆக இருக்கிறது. அதாவது உயர்ந்திருக்கிறது - ஆனால் இந்த நிறுவனம் முதலாண்டை விட இரண்டாம் ஆண்டில் சரிவில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் அப்படி? முதலாம் ஆண்டில் விற்பனையில் 20% லாபமாக சம்பாதித்த நிறுவனம் இரண்டாம் ஆண்டில் அதே அளவு விகிதத்தில் Rs.80 லாபமாக சம்பாதித்திருக்க வேண்டும் (Rs.400 x 20% = Rs.80), ஆனால் Rs.50 மட்டுமே லாபம் சம்பதிதிருக்கிறது. ஏன் இடந்த வித்தியாசம்? செலவு அதிதமாகி இருக்கிறது. முதலாண்டில் Rs.200 க்கு Rs.160 செலவு என்றால் இரண்டாம் ஆண்டு விற்பனை இரண்டு மடங்கு ஆகும்போது செலவும் இரண்டு மடங்காகி Rs.320 தான் இருக்க வேண்டும், ஆனால் செலவு Rs.350 ஆக உயர்ந்திருக்கிறது. செலவில் Rs.30 கூடியதால் அந்த அளவு லாபம் குறைந்துவிட்டது. ஆக இரண்டாம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் செலவுகள் கூடி லாபத்தை குறைத்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிறுவனத்தால் செலவை கட்டுப்படுத்த முடியவில்லை, விற்பனையை மட்டும் கூட்டினால் போதாது, விற்கும் பணத்தை செலவுகளை கட்டுக்குள் வைத்து லாபமாக மாற்ற இந்த நிறுவனத்தால் முடியவில்லை என்பதால், இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் நம் முதலீடு எப்படி வளரும்?? ஆக லாப விகிதத்தை operating Profit ஐ முதலில் கவனிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் என்பது உதாரணத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியது போல், மூன்று முதல் ஐந்து ஆண்டு லாப நஷ்ட கணக்கை கவனிக்க வேண்டும்.

அடுத்து நாம் கவனிக்க வேண்டியது, வரிசை எண் 10 இல் இருக்கும் Extra-ordinary items. சில நிறுவனங்களில் லாப நஷ்ட கணக்கில் இது இருக்கும். முதலில் Extra-ordinary items என்றால் என்ன என்று பார்போம். நிறுவனத்தின் வழக்கமான செயல்பாட்டின் மூலம் சம்பாதிக்காத வேறு விதமான வருமானங்களை Other Income என்னும் வரிசை எண் 4 இல் சேர்க்கலாம். உதாரணமாக பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் தன்னிடம் இருக்கும் உபரி ரொக்க பணத்தை வங்கியில் Deposit செய்து அதன் மூலம் கிடைக்கும் வட்டி, Other Income இல் சேரும். ஆனால் ஒரு நிறுவனம் தன்னிடம் இருந்த ஒரு தொழிற்கூடத்தை அல்லது தன்னிடம் இருந்த தொழிலில் ஒரு பகுதியை விற்று அதன் மூலம் கிடைக்கும் லாபம் Extra-ordinary items ஆக கருதப்படும். வங்கியில் இருந்து கிடைக்கும் வட்டி வருடா வருடம் கிடைக்க கூடியது, ஆனால் பிற இரண்டும் அப்படி இல்லை. ஒரு முறை மட்டுமே நடக்கும் ஒரு நிகழ்ச்சி. இன்னொரு உதாரணம் நிறுவனம் தொழில் விஷயமாக வேறு யார் மேலாவது வழக்கு போட்டு அந்த வழக்கில் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்து அந்த தீர்ப்பின் மூலம் கிடைக்கும் நஷ்டஈடு Extra-ordinary items இல் வருமானமாக கருதப்படும். அதே போல் நிறுவனம் நஷ்டஈடு கொடுத்தால் அதுவும் Extra-ordinary items இல் செலவாக கருதப்படும். இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், Other Income வேறு Extra-ordinary items வேறு என்பது. Other Income என்பது நிறுவனம் செய்யும் தொழில் சார்ந்த இதர வருமானங்கள். Extra-ordinary items எதேச்சையான, வருடா வருடம் நடக்காத ஒரு விஷயத்தால் கிடைக்கும் லாபம் அல்லது நஷ்டம்.

