You will make it....

You will make it....

Wednesday, January 6, 2010

பங்கு வர்த்தகம் : Swing Trading - அறிமுகமும் வழிமுறைகளும் (பாகம் 4)

சென்ற பதிவில் திட்டமிடுதல் பற்றி பார்த்தோம், மேலும் பங்கு வர்த்தகத்தில் Volume பற்றியும் பார்த்தோம். இந்த பதிவில் Volume பற்றி இன்னும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல், ஒரு பங்கு விலை கூடும் முன் அதனுடைய Volume கூடும். Volume என்றால் தினசரி சந்தையில் வர்த்தகமாகும் ஒரு பங்கின் மொத்த எண்ணிக்கை. பங்கு வர்த்தகத்தில் Volume ரொம்ப முக்கியமானது. ஏனென்றால் நல்ல Volume -இல் வர்த்தகமாகும் பங்குகளை வாங்கினால் லாபம் இருக்கும் போது விற்று காசாக்குவது எளிதாக இருக்கும். குறைந்த எண்ணிக்கையில் வர்த்தகமாகும் பங்குகளை வாங்கினோம் என்றால் அதை விற்பது கஷ்டமாக இருக்கும். எந்த ஒரு பங்குமே வர்த்தகமாகும் போது வாங்குபவர் ஒரு விலைக்கு கேட்பார் (Bid Price ), விற்பவர் அதைவிட கொஞ்சம் விலை கூட்டி கேட்பார் (Offer Price ). இந்த மாதிரி சூழ்நிலையில், சிலர் பங்குகளை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் விற்பவர் கேட்கும் விலைக்கு ஆர்டர் செய்து பங்குகளை வாங்கிக்கொள்ளுவார் அல்லது ஒருவர் கண்டிப்பாக பங்குகளை விற்றே ஆக வேண்டும் என்று முடிவு செய்தார் என்றால், வாங்குபவர் கேட்கும் விலைக்கு ஆர்டர் அனுப்பி தன்னிடம் இருக்கும் பங்குகளை விற்று விடுவார். ஆக வாங்குபவருக்கும் விற்பவருக்கும் ஒருவித Balance வரும்போது தான் வர்த்தகம் நடக்கும். ஒரு பங்கு Uptrend -இல் இருந்தால் விற்பவர் சொல்லும் விலைக்கு வாங்கிக்கொள்ளுவார்கள், ஏனென்றால் விலை இன்னும் கூடும் என்ற நம்பிக்கையில், கொஞ்சம் அதிகம் கொடுத்து வாங்கினாலும் பரவாயில்லை என்ற எண்ணம் வாங்குபவருக்கு இருக்கும், அதனால் கிடைக்கும் விலைக்கு வாங்கிக்கொள்ளுவார்கள். ஆக பங்கு உயரும் நிலையில் இருக்கும்போது விற்பவர் விலை நிர்ணயிக்கிறார். இதுவே ஒரு பங்கு Down Trend -இல் இருந்தால் நேர்மாறாக இருக்கும். வாங்குபவர்கள் அடிமாட்டு விலைக்கு பங்குகளை கேட்பார்கள் - அதாவது Down Trend -இல் இருக்கும் போது வாங்குபவர் கை ஓங்கி இருக்கும். சரி இதற்கும் Volume -கும் என்ன சம்மந்தம் என்று கேட்க தோன்றும். நல்ல எண்ணிக்கையில் வர்த்தகம் ஆகும் பங்குகளை விற்பவரும் சரி வாங்குபவரும் சரி அதிக வித்தியாசத்தில் கேட்க முடியாது, ஏனென்றால் அதிக எண்ணிக்கையில் பங்கு வர்த்தகமாவதால், விற்பவர் அதிக விலைக்கு Offer Price கேட்கிறார் என்றால், வேறொரு விற்கும் நபர் அதைவிட கொஞ்சம் குறைவில் Offer கொடுப்பார். அதனால் Bid -கும் Offer -கும் அதிக வித்தியாசம் அதிகம் இருக்காது, வர்த்தகம் எளிதாக இருக்கும். எளிது என்றால் ஒரு குறிப்பிட்ட விலையில் விற்று விடுவது எளிதாக இருக்கும். உதாரணமாக ஒரு பங்கு நூறு ரூபாய்க்கு வர்த்தகமாகி இருக்கிறது என்றால், அதிக Volume இல்லாத பங்குகளின் அடுத்த பிட் தொண்ணூற்று ஐந்து ரூபாயா இருக்கலாம் Offer நூற்றி மூன்று ரூபாயாக இருக்கலாம். இந்த நிலையில் நம்மிடம் பங்குகள் இருக்கிறது என்றால் நாம் ஏற்கனவே வர்த்தகமாகி இருக்கும் நூறு ரூபாய்க்கு நம்முடைய பங்கை விற்பது மிக கடினமான காரியமாக இருக்கலாம் அல்லது சில நேரம் வேறு வழி இல்லாமல் தொண்ணூற்று ஐந்து ரூபாய்க்கே விற்க வேண்டிய சூழ்நிலை வரலாம். இதுவே அதிக எண்ணிக்கையில் வர்த்தகம் ஆகும் பங்குகள் என்றால் ஏற்கனவே வர்த்தகமான விலையை விட ஐந்து அல்லது பத்து பைசா வித்தியாசத்தில் அடுத்த வர்த்தகம் செய்துவிட முடியும். அதனால் நிறைய வர்த்தகம் ஆகும் பங்குகளில் வர்த்தகம் செய்வது நல்லது. எளிதாக வர்த்தகம் செய்ய முடியும். மேலும் குறைந்த எண்ணிக்கையில் வர்த்தகமாகும் பங்கை வாங்கவோ விற்கவோ ஆர்டர் செய்துவிட்டு அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இதனால் நாம் வேறு எந்த பங்கிலும் கவனம் செலுத்த முடியாமல் போவது மட்டுமல்லாமல் அதே பங்கை நல்லை விலைக்கு விற்கவோ வாங்கவோ முடியாமல் போகலாம். பங்குசந்தையில் வர்த்தகம் செய்யும் போது Time is Money என்று சொல்லுவது போல், ஒவ்வொரு நிமிடமும் முக்கியம், கொஞ்சம் கவனிக்காமல் இருந்தால் பங்கின் விலையில் பெரிய மாற்றங்கள் வர வாய்ப்பு உண்டு, அது நமக்கு சாதகமாக இருந்தால் நல்லது, பாதகமானால் நஷ்டம் அதிகமாக இருக்கும். அதனால் எப்போது பங்கை வாங்கினாலும் விற்றாலும் Limit order -இல் தான் வர்த்தகம் செய்ய வேண்டும். Limit order என்றல், நாம் ஒரு பங்கை வாங்கும் போது நாம் கேட்கும் விலையை குறிப்பிட்டு order செய்ய வேண்டும். இப்படி Limit Order இல்லை என்றால், நாம் பங்குகளை வாங்கும் போது அதிக Bid Price என்ன விலையில் இருக்கிறதோ அந்த விலையில் நமக்கு பங்கு கிடைக்கும், இதுவே Limit Order இல்லாமல் விற்கிறோம் என்றால் இருப்பதிலேயே மிக குறைந்த Bid Price இல் தான் நமக்கு விற்பனை ஆகும். எனவே Limit Order என்பது முக்கியம். நாம் விலை குறிப்பிடாமல் செய்யும் Order -ஐ Market Order என்று சொல்கிறோம்.

