You will make it....

You will make it....

Thursday, September 24, 2009

பங்கு வர்த்தகம் : Swing Trading - அறிமுகமும் வழிமுறைகளும் (பாகம் 2)

PLAN A TRADE, TRADE THE PLAN


சென்ற பதிவில் Swing Trading என்றால் என்ன என்று பார்த்தோம். இந்த பதிவில் வர்த்தக திட்டம் பற்றி பார்ப்போம். ஏனென்றால் திட்டத்துடன் செயல் படும் மனிதனை விட திட்டமில்லாமல் செயல்படும் மனிதனின் தவறுகள் அதிகமாக இருக்கும் (இது பங்கு வர்த்தகத்திற்கு மட்டுமல்ல அனைத்திற்கும் பொருந்தும்). திட்டமிடுதல் மட்டும் முக்கியமல்ல அந்த திட்டத்தின் படி கொஞ்சமும் தவறாமல் நடக்க வேண்டும். பங்கு வர்த்தகத்தில் ஒரு Famous Quote உண்டு. plan a Trade , Trade the plan . எப்படி வர்த்தகம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொள்ளுங்கள், அப்புறம் அந்த முடிவுப்படியே வர்த்தகம் செய்ய வேண்டும் - அதிலிருந்து கொஞ்சமும் விலகக்கூடாது.அந்த அளவு மன உறுதியை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இனி திட்டமிடுதல் பற்றி பாப்போம். நன்றாக கவனத்தில் கொள்ளுங்கள் வர்த்தகம் செய்வதற்கான பதிவில் நாம் இருக்கிறோம். வர்த்தகம் என்றால் ஒரு பங்கை வாங்கி 3 முதல் 5 நாட்களில் விற்பதற்கான வர்த்தக திட்டம். சில நேரங்களில் ஒரு நாளில் கூட விற்றுவிடும் சூழ்நிலை வரலாம். இந்த மிகமிக குறுகியகால வர்த்தகத்தை தான் Swing Trading என்கிறோம். அதனால் Swing Trading இல் Timing ரொம்ப முக்கியம். இதற்கு நாம் Trading Rules வரையறுத்துக்கொள்வது தவிர்க்க முடியாதது. கீழ்க்கண்ட Trading Rules or Plan, Swing Trading -கு அவசியம்.

1. லாப இலக்கு (Targeted Profit)
2. சொந்த பணத்தில் தான் வர்த்தகம் செய்ய வேண்டும்
3. குறைந்த அளவு பணத்தில் வர்த்தகத்தை ஆரம்பிக்க வேண்டும்
4. பங்கை வர்த்தகம் செய்யுங்கள் - காதல் கொள்ளாதீர்கள்
5. அடுத்த நாள் வர்த்தகத்துக்கு தினமும் பங்குகளை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்(Watchlist)
6. அடுத்தவர்களின் பரிந்துரைகளை கண்மூடித்தனமாக செயல்படுத்த வேண்டாம்
7. வர்த்தகத்துக்கு இடையே அவசர முடிவுகள் வேண்டாம்
8. லாபத்தை போல் நஷ்டத்தையும் ஏற்க பழகிக்கொள்ளுங்கள் (Stop Loss)
9. உறுதியான நம்பிக்கை இல்லை என்றால் வாங்காதீர்கள்
10.நீங்கள் செய்த வர்த்தகத்தை தினமும் குறித்துக்கொள்ளுங்கள் (Record Keeping)
11.நம்முடைய பணத்தை எப்படி நிர்வகிப்பது? (Managing your money)

இனி ஒவ்வொன்றாக கவனிப்போம்.

லாப இலக்கு (Targeted Profit)