Year 1
1. Sales 200
2. Operating Expenses 160
3. Operating Profit (1-2) 40
Extra-ordinary Income -
Net Profit 40

Year 2
1. Sales 400
2. Operating Expenses 420
3. Operating Profit (1-2) (20)
Extra-ordinary Income 120
Net Profit 100


இந்த உதாரணத்தில், நிகர லாபம் (Net Profit) இரண்டாம் ஆண்டில் நன்கு கூடி இருக்கிறது. நிகர லாபத்தை மட்டும் பார்த்தால் நிறுவனம் மிக நன்றாக செயல்பட்டு லாபம் சம்பாதிப்பது போல் தெரியும். விற்பனை முதலாம் ஆண்டை விட இரண்டாம் ஆண்டில் இரண்டு மடங்காக ஆகி இருக்கிறது, ஆனால் நிகர லாபம் (Net Profit) இரண்டு மடங்குக்கு மேல் இருக்கிறது, இது மிக நல்ல நிறுவனம் என்று முடிவு செய்யத்தோன்றும். முடிவு செய்யும் முன் கவனிக்க வேண்டியது Extra-ordinary items. இதில் Extra-Ordinary Income என்று ஒரு (line Item) Rs.120 இருக்கிறது. நிகர லாபம் Rs.100. இதிலிருந்து Extra-Ordinary Income ஆன Rs.120 ஐ கழித்தால் மிஞ்சுவது Rs.20 நஷ்டம்...!!! ஆக முதலாண்டை விட இரண்டாமாண்டு இந்த நிறுவனம் செயல்பாடு மோசமாகி, நஷ்டத்தில் இருக்கிறது, எனவே இந்த நிறுவன பங்கில் முதலீடு செய்வது சரி அல்ல என்று நாம் முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால் Extra-Ordinary items என்பது வருடா வருடம் கிடைக்கப்போதும் லாபம் அல்லவே. (Extra-Ordinary items இல் நஷ்டம் இருந்தாலும், அதை விலக்கி விட்டு அதன் பிறகே நிறுவனத்தின் செயல்பாடு பற்றி முடிவு செய்ய வேண்டும்)

இது மட்டுமல்ல, இன்னும் நிறைய விஷயங்கள் லாபநஷ்ட கணக்கில் பார்க்க வேண்டும். அவை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

அதற்கு முன் நிறுவனங்களில் லாபநஷ்ட கணக்கு மற்றும் நிதிநிலை அறிக்கை எங்கே கிடைக்கும்? எப்படி பார்ப்பது என்று யோசிப்பவர்கள் கீழே இருக்கும் வலைத்தளங்களில் நுழைந்தால் தேவையான விபரங்கள் அனைத்தும் கிடைக்கும்,
http://www.moneycontrol.com
http://economictimes.indiatimes.com
http://www.indiabulls.com
http://www.bseindia.com

Thursday, February 12, 2009

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 3

முந்தைய பதிவில் Demat பற்றி பார்த்தோம். பங்கு சந்தையில் பங்குகளை வாங்க விற்க Demat தேவை என்பதை பற்றி பார்த்தோம். இனி பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வது சம்மந்தமாக சில விஷயங்களை பார்ப்போம்.

பங்கு சந்தை என்றதுமே எல்லோருக்கும் அது ஒரு பணம் காய்க்கும் மரம் என்ற எண்ணமே வருகிறது. அது எவ்வளவு தூரம் உண்மை என்பது நாம் நமது பணத்தை பங்குச்சந்தையில் எப்படி கையாளப்போகிறோம் என்பதை பொறுத்துதான் முடிவாகும். பங்கு சந்தையில் கீழ்க்கண்ட மூன்று விதமாக சம்பாதிக்கலாம்.