இது மட்டுமில்லாமல், அதிக எண்ணிக்கையில் வர்த்தகம் ஆகாத பங்குகளில் உள்ள இன்னொரு Risk என்னவென்றால், திடீரென பங்கின் விலை குறைந்தால் (உதாரணம்: துபாய் பொருளாதார சிக்கலில் இருக்கிறது என்ற செய்து வந்த வெள்ளிக்கிழமை, பங்குச்சந்தை தலை கீழாக விழுந்தது நினைவிருக்கலாம்) நம்மிடம் இருக்கும் பங்குகளை நாம் நினைக்கும் விலைக்கு விற்க முடியாது, அதனால் நஷ்டத்தை குறைக்க கிடைக்கும் விலையில் விற்க வேண்டிய சூழ்நிலை வரும் - நஷ்டம் அதிகமாக இருக்கும். ஆக ஒரு நாளைக்கு எத்தனை பங்கு விற்பனை ஆகிறது (Volume ) என்னும் விஷயம் எவ்வளவு முக்கியம் என்று மேலே கூறிய காரணங்கள் மூலம் நமக்கு தெரிய வருகிறது. இனி Volume எப்படி விலை உயர்வை அல்லது விலை குறைவதை நமக்கு உணர்த்தும் என்பதை இனி பார்ப்போம்.