பொதுவாக பங்குகளை வாங்கியவர்கள் சொல்லும் ஒரு வார்த்தை - நான் வாங்கிய பின் இந்த பங்கு 10% லாபத்தில் இருந்தது, ப்ச் விற்காமல் விடுட்டுட்டேன், இப்போ 20% நஷ்டத்தில் இருக்கிறது என்பார்கள். இதற்கு என்ன காரணம்? இதே மாதிரி அனுபவங்கள் எனக்கும் நிறைய இருந்திருக்கிறது. அன்று விற்றிருக்கலாமே என்று இன்று நினைத்தால் ஆகப்போவது ஒன்றுமில்லை. அதனால் நம்முடைய லாபத்திற்கு நாம் ஒரு இலக்கு நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். நாம் வாங்கிய பங்கு, நம்முடைய நிர்ணயிக்கப்பட்ட லாப இலக்கை அடைந்ததும் விற்றுவிட வேண்டும். இந்த பங்கு இன்னும் விலை கூடும் கூடும் என்று நினைத்து, விற்காமல் வைத்திருக்க கூடாது. ஒரு வேளை நாம் வைத்திருக்கும் பங்கு இன்னும் விலை கூடும் என்று நாம் உறுதியாக நம்பினால், பாதி பங்குகளை நம்முடைய இலக்கில் விற்று விட்டு, மீதி இருப்பவற்றை அதிக லாபத்திற்காக வைத்திருக்கலாம். சில நேரம் நாம் விற்ற பங்குகள் விலை கூடலாம், அதற்காக வருத்தப்பட கூடாது. அதே பங்கு நாம் விற்றபின் விலை குறைந்தால் நாம் சந்தோஷ பாடுவோமே, அதைப்போல் விற்றபின் விலை கூடி விட்டதே என்று வருத்தப்பட கூடாது. நமக்கு நம்முடைய லாபம் வந்து விட்டது. போதும் என்று மன நிறைவாக அடுத்த வர்த்தகத்தை கவனிக்க வேண்டும்.

என் நண்பர் ஒருவர் வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். அவரிடம் கேட்டேன், எப்படி லாபத்தை புக் பண்ணுகிறீர்கள் என்று. அதெல்லாம் பெரிய விஷயம் இல்லை, ஒரு பங்குக்கு ஐமபது ரூபாய் லாபம் வந்ததும் விற்று விடுவேன் என்றார். அவர் வாங்கும் பங்குகள் அனேகமாக அதிக விலை உள்ள பங்குகளாக இருக்கும், அவர் வர்த்தகத்திற்கு ஒதுக்கி இருக்கும் பணமும் அதிகம். அதனால் ஐமபது ருபாய் என்றால் ஒரு வர்த்தகத்தில் 5000 முதல் 10000 ரூபாய் வரை லாபம் பார்ப்பார். ஆக அவருக்கு ஒரு இலக்கு - ஐமபது ரூபாய் கூடினால் போதும் என்பது - அந்த ஐம்பது ருபாய் லாபம் ஒரு நாளில் வரலாம் அல்லது ஒரு வாரம் ஆகலாம். இப்படி ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் ஒரு இலக்கு வைத்திருப்பார்கள். லாபத்தை ரூபாயில் நிர்ணயிப்பதை விட, சதவீதத்தில் நிர்ணயித்துக்கொள்ளலாம்.

நாம் Swing Trading செய்யும் போது, குறைந்த பட்ச லாபமாக ஒரு நாளைக்கு 2% அல்லது வாரத்திற்கு 5 முதல் 10 சதவீத லாபம் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 2% என்று இலக்கு நிர்ணயித்து கொண்டபின், சில நேரம் ஒரே நாளில் 5% கூடலாம், அல்லது நாம் 2% லாபத்தில் விற்ற பங்கு அடுத்த நாள் மேலும் 2% கூடலாம். ஒரு பங்கை விற்றுவிட்ட பிறகு, அது கூடுகிறதே என்று கவலைப்படுவதை விட, விற்று வந்த பணத்தில் விற்ற அன்றே அடுத்த பங்கில் முதலீடு செய்து விட வேண்டும். சில நேரங்களில் வாங்கிய அன்றே 2% லாபம் கிடைத்து விடும், விற்று விட்டு அடுத்த பங்கை வாங்குவது நல்லது அல்லது பாதியை விற்றுவிட்டு, மீதியை அடுத்த நாளுக்கு வைத்துக்கொள்ளலாம். சில பங்குகள் நாம் விற்ற பின் கூடிக்கொண்டிருந்தால், அந்த பங்கு இன்னும் கூடும் என்று நாம் உறுதியாக நம்பினால், அதே பங்கை மீண்டும் வாங்கி விற்பதில் தவறு இல்லை. வாங்குவதற்கு முன், விலை உயர்வதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. அதை தெரிந்து கொள்ள இன்னும் நிறைய விஷயங்களை நாம் பார்க்க வேண்டும், தொடர்ந்து பதிவை பாருங்கள்.