1. நீண்ட கால முதலீடு
2. குறுகிய கால முதலீடு
3. தின வர்த்தகம்

1. நீண்ட கால முதலீடு (Long-term Investment) :
ஒரு நிறுவனத்தில் நாம் முதலீடு செய்கிறோம் என்றால், அந்த நிறுவனம் வளர வளர நம்முடைய முதலீடும் வளரும். நீண்ட கால முதலீட்டாளர்கள் இதைதான் செய்வார்கள். பணத்தை முதலீடு செய்துவிட்டு குறைந்தபட்சம் மூன்று வருடம் காத்திருப்பார்கள். மூன்று வருடம் என்பது நிர்ணயிக்கப்பட்ட காலம் இல்லை. அது மூன்று வருடமாக இருக்கலாம் அலல்து அதற்கு மேலும் இருக்கலாம். சிலர் பத்து வருடம் கூட காத்திருப்பார்கள். இந்த காலக்கட்டத்தில் அந்த முதலீடு நல்ல லாபத்தை தரும். உதாரணமாக இன்போசிஸ் நிறுவன பங்கில் 2002-ல் ஒரு பங்குக்கு 458 ரூபாய் முதலீடு செய்திருந்தால் 2007 இல் 2337 ரூபாய் கிடைத்திருக்கும் - யோசித்து பாருங்கள் நான்கு மடங்குக்கு மேல் வருமானம். இது தான் முதலீடு செய்வதில் இருக்கும் பயன். இப்படி வருடக்கணக்காக காத்திருக்க யாருக்கு பொறுமை இருக்கிறது என்று கேட்கிறீர்களா?? அப்படியானால் நீங்க கீழே உள்ள ஏதாவது ஒரு வழியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

2. குறுகிய கால முதலீடு (Short, Medium-term Investment) :
இந்த வகை முதலீட்டாளர்கள் பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றமாதிரி பங்குகளை வாங்கி விற்று லாபம் பார்பார்கள். இந்த குறுகிய காலம் என்பதற்கு எவ்வளவு காலம் என்று சொல்ல முடியாது. சில நேரம் ஒரு வருடம் இருக்கலாம், சில நேரம் ஆறு மாதம் இருக்கலாம், அவ்வளவு ஏன்? ஒரு வாரம் கூட இருக்கலாம். அதாவது பங்குகளை வாங்கி ஒரு வாரத்திற்குள்ளாக கூட விற்று விடுவார்கள்.

3. தின வர்த்தகம் (Day trading):
இந்த முறையில் தினமும் காலையில் பங்குகளை வாங்கி அன்று மாலை பங்கு சந்தை முடியும் முன் விற்று விடுவார்கள். இதில் காலையில் வாங்கத்தான் வேண்டும் என்பதில்லை, காலையில் விற்று விட்டு - நம்மிடம் பங்கு இல்லாமலேயே விற்றுவிட்டு - அன்றைய தினம் முடியும் முன் திரும்ப வாங்கி, வாங்குவதற்கும் விற்பதற்கும் உள்ள வித்தியாசத்தில் லாபம் பார்பார்கள். இது மிக மிக ரிஸ்க் ஆன ஒரு விஷயம். தின வர்த்தகத்தில் அதிக லாபம் பார்க்கலாம் என்று நினைக்கும் நாம் அதே அளவுக்கு நஷ்டமாகவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்கே ரிஸ்க் அதிகமோ அங்கே லாபம் (return) அதிகம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இப்படி மூன்று வகையில் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யலாம் என்று இருக்கும் போது எது நல்லது என்ற கேள்வி வரும். நீண்டகால அடிப்படையில் பங்குகளை வாங்குவதை முதலீடு என்று சொல்கிறோம். ஏனென்றல், அவர்கள் தன்னுடைய பணத்தை அந்த நிறுவனத்தின் பாங்கில் முதலீடு செய்திருக்கிறார் அல்லது அந்த நிறுவனம் செய்யும் தொழிலில் பங்கெடுக்கிறார் என்று பொருள், எந்த ஒரு தொழிலை செய்வதாக இருந்தாலும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்த தொழிலில் இருந்து கிடைக்கும் லாபத்தை நாமும் பார்க்க முடியும்.