பொதுவாக ஒரு பங்கு விலை கூடும் என்ற எதிர்பார்ப்பு வந்ததுமே அனைவரும் அந்த பங்கை வாங்க ஆர்வம் காட்டுவார்கள். இதனால் பங்கு சந்தையில் வாங்குபவர்களின் எண்ணிக்கையும், வாங்குவதற்காக கேட்கப்படும் பங்குகளின் எண்ணிக்கையும் (Bid Quantity) கூடும். அதாவது சந்தையில் குறிப்பிட்ட அந்த பங்கின் Demand கூடும். எந்த ஒரு பொருளுக்குமே Demand கூடினால், விற்பவர் விலையை கூட்ட ஆரம்பிப்பார் அதனால் அந்த பொருளின் விலை கண்டிப்பாக உயரும் - இது பங்கு சந்திக்கும் பொருந்தும், காய்கறி சந்திக்கும் பொருந்தும். பங்கு சந்தை-ஐ பொறுத்த வரை, முதலில் வர்த்தகமாகும் பங்குகளின் எண்ணிக்கை கூடும் போது விலை கொஞ்சம் உயர ஆரம்பிக்கும், அடுத்து தொடர்ந்து வாங்குபவர்களின் ஆர்வம் கூடுவதால் விற்பவர் கையில் சந்தையின் பிடி இருக்கும் - அதாவது விலையை கூட்டுவார்கள், விலை கூடினாலும், அந்த பங்கின் மேல் இருக்கும் ஆர்வத்தால், வாங்குபவர்களும் ஓரளவு அதிக விலைக்கே வாங்குவார்கள், இதனால் தொடர்ந்து பங்கின் விலை மூன்று முதல் ஐந்து நாட்கள் குறைந்த பட்சமாக கூடும். நாம் இந்த சூழ்நிலையை கவனிக்க வேண்டும், கூட ஆரம்பிக்கும் போது வாங்கி, ஓரளவு லாபம் வந்ததும் விற்றுவிட்டு வெளியேறி விடவேண்டும். இதற்கு நாம் விற்பனை இலக்கு வைத்திருக்க வேண்டும். அது வாங்கிய விலையில் இருந்து 5 % ஆக இருக்கலாம், அல்லது குறிப்பிட்ட விலை உயர்வாக இருக்கலாம், எப்படி இருந்தாலும், இலக்கு வைத்து வர்த்தகம் பண்ண வேண்டும். இலக்கை எட்டியது விற்றுவிட வேண்டும், இப்படி செய்தால் மட்டுமே வர்த்தகத்தில் லாபம் பார்க்க முடியும். இப்படி செய்யாமல் விலை கூடுகிறது என்று வைத்துக்கொண்டிருந்தால், விலை கூடும் போதும் நாம் பார்த்துக்கொண்டே இருப்போம், அதே போல் விலை அடுத்து வரும் நாட்களில் கீழே வரும்போதும் பார்த்துக்கொண்டே இருப்போம். இப்படி பார்துக்கொண்டிருக்கவா வர்த்தகம் செய்கிறோம்? பங்குகளை வாங்குவது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் வாங்கிய பங்குகளை சரியான நேரத்தில் விற்பது. நிறைய பேர் வாங்கும்போது காட்டும் அக்கறையை விற்கும்போது காட்டுவதில்லை. அதனால் லாபம் என்பது கைக்கு வராமல் போகிறது.

இந்த பதிவில் Volume பற்றி ஓரளவு பார்த்திருக்கிறோம், Volume சம்மந்தமான முக்கியமான விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. அவற்றை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

பின் குறிப்பு : சென்ற பதிவில் நாம் குறிப்பிட்டிருந்த Jaiprakash Hydropower பங்கின் விலை இப்போது எவ்வளவு என்று கவனித்தீர்களா????

14 comments:

- இரவீ - said...

Thanks Boss.

Anonymous said...

தங்கள் கட்டுரைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது . தொடர்ந்து இது போன்ற பங்குச்சந்தை பகுப்பு ஆய்வுகளை எழுதி என்னை போன்ற துடுப்பு இல்லாத படகுகளும் பங்குச்சந்தை என்ற கடலில் இருந்து மீன்களையும் பிடித்து மேலும் பத்திரமாக கரையும் சேர உதவுங்கள் .
நட்புடன் மோகன் இராமசாமி

Kalyan said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு இரவீ & மோகன் இராமசாமி அவர்களே..

toypillai said...

ippothuthan intha saitai parththen.
arulkoornthu thangal paniyai seythu engalai pontravarkalucku melum pangu patriya arivu valara udhavukheerkhal entru nambikaiyudan
vadivel subbaiyan
toypillai@gmail.com

Anonymous said...

தங்களின் அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் .
நட்புடன் மோகன் இராமசாமி

manohar said...

very intersting very useful article thankyou sir. please continue this article

Unknown said...

please continue this article thankyou sir

Kalyan said...

பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. பணி நிமித்தமாக கொஞ்சம் தாமதமாகி விட்டது. விரைவில் அடுத்த பகுதி எழுதுகிறேன். தொடர்ந்து எழுத வேண்டும் என்ற ஆர்வமிருக்கிறது, அதனால் தொடர் கண்டிப்பாக தொடரும்.

CM ரகு said...

very very superb work....
very much useful to begginners...
impressed upon the content which is in simple (also in tamil) language..
thanks a lot...
pls continue..
ungal padhigalai ethirparthu vanthu,
emaatrathudan thirumbugiraen....

Raghu

Rosario maria joseph said...

great work dude...keep it up.

Anonymous said...

sir Im new to pangusanthai pangusanthai patriya ungaloda ov voru vilakangalum excellent thayavu seithu ongaldo adutha pathiva poduga sir athanai avalodu ethir parkiren

Unknown said...

தங்களின் அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் .
MANOHAR

Anonymous said...

...

தங்களின் அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்

kannan Seetha Raman said...

dear sir

usefull class.

Page copy protected against web site content infringement by Copyscape