ஒவ்வொருவரும் ஒரே பங்கில் நான் 50% லாபம் பார்த்தேன் என்று சொல்கிறார்களே, இங்கே நாம் 2% பற்றி பேசுகிறோமே, இதெல்லாம் ஒரு லாபமா என்ற எண்ணம் சிலருக்கு வரலாம். பலதுளி பெருவெள்ளம் என்பது போல் ஒரு நாளைக்கு 2% என்றால், சராசரியாக ஒரு மாதத்திற்கு இருபது நாட்கள் பங்குச்சந்தை உண்டு. திட்டமிட்டபடியே லாபமீட்ட முடிந்தால் மாதத்திற்கு 40% லாபம் கிடைக்கும். நாம் செய்யும் அத்தனை வர்த்தகமும் லாபத்தில் முடியும் என்று சொல்ல முடியாது. சில பங்குகளை ஒரு சதவீத லாபத்தில் விற்க வேண்டியிருக்கலாம், சில பங்குகளில் ஒரே நாளில் 5% லாபம் கிடைக்கலாம், சில பங்குகளை நஷ்டத்தில் விற்க வேண்டியிருக்கலாம். அதனால் சராசரியாக பத்து வர்த்தகத்தில், ஏழு லாபத்தில் முடிந்தால் கூட, மாதத்தில் 20 நாட்கள் பங்குச்சந்தை உண்டு என்பதால், சராசரியாக மாதத்திற்கு 20% முதல் 25% லாபம் கிடைக்கும். மாதத்திற்கு 20% என்பது மிகப்பெரிய லாபம். நம்புங்கள் மாதத்திற்கு 20% என்பது என்னுடைய மிக குறைந்த மதிப்பீடு.

அதனால் திட்டமிடுதலில் முதல் விஷயமாக லாப இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள். இந்த லாப இலக்கு என்பது Swing Trading -இல் மட்டுமில்லாமல் அனைத்து வர்த்தகத்திலும் அவசியமானது. மற்ற விஷயங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

3 comments:

INR said...

Thanks sir..

mohan said...

வணக்கம் அய்யா

நான் உங்களின் பதிப்பை தொர்ந்து படித்து வருக்கிறன் என்னக்கு மிக மிக பயன் தரும் வகையில் அமைந்துள்ளது அதும் நம் தமிழ் மொழில் என்பதால் எளிதாக புரியும் படி அமைந்து நன்றி என்னக்கு மேலும் மேலும் புதிய பகுதி தெரிந்து கொள்ள ஆவல் உடன் இருக்குகிற ன்

நான் பாகம் 1 முதல் 13 வரை ( பேஜ் நம்பர் 1 முதல் 92 ) படித்து உள்ளன்

என்னக்கு மேலும் கிழ் உள்ள சந்தகத்தை போக்குமாறு

1. பங்கு சந்தை போக்கை எப்படி அறிவது ??

2.அந்த நேரத்தில் எந்த பங்கை வாங்கு அல்லது விற்ப்பது ??

3.மேலும் புதிய பகுதி பகிருமாறு கேட்டு கொள்கிறன் ..

தங்கள் பதிவை எதிர்நோக்கும்

ந.மோகன்

mohan said...

வணக்கம் அய்யா

நான் உங்களின் பதிப்பை தொர்ந்து படித்து வருக்கிறன் என்னக்கு மிக மிக பயன் தரும் வகையில் அமைந்துள்ளது அதும் நம் தமிழ் மொழில் என்பதால் எளிதாக புரியும் படி அமைந்து நன்றி என்னக்கு மேலும் மேலும் புதிய பகுதி தெரிந்து கொள்ள ஆவல் உடன் இருக்குகிற ன்

நான் பாகம் 1 முதல் 13 வரை ( பேஜ் நம்பர் 1 முதல் 92 ) படித்து உள்ளன்

என்னக்கு மேலும் கிழ் உள்ள சந்தகத்தை போக்குமாறு

1. பங்கு சந்தை போக்கை எப்படி அறிவது ??

2.அந்த நேரத்தில் எந்த பங்கை வாங்கு அல்லது விற்ப்பது ??

3.மேலும் புதிய பகுதி பகிருமாறு கேட்டு கொள்கிறன் ..

தங்கள் பதிவை எதிர்நோக்கும்

ந.மோகன்

Page copy protected against web site content infringement by Copyscape