நீண்டகால முதலீட்டை தவிர பிற இரண்டு வகையையும் வர்த்தகம் என்று சொல்கிறோம். ஆங்கிலத்தில் trading என்று சொல்கிறோம். இந்த வகையில் பங்கு சந்தையில் வர்த்தகம் செய்கிறவர்களின் ஒரே குறிக்கோள், விலை கூடியதும் இந்த பங்கை விற்று லாபம் பார்த்துவிட வேண்டும் என்பதுதான். இங்கே நாம் பங்கு வாங்கியிருக்கும் நிறுவனம் நல்லபடியாக தொழில் செய்யவேண்டும், அந்த நிறுவனம் லாபம் பார்க்க வேண்டும், அந்த லாபத்தின் மூலமாக நம்முடைய பங்கின் விலை கூட வேண்டும் போன்ற எதிர்பார்ப்புகள் எதுவுமே இல்லாமல், அப்போது இருக்கும் செய்தி மற்றும் சந்தை நிலவரத்தின் அடிப்படையில் லாபம் பார்க்கவேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள்.

முதலில் நீங்க என்ன செய்ய ஆசைபடுகிறீர்கள் என்பதை தெளிவாக நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். அதற்கேற்ற மாதிரி நம்முடைய திட்டமிடலும் இருக்க வேண்டும். நீங்கள் முதலீட்டாளராக விரும்புகிறீர்களா அல்லது வர்த்தகராக விரும்புகிறீர்களா என்று முடிவு செய்வதற்கு முன் நாம் சில அடிப்படை விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். தெரிந்துகொண்ட பிறகு நீங்களே முடிவு செய்யலாம்...!!

பங்கு சந்தையில் பணத்தை போடும் முன் சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம். ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குமுன் என்னென்ன கவனிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமான ஓன்று. ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் முன் அந்த நிறுவனத்தை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். எப்படி நிறுவனத்தை பற்றி தெரிந்துகொள்வது? இதற்குத்தான் செய்தித்தாள் மற்றும் பங்குச்சந்தை சம்மந்தப்பட்ட வலைத்தளங்களை பார்க்க வேண்டும். அந்த நிறுவனம் என்ன தொழிலில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக இன்போசிஸ் மென்பொருள் துறையில் இருக்கிறது என்பது போல், நாம் வாங்க நினைக்கும் நிறுவனத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அந்த தொழிலின் எதிர்கால வாய்ப்புக்களை பற்றி கொஞ்சமாவது தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, இன்றைய சூழ்நிலையில் மென்பொருள், ஏற்றுமதி சம்மந்தப்பட்ட தொழில் கொஞ்சம் பாதிப்புக்குள்ளாகும் என்று நமக்கு தெரியும். அதே மாதிரி, உள்கட்டமைப்பு, பவர் மற்றும் FMCG என்று சொல்லப்படும் நுகர்வோர் பொருட்களை தயாரிக்கும்/விற்கும் தொழில் அதிக பாதிப்புக்குள்ளகாது என்று சொல்லப்படுகிறது.

இப்படி நிறுவனம் செய்யும் தொழில் மற்றும் அது இருக்கும் துறையை பற்றி தெரிந்தபின், குறிப்பிட்ட நிறுவனம் எப்படி செயல் படுகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அந்த நிறுவனத்தின் நிதி விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். அதாவது அந்த நிறுவனத்தின் வருடாந்திர லாப நஷ்ட கணக்கு (Profit and Loss Account) மற்றும் நிதிநிலை அறிக்கை (Balance Sheet) பற்றி புரிந்துகொள்ள வேண்டும்.

லாப நஷ்ட கணக்கு மற்றும் நிதிநிலை அறிக்கையில் நாம் என்னென்ன கவனிக்க வேண்டும் என்பதை வரும் பதிவில் பார்ப்போம்.
Page copy protected against web site content infringement by Copyscape